Monday, June 1, 2015

பார்த்தேன், ஆனால் பார்க்க விருப்பமில்லை



பயணங்களில் சில வரலாற்று முக்கியத்துவம் கொண்ட
 இடங்களைப் பார்ப்பதில் எனக்கு எப்போதுமே
 ஆர்வம் உண்டு. சமீபத்திய இலங்கை
பயண்த்தில் அம்மாதிரியான சில அனுபவங்கள் .. 
ஆனால் அந்த அனுபவங்கள் புதுமையானவை.
 அதில் இதுவும் ஒன்று.
புதிதாக கட்டப்பட்டிருக்கும் இந்த நூலகத்தைப் பார்த்தேன்.
ஆனால் ஏனோ பார்க்கவிருப்பமில்லை. சில மணி நேரங்கள்
காத்திருந்து நூலகத்தின் உள்ளே போய்ப்பார்க்கலாமா? இன்னொரு
ரவுண்ட் சுற்றிவிட்டு வந்து அதன் பி ன் நூலகத்திற்கு 4 மணிக்கு வந்து
நூலகத்திற்குள் போய் அந்த நூலகத்தில் 
எம்மாதிரி புத்தகங்கள் இருக்கின்றன என்று தெரிந்து கொள்ளலாமா?
தோழி றஞ்சி எங்களிடம் கேட்டார்.
வேண்டாம், எங்களுக்கு நூலகத்திற்குள் போய்ப் பார்க்க வேண்டாம்.
புதிதாகக் கட்டி இருப்பதாக சொன்னார்களே..
அதைப் பார்த்துவிட்டோம்.. என்று சொன்னோம்.
நான், யோகி, விஜி எங்கள் PM வழக்கறிஞர் ரஜினி எல்லோரும்
ஒருமித்த குரலில் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டோம்.
அங்கே நின்று கொண்டிருந்த ஒவ்வொரு நிமிடமும் எனக்கு
புத்தகங்கள் எரியும் வாசனை வந்து கொ ண்டிருந்தது.





No comments:

Post a Comment