Saturday, February 11, 2017

எம்ஜிஆரின் கனவு நனவாக...

எம்ஜிஆரின் கனவை நனவாக்க... இரு முதல்வர்கள் தேவை
அதிமுக வின் நிறுவனர் எம்ஜிஆர் என்பதில்
இன்றைய அதிமுக ஓபிஎஸ் மற்றும் சசிகலா இருவருக்கும்
 இருவரின் அணியினருக்கும் கருத்து வேறுபாடு 
இருக்க முடியாது என்ற நம்பிக்கையில் இந்த ஆலோசனையை
 முன்வைக்கிறேன். மேலும் இம்மாதிரியான தீர்வை,
அதாகப்பட்டது இன்று கொதிநிலைக்கு தமிழகத்தை
கொண்டுவந்துவிட வேண்டும் என்று கையில் தீப்பெட்டி
மண்ணென்ணெய்யுடன் காத்திருப்பவர்களை முறியடிக்க
வேண்டும் என்றும் அசாதரணமான தமிழக அரசியலை
சாதாரணமான நிலைக்கு கொண்டுவரும் முயற்சியாகவும்
 இக்கருத்தை முன் வைக்கிறேன்.
அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் அவர்கள் திருச்சி மாநகரை
 தமிழகத்தின் தலைநகராக, அல்லது இணை தலைநகராக்க
 ஆசைப்பட்டார். ஆனால் அவர் ஆசை நிறைவேறவில்லை.
 அவருடைய ஆசையை மறைந்த " அம்மா" அவர்கள் கூட
 மறந்து விட்ட ஆசையை நிறைவேற்றியதுடன் இன்றைய 
அரசியல் சிக்கலைத் தீர்த்ததாகவும் இருக்கும்
  ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்று இதைத்தான் சொல்வார்கள்.
ஆளுநர் சென்னை மாநகருக்கு இணையாக திருச்சியையும்
 தமிழகத்தின் இணை தலைநகராக்க வேண்டும்.
சென்னையை தலைநகராக கொண்டு ஒருவரும் 
திருச்சியை தலைநகராகக் கொண்டு இன்னொருவரும் 
ஆக தமிழ்நாட்டில் இரு முதல்வர்கள். அவர்கள் விரும்பினால்
 மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது ஆறுமாதத்திற்கு
 ஒரு முறையோ தலைநகரை சுழற்சி முறையில் மாற்றிக்கொள்ளலாம்.
 இதில் சென்னையில் யார் முதல்வர், 
திருச்சியில் யார் முதல்வர் என்பதை மெரினா கடற்கரையில்
அம்மாவின் கல்லறையில் சீட்டுப் போட்டு தேர்ந்தெடுத்துக்
 கொள்ளலாம். 
அம்மாவின் தீர்ப்பே இறுதி தீர்ப்பு என்பதை 
கட்டுக்கோப்பான அம்மாவின் ஒன்றரை கோடி கட்சித் தொண்டர்கள்
 ஒற்றுமையாக ஏற்றுக்கொள்வார்கள்.
இம்மாதிரியான ஒரு தீர்வை எதிர்கட்சியாக இருக்கும் திமுகவினரும் ஏற்றுக்கொள்வார்கள். நாளைக்கு அவர்களும் ஆட்சிக்கு வந்தால்..
அவர்கள் வீட்டுப் பிரச்சனையில் .(!!)..
முதல்வர் யார் என்ற பிரச்சனைக்கு இதுவே அருமையான தீர்வு.

எனவே நிகழ்கால , வருங்கால தமிழகத்தின் அசாதாரணமான
 அரசியல் நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு..
.தொலைநோக்குப் பார்வையுடன் தமிழக ஆளுநர் அவர்கள் 
இம்மாதிரி ஒரு தீர்வை முன்மொழியும் படி.. 
இதுக்கு இந்திய சட்டத்தில் இடமிருக்கிறதா என்று
டிவிக்காரர்கள் அக்னிப்பரீட்சை, நேர்படப்பேசு என்று
பேசி நம்மைக் குழப்பலாம். குழம்பிய குட்டயில் மீன் பிடிக்கலாம். கவனம்.
விடாதீர்கள்... புறப்படுங்கள்..
எம்ஜிஆரின் கனவை நிறைவேற்றியே தீருவோம்
.
(எப்பாடா இப்படியாக  ஒரு தீர்வைக் கண்டுபிடித்தப் பின் கொஞ்சம் தலைவலி குறைந்த மாதிரி இருக்கு. வாசித்த உங்களுக்கும் தலைவலி குறையவேண்டும் என்ற நல்லெண்ணத்தில்... )

3 comments:

  1. ஆகா...! இதுவல்லவோ தீர்வு...!

    ReplyDelete
  2. ஆகா இப்படியும் ஒரு தீர்வு இருக்கிறதா

    ReplyDelete
  3. ஆகா....சீட்டுப்போட்டு குலுக்கி எடுக்கலாமோ?

    ReplyDelete