Sunday, August 11, 2019

கண்ணா.. நீ தான் மோதிஜியா இல்லை



Image result for modi as krishna
மழைக்கால பாராளுமன்ற சிறப்பு பட்டிமன்றம்..
கண்ணன் யார்?
காண்டீபன் யார்?
அமித்ஷாவா ? மோதிஜியா!
காணத்தவறாதீர்கள்..
......
கண்ணா .. நீயும் மோதியா இல்லை
நீ தான் அமித்ஷாவா..
காஷ்மீர் மாறினால் கெளரவம் மாறுமா – நெவர்
கண்ணா நீயும் மோதியா இல்லை 
நீதான் அமித்ஷாவா
அறிவைக் கெடுத்ததோ தேர்தலின் கெளரவம்
அவர் மேல் தொடுத்ததோ அர்ஜூனன் கெளரவம்
நடந்தது அந்த நாள்
முடிந்ததா பாரதம்
நாளைய பாரதம் யாரதன் காரணம்?
ஹே.. கண்ணா
மூன்றடி மண் கேட்டான் வாமனன் உலகிலே
மூன்றென வைத்ததோ மக்களின் தலையிலே
வளர்த்த மக்களோ வெள்ளத்தின் பிடியிலே
மாறும் அவதாரமே அதுதான் உலகிலே
ஹே கண்ணா…
மக்களின் கெளரவம் தேர்தலின் முடிவிலே
மரிக்கின்ற உரிமையோ உங்களின் வடிவிலே
ஆகட்டும் பார்க்கலாம் ஆட்ட த்தின் முடிவிலே
இருவரும் ஆடினால் நீதி வெல்லுமோ உலகிலே
காலம் மாறினால் கெளரவம் மாறுமா
மக்களின் கனவுகள் மரித்து தான் போகுமா.. 
நெவர்..
ஹே கண்ணா..
நீயும் மோதியா இல்லை நீதான் அமித்ஷாவா..
நெவர்..

No comments:

Post a Comment