Monday, January 15, 2018

.. போகி... மகாபோகி


Image result for போகி
காடுகள் எரிகிறது
காடுகளை எரியூட்டுகிறாய்.
முல்லை நிலத்தை மருதமாக்கும் போட்டி
மருத நிலத்தின் கோட்டைக்கதவுகள் திறக்கின்றன
கரிசூழ்ந்த மங்கலத்தின் வாசலில்
மீன் கொடி பறக்கிறது.
தாமிரபரணியை மணந்த நடராஜன்
சேரன் மகாதேவி சிறை எடுக்கிறான்.
முல்லை நிலத்தின் ஆடுகள்
திசைதெரியாமல் சிதறி ஓடுகின்றன.
கிருஷ்ணன் வெண்ணெயைத் திருடுவதில்
புதிது புதிதாக திட்டங்கள் தீட்டுகிறான்.
உன் மருதநிலத்தின் வயல் வெளிகள்
என் புல்வெளியின் வர்ணத்தை திருடிக்கொள்கின்றன.
காடுகள் எரிகின்றன
போகி போகி போகி..
காடுகளை எரியூட்டுகிறாய்
வெற்றியின் முரசு..அதிரும் ஓசையில்
விழித்துக் கொள்கிறது குன்றுகள்.
வள்ளிமகள் குறி சொல்ல வருகிறாள்.
நல்ல காலம் பொறக்குது
நல்ல காலம் பொறக்குது
பால் பொங்குது
நல்ல காலம் பொறக்குது..
வாழையும் கரும்பும் நெல்லும் கிழங்குகளும்
அவள் மடியை நிறைக்கின்றன.
போகி போகி போகி..
பறை முழக்கம்
எரிக்கிறாய் போகி
பறை முழக்கம்
எரியூட்டுகிறாய் போகி
பறை முழக்கம்
எரிகிறாய். போகி
பறை முழக்கம்.
குன்றுகள் சிலைகளாக மாறுகின்றன.
கோவில்களாக விரிகின்றன.
கல்வெட்டுகளாக தொடர்கின்றன
மகாபோகி.. போகி.

2 comments: