Sunday, March 20, 2022

ஒருபாலினபுணர்ச்சி.. தொடர்வதன் மர்மங்கள்

 


ஆண் பெண் இருபாலின புணர்ச்சியில் இனப்பெருக்கம் 
தொடர்வது இயற்கை.
ஆனால் இனப்பெருக்கத்திற்கு பயன்படாத
 ஒரு பாலின புணர்ச்சியில் அதற்கான மரபணுக்கள் 
காலப்போக்கில் மறைந்திருக்க வேண்டும்.
ஆனால் தொடர்ந்திருக்கின்றன.. ஏன்? எப்படி?
இதைப்பற்றி ஆய்வு செய்வதே பாவம் என்று 
கருதப்பட்ட காலமிருந்தது.
ஆனால் இந்த மரபணுக்கள் தலைமுறைகளாக
 கடத்தப்பட்டு வந்திருப்பதை
இயற்கை உறவின் ஒரு பக்கமாகவே 
இன்றைய மரபணு ஆய்வுகள் முன்வைக்கின்றன.
 
பிறக்கும் குழந்தை அம்மாவிடமிருந்தும் அப்பாவிடமிருந்தும் 
 பெறும் ஒரு குறிப்பிட்ட பாலின மரபணுவானது 
 ஒன்று போல இருக்கலாம்.(homozygous) , 
அல்லது வேறுபட்டும் இருக்கலாம் (heterozygous).
ஒன்றுபோல இருக்கும் பாலின மரபணுக்களைக் 
கொண்ட குழந்தையே ஒரு பாலின புணர்ச்சியாளராக
மாறும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. 
 
 
இரண்டாவது கருத்து : தாயின் கருவறைச்சூழலும் கூட
காரணமாக இருக்கலாம் என்பது. . 
அதாவது ஒரு பெண்ணின் கருப்பையில் 
ஆண்பிள்ளைகளையே சுமந்திருக்கும் என்றால் அச்சூழலில்
மெதுவாக ஆண்மைய எதிர்ப்பாற்றல் சக்தி 
உருவாகி அது கடைசியாக அவள் பிரசவிக்கும்
 ஆண் குழந்தையிடம் வினையாற்றி இருக்கிறது.
எந்த முடிவுகளும் இதுதான் 100% காரணிகள் 
 என்று அறுதியிட்டு கூறவில்லை. தொடர்ந்து 
ஆய்வுகள் நடக்கின்றன. 
 
இந்திய உச்ச நீதிமன்றம் இருவரின் ஒப்புதலுடன் 
நடக்கும் ஒருபாலினபுணர்ச்சி, சட்டப்படி குற்றமில்லை 
என்று தீர்ப்பளித்து இருப்பது வரவேற்புக்குரியது. ஒருபாலினபுணர்ச்சியாளர்களை வெறுக்காமல்,
 கலாச்சார கைத்தடிகளைக் கொண்டு ஒடுக்காமல், 
மூட நம்பிக்கைகளுடன் அணுகாமல் 
இதுவும் இயற்கையின் ஓர் அதிசயம்
 என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். 
ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் பரவாயில்லை.
வெறுத்து ஒதுக்காமல் இருந்தாலே போதும். 
 
( ஆதாரம் : சு. இராமசுப்பிரமணியன் எழுதி இருக்கும் கட்டுரை : 
டார்வினின் பரிணாம-முரண். 
காக்கைச் சிறகினிலே இதழ் பிப்.- 22.)

No comments:

Post a Comment