Friday, June 16, 2017

காந்தியின் மனம்

காந்தியின் மனம்..
THE MIND OF MAHATMA GANDHI புத்தக வாசிப்பு அனுபவத்தில்..
naj754.jpg (354×550)
நமக்கெல்லாம் கனவுகள் விடிவதற்குள் முடிந்துவிடுகின்றன.
சிலருக்கு கனவுகளின் மயக்கம் அன்றைய பொழுதில்
ஏதோ ஒரு வகையில் நீடிக்கிறது. இதில் கவிஞர்களின்
 கனவுலகம் அலாதியானது. கனவுக்கும் நிஜத்திற்கும் நடுவில்
 கவிஞன் ஊசலாடுகிறான்.
அவன் மொழியுலகம் அதனால் தான் வித்தியாசப்படுகிறது.
கனவுகளை நோக்கி ய பயணத்தில் சமூகமும் 
சமூகவிலங்காக அவன் பெறும் அனுபவமும்
 அவன் மொழியை மொழியின் பொருளை ஆழப்படுத்துகின்றன.
 அவன் என்பது அவனாக மட்டுமின்றி அங்கே சமூகமும்
 அவனிடமிருந்து தன்னைப் பிரதி எடுத்துக்கொள்கிறது.
அதனால் தான் எப்போதுமே வாசகன் அவன் எழுத்துகளில்எங்கேயோ
 ஒரு புள்ளியில் தன்னையும் அடையாளம் காணுகிறான்.
இதில் ஒரே புள்ளிக்கு பல்வேறு அடையாளங்களும்
 ஒவ்வொருவருக்குமான வரிகள் வெவ்வேறாகவும் அமைந்து 
அவன் எழுத்தின் அடிமுதல் முடிவரை
தேடிச்செல்லும் பயணத்தை உருவாக்கி விடுகின்றன.
ஆனால் அவன் 24X7 கனவுகளுடன் வாழ்வதில்லை! 
இன்னும் சொல்லப்போனால்
அவன் 24X7 கவிஞனாக எழுத்தாளனாக ஓவியனாக இருக்க வேண்டியதில்லை.
இருப்பதும் இல்லை! ( சில விதிவிலக்குகள் இதிலும் உண்டு)
ஆனால் தலைவர்கள் அப்படி இருந்தால்..!
அண்மையில் வாசித்த புத்தகம் THE MIND OF MAHATMA GANDHI .
காந்தி தன்னைப் பற்றியும் தன் சமூக நிலைப்பாடு குறித்தும்
 எழுதியவைகளின் தொகுப்பு நூல். 1945ல் முதல் பதிப்பு வெளிவந்தது.
முதல் அத்தியாயத்தில் காந்தி தன்னைப் பற்றி எழுதி இருக்கும் 
சுயவிமர்சனங்கள் கவித்துவமாக வந்து விழுகின்றன.
மொழியாளுமை நம்மை வசீகரிக்கிறது..
>Neither saint nor sinner –
>I will not be a atraitor to God to please the whole world –
>I have no secret methods, I know no diplomacy save that of truth. I have no weapon but
Non violence.
>My life has been an open book. I have no secrets and I encourage no secrets.
I have been known as a crank, faddist, amd man. Evidently the reputation is well deserved.
>My mahatmaship is worthless. It is due to my outward activities , due to my politics which
Is the least part of me and is, therefore, evanescent.
 I do not want to die….of a creeping paralysis of my faculties – a defeated man. AN ASSASSIN’S BULLET MAY PUT AN END TO MY LIFE , I WOULD WELCOME IT.
 I AM NOT AFRAID TO DIE IN MY MISSION, IF that is to be the fate.
 Iam an optimist beause I expect many things from myself. I have not got them,
As Iam not yet a perfect being.
இப்படியாக சுயவிமர்சனங்களைத் தாண்டி
ஒரு சமூகவிடுதலைக்கான அரசியல் களத்தில் 
அவருடைய அதீதமான கனவுலகம் நம்மைப் பயமுறுத்துகிறது
. சில நேரங்களில் எரிச்சல் கூட வருகிறது.
