Thursday, June 15, 2017

மாநகரத்தின் பொறுமை



mumbai-potloes759.jpg (759×422)

குண்டும் குழியுமான வாழ்க்கை.
வாழ்க்கை மேடு பள்ளங்கள் கொண்டது
என்ற வாழ்க்கையின் ஆகச்சிறந்த தத்துவத்தை
அம்ச்சி மும்பை பெருநகரம் நாங்கள் மறந்துவிடாமல் இருக்க
 ஒவ்வொரு மழைக்காலத்திலும் தத்துவமாக
குடை விரித்து கற்பித்துக் கொண்டிருக்கிறது.
நானும் மழைக்கோட்டு மாட்டிக்கொண்டு சீருடை அணிந்து
 சிறுவர் பள்ளிக்குப் போன நாள் முதல் இன்று வரை…
இதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
எத்தனையோ மாற்றங்களைக் கண்டுவிட்டேன்.
ஆனால் இந்த குண்டும் குழியும் மாறவே இல்லை.
அவ்வளவு சிறந்த சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கிறது இம்மாநகரம். !!

கோடை வெயிலில் நடுரோட்டைத் தோண்டுவார்கள். 
மின்சாரவாரியம், தண்ணீர் வாரியம், தொலைபேசி வாரியம்,’
 எரிவாயு வாரியம்… இப்படியாக ஒருவர் மாற்றி ஒருவர் 
ரோட்டைத் தோண்டுவதும் மூடுவதுமாக இருப்பார்கள்.
யார் எதற்கு தோண்டுகிறார்கள் என்பது எவருக்கும் தெரியாது.
இதற்கெல்லாம் மும்பை மக்கள் பழகிவிட்டார்கள்!
மழைக்காலம் வரும் முன் பத்திரிகைகள் தொலைக்காட்சிகள்
 ஊடகங்கள் எல்லாம் போட்டிப் போட்டுக் கொண்டு
 போட்டோ போட்டு மும்பை சாலைகளின் அவலத்தைப்
 பற்றி தீவிரமாக பேசுவார்கள் பேசுவார்கள் பேசிக்கொண்டே
இருப்பார்கள். அவர்கள் பேசுவதைப் பார்த்தால்
நம்ம டிவி ஸ்கீரினே சூடேறி இருக்கும்..!
இத்தனைக்கும் இந்த மும்பை மாநகரம்
 இந்தியாவின் வணிகத்தலைநகரம்.
இந்த மும்பை மாநகரத்தின் வருமானம்
 இந்தியாவின் சில மாநிலங்க்களின் மொத்த வருமானத்தை விட அதிகம்.
 மும்பை மாநகரத்தின் பட்ஜெட் மட்டுமே
 இந்தியாவின் 9 மாநிலங்களின் பட்ட்ஜெட்டை விட அதிகமானது!
வருமானவரி, சுங்கவரியின் 50% மும்பை. மாநகரம் கொடுக்கிறது. 
மத்திய அரசுக்கு 40,000 கோடி வரியாக செலுத்துகிறது.
இப்படியாகபபட்ட வருமானங்களைக் கொட்டித்தரும் 
பணக்கார மும்பை மாநகரத்தின் சாலைகள்
என்பதையும் சேர்த்து வாசிக்க வேண்டும்.
இந்த இலட்சணத்தில் இன்னொரு புதுப்பிரச்சனை
 அண்மைக்காலங்களில்.
உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்திற்கு இரண்டு பக்கமும்னு
 சொல்ற மாதிரிதான் இதுவும். 
மும்பை மாநகராட்சி சிவசேனா கையிலும்
மராட்டிய மாநிலம் பிஜேபி கையிலும்.. 
அதாவது அத்தொகுதி சட்டசபை உறுப்பினர் 
பிஜேபிக்காரராக இருப்பார்.. 
கவுன்சிலர் சிவசேனாக்காரராக இருப்பார்.
என்னவோ .. இதற்கெல்லாம் நாங்கள் பழகிவிட்டோம்
பொறுமையாக இவைகளைக் கடந்து செல்கிறோம்.
எங்கள் மும்பைக்கருக்கு கோபமே வராதா என்று
நீங்கள் கேட்கக்கூடாது! வரும்..
கிரிக்கெட்டில் இந்தியா சரியாக விளையாடவில்லை என்றால்
மட்டும் எங்களுக்கு ரொம்ப ரொம்ப கோவம் வரும். !!

2 comments:

  1. இதற்காகவாது கோபம் வருகிறதே பெருமைதான் போங்க..
    த.ம.1

    ReplyDelete
  2. நான் சில வருடங்களுக்கு முன்பு
    மும்பை வந்திருந்தபோது
    அருகில் இருந்த ஊருக்கு உறவினரைப்
    பார்க்க இரெயிலில் போகவேண்டி இருந்தது

    அப்போது பட்ட பாடு
    கூட்டம்தான் இரயிலில் ஏற்றிவிட்டது
    கூட்டம்தான் இறக்கிவிட்டது

    வித்தியாசமான ஊர்தான்
    நீங்கள் ஆதங்கத்தினைப்
    பதிவு செய்த விதமும்
    முடித்த விதமும் மிக மிக அருமை

    ReplyDelete