Saturday, May 7, 2016

ஓசுரில் மோடி




தமிழகத்தில் பா.ஜ.க. 3வது சக்தியா வளர்வதாக மோடி
சொல்கிறார். அது அவர் விருப்பம். எத்தானாவது சக்தியாகவும்
இருந்துவிட்டு போகட்டும். நமக்கென்ன..?
ஆனா கடைசியில் மோடி வைத்த வேண்டுகோள் தான்
இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கெ வேட்டு வைக்கிறமாதிரி
இருக்கு.. இந்திய ஒருமைப்பாட்டை இப்படி எல்லாம் ஒரு
பிரதமர்.. கேள்விக்குறி ஆக்கினால்..

(தமிழக மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்ல, பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் பாஜக வெற்றி பெறும் போது டெல்லியில் நான் கொண்டு வரும் ஒவ்வொரு திட்டத்தையும் தமிழகத்தில் அமல்படுத்தி, உங்களுக்காக உழைக்கத் தயாராக உள்ளேன்”)
அப்போ... பிற கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் பிரதமர் மோடி
தலைமையில் இயங்கும் நடுவண் அரசின் திட்டங்கள்  அமுல்படுத்த
மாட்டீர்களா.. இந்தியாவின் பிரதமர் என்றால் அவர் குமரி முதல்
இமயம் வரை பரந்திருக்கும் அனைத்து மாநில மக்களுக்கும் பிரதமர்
அல்லவா.. நடுவண் அரசு அனைத்து மாநில மக்களின் நலனுக்காகவும்
செயல்படும் அரசு அல்லவா..
என்ன இது... இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒழுங்கு நாடாளுமன்ற
திட்டங்கள் மாநில அரசும் மைய அரசு உறவுகள் பற்றி எலலாம்
ஒன்றும் தெரியாத 3 ஆம் தர பேச்சாளர் மாதிரி ... ஓர் அகில
இந்திய கட்சியின் தலைவர் பேசலாமா.. பாரதப்பிரதமர் பேசலாமா..

பாரதமாதா கி ஜெ.

No comments:

Post a Comment