Saturday, May 26, 2018

இந்திய வங்கிகள் ஒளிர்கின்றன.


இரண்டே வருஷத்தில் நீங்க உலகப் பணக்காரர் ஆகிவிடலாம்!
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் முதலில் பிஜேபியின் பக்தராக
வேண்டும். அதன் பின் ஏதாவது பிசினஸ் ஆரம்பிங்கோ.
பேரீச்சம் பழத்திற்கு ஈயம் பித்தளைனு பிசினஸ் செய்தா கூட ஓகே தான்.
அதன் பின் வங்கியில் நுழைந்து லோனுக்கு அப்ளை செய்யுங்க.
ஒரே வங்கியில் லோன் கேட்கப்பிடாது. ஒரு பத்து பதினைந்து வங்கியில்
லோன் கேளுங்க. லோன் கிடைக்கும்ங்கே. அதன் பின் ஒரு வங்கியின் கடனை
இன்னொப்ரு வங்கியில் லோன் வாங்கி வெறும் வட்டித்தொகையை மட்டும்
ஒரு வருஷத்திற்கு கட்டிட்டு வாங்க. அதாவது அப்படியே வாங்கின பணத்தில்
10 விழுக்காட்டை இப்படியே ரோட்டேஷனில் விடுங்க. பெரிசா ஒரு தொகை
கைக்கு வந்தவுடன் ரெடியா வச்சிருக்கிற பாஸ்போர்ட், விசா, குடியுரிமை
வச்சிக்கிட்டு இந்தியாவை விட்டு கம்பி நீட்டிருங்க.
இதுதான் இப்போ லேட்டஸ்ட்டா ஓடிட்டிருக்கும் ஜேம்ஸ்பாண்ட் ஸ்டோரி.


***


தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட 
புள்ளிவிவரங்களின் படி
மோதி யின் பிஜேபி ஆட்சி காலத்தில் வங்கிகளில்
நடந்த தில்லுமுல்லுகள்
அதற்கு முந்திய காங்கிரசு ஆட்சியில் நடந்த ஏமாற்றுகளை எல்லாம்
தூசியைப் போல ஊதித்தள்ளிவிட்டு 
பெரிசா ரொம்ப பெரிசா ஒளிருதாம்
ரிசர்வ் வங்கி தான்
இதை ஒத்துக்கொண்டு தகவல் தந்திருக்கிறது. 
***
நானும் ஒரு வங்கியில் தான் வேலை பார்த்திருக்கேன். என்ன ப்ரயோஜனம்
சொல்லுங்க! நானெல்லாம் வேஸ்ட் ப்பீஸ். ஒத்துக்கறேன். 

No comments:

Post a Comment