ராமராஜ்யம் என்று நான் சொல்வது இந்து ராஜ்யம் அல்ல 
என்று வெவ்வேரு இடங்களில் தொடர்ந்து சொல்லி வந்துள்ளார் காந்தி. 
ஆனால் ராமன் என்ற பெயர்ச்சொல்லுக்கு இருக்கும்
 மரபான புராதான புராண மத அடையாளங்களை 
அறியாதவர் அல்ல காந்தி. 
காந்தி தேசம், சத்தியாகிரக தேசம், ஏன் அஹிம்சை தேசம் என்று கூட
 அவர் தன் கனவு ராஜ்யத்திற்கு பெயர் சூட்டி இருக்கலாம்.
 அப்படி எல்லாம் செய்யாமல் பல நூறு ஆண்டுகள் மக்கள்
நம்பிக்கையில் இருக்கும் ராமன் என்ற இந்துக்கடவுளின்
 அடையாளத்தை எடுத்துக்கொண்டு நான் சொல்லும் 
ராமராஜ்யம் இப்படிப்பட்டது என்று பலநூறு பக்கங்கள்
 எழுதினாலும் பேசினாலும் ராமனின் அடையாளம்
பொதுஜனப்புத்தியில் மாறிவிடப்போவதில்லை.
 மாற்றம் பெறவுமில்லை.
தீவிரமான காந்தியவாதிகள் கூட காந்தி பேசிய ராமராஜ்யத்தை
 எந்தளவுக்குப் பொருட்படுத்தினார்கள் என்பதை
 எண்ணிப் பார்க்க வேண்டி இருக்கிறது.
நேரு வெளிப்படையாகவே காந்தியின் ராமராஜ்யத்தை
 எதிர்த்து வந்தார்.
இன்றைக்கு பிஜேபி காரர்கள் மாட்டிறைச்சி அரசியல் செய்வதை 
எதிர்க்கிறோம். ஆனால் இந்த மாட்டிறைச்சி அரசியல் காந்தியத்தில்
கொண்டாடப்பட்டிருக்கிறது
. Cow protection is the gift of Hinduism to the world. And Hinduism will live so long as there are Hindus to protect cow…
Hindus will be judged not by their tilaks, not by the correct chanting of mantras, not by their pilgrimages, not by their most punctilious observances of caste, rules but their ability to protect COW ( pg 388)
மாட்டிறைச்சி பக்கத்தில் காந்தி காட்டும் இந்துவும்
 ராமராஜ்யத்தில் ராமனும் ரஹீமும் ஒன்றே என்று பேசுவதும்.. .. ? ???
எச்சரிக்கை.. .
ஒரே நாளில் இந்த இரண்டு பக்கத்தையும் சேர்த்து வாசித்தால்..
வாசிக்கிறவனுக்கு யோசிக்கும் திறன் பிறழ்ந்துவிடும் அபாயம் உண்டு.
இன்றைய அரசியல் இந்துத்துவ அரசியல் முகமாக
நாம் காணும் ராமர்கோவில் முதல் மாட்டிறைச்சி தடை
வரை.. காந்தியின் காந்தியத்திலிருந்து ஒழுகி
வந்திருக்கிறது என்பதை உணரும் போது அந்த
அஹிம்சைவாதியின் அரசியல் நம்மை அச்சுறுத்துகிறது !
அதீத கனவுநிலை தனிமனித அனுபவமாக வெளிப்படும் 
போது ரசிக்கவும் கொண்டாடவும் முடிகிறது. 
அதுவே சமூக அரசியலில் தீர்வுக்கான முன்மொழிதலாக
 இடம் பெறும் போது யதார்த்த நிலையிலிருந்தும்
களத்திலிருந்தும் முழுவதுமாக விலகி ஒரு மாய உலகத்தை 
மட்டுமே காட்டுகிறது.
காந்தி சொல்ல விரும்பிய கருத்துகள் அவருடைய 
மேற்பார்வையில் அவர் இசைவுக்குப் பிறகு புத்தகமாக
 வெளிவந்திருக்கிறது என்ற குறிப்பு
 இப்புத்தகத்தைக் கவனிப்புக்குரியதாக்குகிறது.

1 comment:

  1. In fact, Puthiya Maadhavi, he was a bundle of so many contradictions. But, we have to look at it through the consequences of his opinions and the time frame. பாரதியின் `தமிழ் இனி மெல்லச் சாகும்…` என்பதை misquote செய்வது போல.

    ReplyDelete