Saturday, March 12, 2022

மல்லிபாய் மல்லி நாத் ஆன கதை


 

24 தீர்த்தங்கரர்களின் சிலைகளை இனி கவனியுங்கள்.
அதில் யாரோ ஒரு தீர்த்தங்கரராக அவள் இருப்பாள்.
ஆனால் சிலைகளில் அவளை மல்லிநாத் என்று
சொல்லுவார்கள்.
அவள் மல்லிபாய். அழகானவள். வசீகரமானவள்.
அழகானப்பெண்ணை ரசிக்கும் இச்சமூகம் அவள்
அறிவானவளாக இருந்துவிட்டால், 
அவளை ஒதுக்கிவிடும்.
இன்று மட்டுமல்ல, அன்றும் அதேதான்.
அவள் சமணர்களின் கருத்தாக்கத்தை 
கேள்விக்குட்படுத்தியவள்.
சமணத்தில் பெண் துறவியாவதே அடுத்தப்பிறவியேலேனும்
ஆணாக பிறந்து பிறவிப்பெருங்கடல் 
கடந்துவிடத்தான்.
அவள் அதை எதிர்த்தாள்.
ஆண்- பெண் உடல்களின் 
ரகசியங்களை உடைத்தாள்.
பெண்ணுடலுடனேயே தீர்த்தங்கராகினாள்!
ஆனால் அவள் சிலையை வடிக்கும்போது
மல்லிபாய் என்ற பெண்ணை மல்லி நாத் என்ற ஆண்
தீர்த்தங்கரராக்கி … 
24 தீர்த்தங்கரர்களும் ஆண்களாக
இருப்பதைப் பேணிக் கொண்டது சமணம்.
 
மல்லிகா என்ற பெயர் இந்தியப்பெருவெளியில்
ஒரு கலகக்காரியின் கதையை 
மறைத்துவைத்திருக்கிறது.
மல்லிகா என்றால் மல்லிகைப்பூ என்று சொல்லி
போதையூட்டி மயக்கிவேறு வைத்திருக்கிறது.

No comments:

Post a Comment