Saturday, October 2, 2021

MAHATMA VS Gandhi

 


காந்தி குல்லாய் அணிந்த இருவர்

மும்பையின் சிவப்பு விளக்கு வீதியில்
இரவு 8.30 மணிக்கு நடக்கிறார்கள்.
கிராண்ட்ரோட் பகுதியிலிருக்கும் FARASE ROAD ..
சிவப்புவிளக்கு கைகொட்டி சிரிக்கிறது.
அவர்கள் தங்கள் காந்தி குல்லாவை எடுத்து
சட்டைப்பையில் வைத்துக்கொண்டு
அந்தப் பழைய கட்டிட த்திற்குள் நுழைகிறார்கள்.
3 மாடிக் கட்டிடம். சின்ன சின்ன தீப்பெட்டி அறைகள்.
காமப்பசித்தீர்க்க முடியாமல் திரைச்சீலைகள் கிழிந்து தொங்கிக்கொண்டிருக்கின்றன.
அதிலிருந்து எட்டிப்பார்க்கும் பெண்கள்
அந்த இருவரையும் கைப்பிடித்து இழுக்கிறார்கள்.
“என்ன மாதிரி வேண்டும்.. எல்லாம் கிடைக்கும் “
என்றழைக்கும் அழைப்புகளில் அந்த ஆண்களின்
உடல் கூனிக்குறுகிப்போகிறது.
“ப்பேஹன்ஜி” (bahenji) சகோதரியே..
நாங்கள் ரேஷ்மாபாயின்
அறையைத் தேடி வந்திருக்கிறோம்” (Reshmabai Brothel) என்று
சொல்லவும் அங்கிருந்தப் பெண்கள்
“சகோதரியைத் தேடி விபாச்சாரவிடுதிக்கு வந்திருக்கிறார்கள் “
என்று கை கொட்டி சிரிக்கிறார்கள்.
அவமானத்தில் தலைகுனியும் அந்த இரு ஆண்களிடன்
ஒருத்தி நெருங்கி தன் உடலைக் காட்டுகிறாள்..
“ரேஷ்மாவிடம் இருப்பது என்னிடமும் இருக்கிறது .. “
என்று கடைவிரிக்கும் போது அக்கணத்தில்
அந்த இட த்தில் நிற்க முடியாமல் அவர்கள்
இருவரும் ஓடுகிறார்கள்..

இங்கு வந்திருக்கவே கூடாது.. இனி என்ன செய்வது?
எப்படி ஹரிலால் காந்தியைக் கண்டுபிடிப்பது? என்று
தவிக்கிறார்கள்.
அவர்கள் இருவரும் சீவ்ரி மருத்துவமனைக்குப் போய்
ஹரிலால் காந்தியைத் தேடுகிறார்கள்..
“யெஸ்.. ஹரிலால் காந்தி.. காந்தியின் மூத்த மகன்,
தேசப்பிதாவின் மகன் ஹரிலால் “
என்று டாக்டரிடம் சொல்லும்போது
சீவ்ரி மருத்துவமனையின் பிணவறை
குளிர்ந்து நடுங்கி ஒடுங்கிப்போகிறது..
மகாத்மாவும் காந்தியும்..
ரணமிகுந்த வரிகளுடன் .. பக்கங்கள்
முதல் காட்சி:
போன் ஒலிக்கிறது..

“நான் Farase Road லிருந்து பேசுகிறேன்.

ஹரிலால் காந்தியைத் தெரியுமா உங்களுக்கு?

“நீங்கள் யார் ?”

“ரேஷ்மாபாய், என் அறையில் தான் ஹரிலால்காந்தி
தங்கி இருந்தார். நேற்று மயக்கமடைந்து உடல் நிலை
மோசமானதால் சீவ்ரி மருத்துவமனையில் சேர்த்திருக்கிறேன்”

“ஹலோ ஹலோ..”

:நான் பொதுதொலைபேசியிலிருந்து பேசுகிறேன்..
விவரமாகப் பேசமுடியாது..”

“நீங்கள்?”
(கட் கட் கட் )
(ஹரிலாலைத் தேடிய அந்த இருவரும் :
கேசவ்லால் காந்தி - ஹரிலாலின் தம்பி மகன்,
அதாவது காந்தியின் பேரன் /
சுரேந்திரபாய் காந்தியின் மருமகன் )
பிகு:
இந்தப் பின்னணியை மட்டும் எடுத்துக்கொண்டு
ஒரு காந்தியவாதி- ரேஷ்மா அறை, இன்றைய சூழலில்
ஒரு கதை எழுதி இருந்தேன். யாருமே அந்தக் கதையை
பிரசுரிக்க தயாராக இல்லை!
இப்படி நிராகரிக்கப்படும் கதைகள்
மிகச்சிறந்தவையாகவே இருக்கும் என்று
இலக்கிய வரலாறு சொல்கிறது.
கதையின் தலைப்பு :

No comments:

Post a Comment