Monday, January 8, 2018

சுஸ்மாஜியின் லாஜிக்

Image result for susma vs  sasitharur
ஐநாவில் இந்தி மொழியை அதிகாரப் பூர்வ மொழியாகக்
 கொண்டுவருவதில் 40 கோடி என்ன,
400 கோடி ஆனாலும் சரி, 
என்று ரொம்பவும் வீராப்பாகவே நாடாளுமன்ற அவையில் 
பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ்
இந்தி இந்தியாவின் ஆட்சிமொழியா தேசிய மொழியா
 அலுவல்மொழியா என்ற கேள்விக்கெல்லாம் 
பதில் சொல்லாவிட்டால் பரவாயில்லை.
நாளைய இந்தியாவில் இந்தி தெரியாத ஒருவர் 
இந்தியாவின் பிரதமராகவோஅல்லது
 வெளியுறவுத்துறை அமைச்சராகவோ வந்தால்
 அவருக்கு எதற்கு ஐநாவில் இந்தி மொழி என்ற 
சசிதரூர் கேள்விக்கு சுஸ்மாஜி அவர்கள் பதில்
சொல்லாவிட்டாலும் பரவாயில்லை
( அப்படி எல்லாம் இனிமே எவனும் வந்திட முடியாது
 என்று தெனவட்டா நினைச்சிருப்பாரோ..!)
மோதிஜி அமெரிக்கா போயிருந்தப் போது அங்கிருக்கும்
 இந்தியர்களிடம் இந்தியில் தான் பேசினாராம்.. 
அப்படீனு ஒரு பதில் சொன்னாங்க பாருங்க...
அப்படியே நாடாளுமன்றம் வாயடைத்துப் போயி..
வயிறு வீங்கி .. வெடிக்கிறமாதிரி ஆயிடுச்சி..
அம்மா தாயே.. சுஸ்மாஜி.. 
மோதிஜீ அவர் தாய்மொழியான குஜராத்தியில்
பேசியிருக்கலாம்.. குஜராத்திக்காரர்கள் 
அமெரிக்காவில் நிறைய இருக்கிறார்கள்.
அப்போ ஐநாவில் குஜராத்தியைக் கொண்டுவந்தா என்ன?

உலக நாடுகளில் 162 நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
அப்படியானால் ஐநாவில் தமிழ்மொழி 
அதிகாரப்பூர்வ மொழியாகக் கொண்டுவரலாமேனு
 நான் சொல்ல வருவது 
உங்க லாஜிக் படி சரியா இருக்குமேனு தான்!

இதை எல்லாம் பேசுவதற்கோ எழுதுவதற்கோ
 எங்க அரசியலில் இப்போதைக்கு இடமில்லை. 
அதுதான் நீங்க கொடுத்த ஆன்மீக அரசியல்
 பேதி மாத்திரையில் எல்லாருக்கும் வாந்திப்பேதி வந்து.

1 comment:

  1. கொஞ்சநாள் தானே பேசிவிட்டுப் போகட்டும்.. எலக்சனுக்குப் பிறகு என்ன நடக்கும் என்று தெரியும்தானே?

    ReplyDelete