Tuesday, May 31, 2016

கவிதை கொலை







கூப்பிடு தூரத்தில் இனப்படுகொலை
அவன் கவிதை எழுதிக்கொண்டிருந்தான்.
நீங்கள் பாரட்டினீர்கள்
பக்கத்து ஊரில் கவுரவக்கொலை
அவன் கவிதை எழுதிக்கொண்டிருந்தான்.
நீங்கள் கொண்டாடினீர்கள்
ஊரெல்லாம் வெள்ளக்காடு
அவன் கவிதை எழுதிக்கொண்டிருந்தான்
நீங்கள் லைக் போட்டீர்கள்
தலைவர் அகாலமரணம்
அவன் கவிதை எழுதிக்கொண்டிருந்தான்
நீங்கள் ஆஹா என்றீர்கள்
நேற்று அவன் கொலை செய்யப்பட்டான்
துப்பு துலக்கியதில் 
கவிதை அவனைச் சிறுக சிறுக
விஷம் கொடுத்து கொலை செய்தது
கண்டுபிடிக்கப்பட்டது.
நீங்கள் வேறோரு கவிஞனைப் பாராட்டுவதற்கு
புறப்பட்டுவிட்டீர்கள்.

No comments:

Post a Comment