Saturday, October 9, 2021

REAL HERO ..ஜாக்கி ஜான் vs ஷாருக்கான்

 

REAL HERO ..
கதை ஒரே கதை.
காட்சிகளிலும் மாற்றமில்லை.
ஆனால் இந்தியச் சமூகம் மட்டும்
ஏன் கதையின் போக்கில் தடுமாறி
தரமிழந்து வெளிப்பட்டிருக்கிறது?
பொதுஜன உளவியல் இந்தியச் சமூகத்தில்
குற்றங்களையும் அதிலும் குறிப்பாக பிரபலங்கள் சம்பந்தப்படும் குற்றங்களை
ஜீரணிக்க முடியாமல் பாசம், குடும்பம் என்ற
போர்வையில் அதையும் தாண்டி தனிமனித உரிமை
என்ற அளவுக்கு குற்றங்களை மடைமாற்றம் செய்கிறது.
இது திரைக்கதை அல்ல. திரைப்படமும் அல்ல.
இரண்டிலும் சம்பந்தப்பட்டவர்கள் புகழ்ப்பெற்ற
திரைப்பட கதா நாயகர்கள். ஒருவர் ஜாக்கி ஜான்.
இன்னொருவர் இந்திய திரைப்பட நாயகர் ஷாருக்கான்.
ஜாக்கியின் மகன் ஜெய்ஸி ஜானும்
ஹாருக்கானின் மகன் ஆர்யாகானும்
போதைப்பொருள் பயன்படுத்திய குற்றத்திலும்
போதைப்பொருள் கட த்தல்கார ர்களுடன் இருக்கும்
தொடர்பிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள்.
மகன் 2014 ல் பீஜிங்க்கில் கைது செய்யப்பட்ட போது
ஜாக்கி ஜான் “போதைப்பொருள் கட்டுப்பாடு தூதுவராக”
(Narcotics control ambassador)சீனாவின் காவல்துறையில்
நியமிக்கப்பட்டிருந்தக் காலம்.
கைது செய்யப்பட்ட மகனுக்காக அவர்
தந்தையுள்ளம் கண்ணீர் விட்டிருக்கும்.
ஆனால் தன் மகனின் செயலை அவர் நியாயப்படுத்தவில்லை!
மகனுக்காக காவல்துறையிடம் கெஞ்சவில்லை.
தன் பணம் தன் செல்வாக்கு தன் அதிகாரம்
எதையும் மகனைக் காப்பாற்ற அவர் பயன்படுத்தவில்லை.
மாறாக அவர் பொதுஜனத்திடம்
“மன்னிப்பு” கேட்டார்.
ஒரு தந்தையாக தான் தவறு செய்துவிட்டேனோ ,
அவனை இராணுவப்பள்ளியில் சேர்த்திருந்தால்
ஒழுங்காக வளர்ந்திருப்பானோ “
என்று எண்ணி எண்ணி வருத்தப்பட்டார்.

தன் திரைப்படங்களின் மூலம் அவர் சம்பாதித்த
சொத்தின் மதிப்பு (போர்பஸ் அறிக்கை) 350 மில்லியன் டாலர்
. தன் சொத்துகளை தன் மகனுக்கு அவர்
எழுதிவைக்கவில்லை. அவை அவர் வாழ் நாளுக்குப்
பின் சமூகத்திற்கு, சமூகச்சேவைகளுக்கு என்று
எழுதி வைத்திருக்கிறார். இதைப் பற்றி கேட்டபோது
மகன் ஜெய்ஸி அவனுக்கு அவன்
சம்பாதித்துக் கொள்ள வேண்டும்.
அப்பனின் பணத்தை , கஷ்டப்பட்ட சம்பாதித்த
என் சொத்துகளை அவன் வீணடிக்கமுடியாது.
(Jaycee will make his own money, if he is not capable
then the Railroad Tigers star will be wasting Jackie’s hard earned money)



இதே காட்சி மீண்டும் மும்பையில் அரங்கேறுகிறது.
ஆர்யாகான் கைது செய்யப்படுகிறார்.
ஷாருக்கான் தன் மகனுக்கும் போதைப்பொருளுக்கும்
தொடர்பே இல்லை என்று சொல்கிறார்.
அய்யோ என் பிள்ளையை விட்டுவிடுங்கள் ,
அய்யோ என் பிள்ளையைக் கைது செய்யாதீர்கள்,
அய்யகோ என் பிள்ளையை நட்சத்திர ஹோட்டலில்
தங்க வையுங்கள், செலவை நான் பார்த்துக்கொள்கிறேன்..
என் மகன் ஆர்யாவுக்கு முழு சுதந்திரம்கொடுத்து
வளர்த்திருக்கிறேன்.
என் மகன், அவன் என் மகன், ஷாருகானின் மகன் ஆர்யாகான்… “
இப்படியாக காட்சிகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன.
சல்மான் கான் ஓடோடி வருகிறார்,
ஷாருக்கானின் கண்ணீர்த்துடைத்து ஆர்யாகானுடன் நிற்கிறார்.
ரிதிக்ரோஷன் ஷாருக்கான் ஆர்யாகானுக்கு
ஆதரவாக டுவிட்டுகிறார். சரி விடுங்கள் இவர்கள் அனைவரும்
அவருடம் ஒன்றாக ஆடும் திரை நட்சத்திரங்கள்.
இந்த அறிவுஜீவி ஹார்வார்ட் யுனிவர்சிட்டி புகழ்
சசிதரூரும் தன் பங்கிற்கு டுவிட்டுகிறார்.

இந்தியப் பொதுஜன உளவியல் .. இதுதான்.
இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது?!!
சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்
என்று விட்டுவிட யாரும் தயாராக இல்லை.
இதில் ப்ரேக் நியுஸ் போட்டு தலை வெடிக்கிற
விவாதங்கள் நடத்தி தங்கள் பசியைத் தீர்த்துக்
கொள்கின்றன ஊடகங்கள்.
ஷாருக்கான்...ஒரு தந்தையாக
உங்கள் வருத்தம் புரிகிறது.
ஆனால்,
ஜாக்கி .. நீங்கள் தான் ,
உண்மையான ஹீரோ..
தலைவணங்குகிறேன் ஜாக்கிஜான்.


1 comment: