Sunday, June 11, 2017

நாய் வால்

நாய் வால்

எல்லா நாய்களையும் விலைக்கு வாங்கி விடுவதில்
போட்டி நடக்கிறது.
நாய்களைப் பிடித்து வருவதற்கு ஏரியா வாரியாக
ஏஜண்டுகள் இருக்கிறார்கள்.
கிரிக்கெட் வீரர்களை ஏலத்திற்கு எடுப்பது போல
விலைப் பேசப்படலாம் நாய்கள்.
குரைப்பது  கடிப்பது காவல்காப்பது
இதற்கெல்லாம் கறுப்புபூனைகள் காத்திருப்பதால்
இனி, நாய்கள் வாலை மட்டும் ஆட்டினால் போதும்.
இடமாகவா வலமாகவா உயர்த்தியா தாழ்த்தியா
கவலைப்பட வேண்டாம்  நாய்கள்
நாய்களுக்குப் பயிற்சி கொடுக்க
பைரவர்கள் காத்திருக்கிறார்கள்.
தேய்பிறை அஷ்டமி திதியில் சூரிய அஸ்தமனத்திற்குப் பின்
பைரவரை அணுகினால் பலன் உண்டு. 
எது நடந்தாலும் சரி,,
ராமன் ஆண்டால் இராவணன் ஆண்டால் என்ன
பழையமொழி தான்
நமக்குத் தெரிந்தது
நாய்களுக்கும் தெரிந்திருக்கும்.
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

1 comment:

  1. நல்ல கவிதை.வாழ்த்துக்கள்!

    ReplyDelete