Monday, October 4, 2021

ராஜ்பவனும் பஞ்சாயத்து போர்டும்

 "ஜனாதிபதியா வந்திட்டுப் போ.. ஆனால்

பஞ்சாயத்து போர்டு நாற்காலியில
உட்கார நினைச்சே.."
யாரும் கவனிக்கவில்லை.
எந்தக் கட்சியும் உரிமைக் கொண்டாட முடியவில்லை.
ப்ரேக் நியூஸ் ஆகவில்லை.
நேர்ப்படப்பேசப்படவில்லை.
ஆனால் நடந்து கொண்டிருக்கிறது.
நாம் வாழும் காலத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
சுயராஜ்யம் என்பது எங்கிருந்து முளைவிட
வேண்டுமோ அங்கிருந்து துளிர்க்க ஆரம்பித்திருக்கிறது.
இதெல்லாம் நான் உயிருடன் இருக்கும் போதே
நடக்குமா... அல்லது இதுவும் கனவாகி காற்றோடு
கலந்துவிடுமா என்று என்னைப் போலவே
நினைத்தவர்கள் பலர் என்னோடு இன்றும் இருக்கிறார்கள்.
இச்செய்தி என்னமாதிரியான ஒரு மகிழ்ச்சியைக்
கொடுத்த து என்பதை உங்களுக்கு
என்னால் கடத்த முடியவில்லை.
அப்பாவுக்கு மரியாதைக் கொடுப்பவர்கள்
ஏன் பக்கத்து வீட்டு மாடசாமி தாத்தாவை
"போடா வாடா" என்று வயதில் குறைந்தவர்களும்
விளிக்கிறார்கள், என்று புரியாத வயதில்
புரட்சியாளர் அம்பேத்கரை வாசிக்க ஆரம்பித்தேன்.
திருவனந்தபுரத்தில் இறங்கி விமான நிலையத்திலிருந்து
வாடகைக் கார் வைத்துக்கொண்டு ஊருக்கு வரும்போது
ஊருக்குள் நுழைந்தவுடன் ஓட்டுநரின் பார்வையிலும்
விளிப்பிலும் ஏற்படும் மாற்றங்களை
வலியுடன் கடந்து வந்த நாட்கள் ..
"சாதி இப்போதும் இருக்கிறதா.. மாதவி?"
என்று என்னிடம் கேட்பவர்களுக்கு சாதியின்
நுண்ணரசியலை சாதிச்சமூகத்தின் பொதுஜன
உளவியலை என் அனுபவங்களை சொன்னாலும்
புரிந்து கொள்ள மறுக்கும் அவர்களின் புரட்சிகரமான
அறிவுஜீவி முகத்தை மெளனத்தில்
கடந்து செல்ல பழகிவிட்டேன்.
இதோ... நான் எதிர்ப்பார்த்த ஓரு மாற்றம்
என் கண்முன்னால் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
இதை அருகிலிருந்து பார்க்கும் நீங்கள் தான்
என்னிடம் சொல்லி இருக்க வேண்டும்.
ஆனால் இதைக் கவனிக்க கட்சிகளுக்கோ
தொண்டர்களுக்கோ நேரமில்லை.
பரபரப்பான செய்திகளை மட்டுமே
பரபரப்பாக விற்பனை செய்யும் ஊடகங்களுக்கு
இந்தப் புள்ளிவிவரங்கள் பேசுபொருளாகவில்லை!
தமிழ் நாட்டில் பஞ்சாயத்து தேர்தல்களில் பொதுத்தொகுதியில் 50% அதிகமாக ஒடுக்கப்பட்ட மக்கள் களத்தில் நிற்கிறார்கள்...
இது எவ்வளவு பெரியமாற்றம்.. ?
அவர்கள் அனைவரும் வெற்றி பெறுவார்கள் என்றொ
வெற்றி வாய்ப்புகள் இருக்கிறது என்றொ
நான் முடிவுக்கு வரவில்லை.
ஆனால் பொதுத்தொகுதி என்பது "எனக்குமானது"
என்ற விழிப்புணர்வும் அதை சாத்தியமாக்கி இருக்கும்
சமூகச்சூழலும் நாம் வரவேற்க வேண்டியவை.
இந்தப் பாரத தேசத்தில் தாழ்த்தப்பட்டவன்
ஜனாதிபதியாக வந்துவிடலாம்.
ஆனால் பஞ்சாயத்து போர்டு தலைவராக வரமுடியாது!
சாதியம் பனிப்பாறையைப் போல கெட்டியாக
உறைந்துப்போயிருக்கும் கிராமங்களில் மாற்றம்
தென்படுகிறது. பனிப்பாறைகள் உருக ஆரம்பித்துவிட்டன.
இந்த மாற்றம்
"கட்சி சார்பற்ற மூன்றாவது அணி அரசியல் , சமூக எழுச்சி"
என்று அரசியல் விமர்சகர்கள் சொல்வார்கள்.
இந்த மாற்றங்களுக்காகப் போராடியவர்கள் பலர்.
உயிரழந்தவர்கள், சிறை சென்றவர்கள்
நாம் அறியாத முகங்கள்.
இதில் சிவப்புக்கும் கறுப்புக்கும் பங்கு உண்டுதான்.
இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களிலும் இதுவரை
நடக்காத நடக்க முடியாத ஒரு நிகழ்வாக இந்த நிகழ்வு..
களத்தில் நிற்கும் உறவுகளுக்கு..
வாழ்த்துகள்.
பிகு:
தமிழ் நாட்டில் சாதியம் இல்லை,
சாதிக்கொடுமைகள் இல்லை
தலித்துகள் அதிகாரம் பெற்றுவிட்டார்கள்,
பார்த்தீர்களா என்று இதை வாசித்துவிட வேண்டாம்.

நன்றி: தோழர் TSS Mani.

4 comments:

  1. Very true. The last warning is as important as the message.

    ReplyDelete
  2. Well said. In my opinion, this is the bitter reality in our society that we don't even accept BLUE besides Black and Red.Black and Red speaking nice about social justice, and against casteism but heartily following the evil system to prosper.BLOOD is thicker than water.

    ReplyDelete
  3. The above message forwarded by Vanitha Murugaiyan. EMail Id. vanithapcb@gmail.com

    ReplyDelete
  4. என்று தனியும் விடுதலை தாகம்

    ReplyDelete