Friday, June 26, 2015

எமர்ஜென்சி ... மீண்டும் வருமா?


"என்னால் உறுதியாக சொல்லமுடியாது.
இந்தியாவில் மீண்டும் ஒரு எமர்ஜென்சி வராது என்று"
என்று அத்வானி அண்மையில் நிருபர்களுக்கு அளித்தப்
பேட்டியில் சொல்லி இருக்கிறார்.
" நம் நாட்டில் சட்டமும் ஒழுங்கும் இருந்தக் காலத்தில் தான்
  24 ஜூன் 1975 ல்  எமர்ஜென்ஸி அறிவிக்கப்பட்டது
 என்பதையும் அவர் அதவானி நமக்கு நினைவூட்டுகிறார்.
இன்று 2015ல் நமக்குப் போதுமான பாதுகாப்பு இருப்பதாகத்
 தெரியவில்லை.
எமர்ஜென்சி காலத்தில்  (24 ஜூன் 1975 முதல் 21 மார்ச் 1977 வரை)
அதை எதிர்த்தவர்களில் அத்வானியும் முக்கியமானவர்.
அத்வானி சொல்லியிருப்பதில் இருக்கும் முக்கியத்துவத்தைக்
கவனிக்க வேண்டும் என்று சிவசேனா வெளிப்படையாகவே
 தங்கள் பத்திரிகையில் கருத்து எழுதி இருப்பது புறக்கணிப்புக்குரியதல்ல. " மீண்டும் ஒரு எமர்ஜென்சி வராது என்று என்னால் உறுதியாக
சொல்லமுடியாது " என்று அத்வானி சொல்கிறார் என்றால்
அதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன.
அவர் நிச்சயமாக யாரையோ குறிப்பிட்டுத்தான் தன்
 அச்சத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் என்பது
 தெளிவாகத் தெரிகிறது.
ஆனால் அத்வானியின் கருத்துக்கு எதிர்ப்பு சொல்பவர்கள்
அனைவரும் ஒரே ஒரு கருத்தை முன் வைக்கிறார்கள். அவர்கள் சொல்வதெல்லாம்
1975 ல் இருந்த இந்தியா வேறு.
2015ல் இருக்கும் இந்தியா வேறு.
*1975 ல் எமர்ஜென்சி அமுலுக்கு வந்தப்போது இருந்த சட்டங்கள் இன்று பல்வேறு மாற்றங்களுக்கும் திருத்தங்களுக்கும் உள்ளாகி இருப்பதை அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். (சிவப்பு நிறத்தில் என் மறுப்புரை)
Now Emergency can be imposed only “If the President is satisfied that a grave emergency exists whereby the security of India or of any part of the territory thereof is threatened whether by war or external aggression or armed rebellion...”

Second, an explanation added to Article 352(1) by the same constitutional amendment says if Emergency is to be declared before the actual occurrence of war, or external aggression or rebellion, the President has to be satisfied that there is imminent threat to the security of India or any part thereof by war or by external aggression or by armed rebellion. This additional constitutional safeguard was not there in June 1975.

நம் குடியரசுத்தலைவர் என்ன அவ்வளவு அதிகாரம் படைத்தவரா?
தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசுக்கு எதிராக முடிவு எடுக்கும் அதிகாரம்
குடியரசு தலைவருக்கு இருக்கிறதா..

மோதியின் காலத்தில் எப்படியும் ஒரு யுத்தம் நடக்கும்.இந்திய
சரித்திரத்தில் தன் பெயரை கல்வெட்டு போல எழுதிவைக்கத் துடிக்கும்
மோதி .. ஒரு யுத்தக்கால நெருக்கடியை உருவாக்க மாட்டார் என்பதற்கு
என்ன உறுதி சொல்ல முடியும்? அதுவும் அகண்ட பாரதக்கனவுகளைக்
கொண்ட இந்துத்துவ பின்புலம் உருவாக்கிய தலைவர் மோது என்பதை
நாம் மறந்து விட முடியாது.


* 1975 இந்தியாவின் தூரதர்ஷன் மட்டுமே இருந்தது. இன்று நூற்றுக்கணக்கான
செய்தி தொலைக்காட்சி ஊடகங்கள் 24 X 7  பல்வேறு மொழிகளில் . அத்துடம் இன்றைய  இந்தியாவில் 13700 பத்திரிகைகள் இந்திய மொழிகளில் வெளிவந்துக்கொண்டிருக்கின்றன.

இப்படியான உரிமைகள் நம் ஊடகங்களுக்கு இருப்பதாகவே 
நாம் நம்புகிறோம். ஆனால் எதை எழுதவேண்டும்., எதைக் காட்ட
வேண்டும், எதைக் காட்டினால் நம் வியாபாரத்திற்கு ஆபத்து வராது
என்று வணிகமயமாகி இருக்கும் ஊடகங்களுக்குத் தெரியும்..அவர்களுக்கு
இருக்கும் உரிகைகளின் எல்லைக்கோடு.



* இதற்கெல்லாம் மேலாக 1975 ல் இண்டெர்நெட் வசதிகளோ சமூக வலைத்தளங்களோ இல்லை.
இன்று இந்தியாவில் மட்டும் 243 மில்லியன் மக்கள் இண்டர்நெட் பயன்படுத்துகிறார்கள். (அட... இதில் நீங்களும் நானும் அடக்கம்!)
2018ல் இந்தியாவில் மட்டும் 550 மில்லியன் மக்கள்
 இண்டர்நெட் வசதிகளைப் பயன்படுத்துவார்கள்
 என்பதால் ஊடகங்களைக் கட்டுப்படுத்துவது 1975ல்
சாத்தியப்பட்டது போல இன்று சாத்தியப்படாது.
*அப்படியே மீறி இந்தியாவில் ஒரு இரும்புத்திரை கொண்டுவந்தாலும் நம்
புலம்பெயர் இந்தியர்கள் இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை
வெகு எளிதாக உலக அரங்கில் எடுத்துச் செல்ல முடியும்.

நம் பதிவுகள் கண்காணிப்பு வலையத்திற்குள் வந்துவிட்டால்,
நம் முகநூல் கணக்கு மூடப்படலாம். இப்படி சமூக வலைத்தளத்தில்
மறுக்கப்பட்டவர்களின் பட்டியலை நாம் அறிவோம்.
புலம்பெயர் இந்தியர்கள் எழுதுவார்கள் தான். ஆனால் அதை 
ஏற்றுக்கொள்வதும் கவனத்தில் கொண்டு செயல்படுத்துவதை
தீர்மானிப்பதும் அவர்களோ அவர்களின் எழுத்துகளோ அல்ல.
அப்படி ஒரு நிலை உண்மையில் இருக்கும் என்றால் 
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு எப்போதோ
நீதிவிசாரணை வந்திருக்குமே!



* இன்றைய இந்திய வாக்கு வங்கியில் கணிசமாக இருக்கும் 35 வயது, 25 வயது இளைய தலைமுறையிடம் இம்மாதிரியான ஒரு கடிவாளத்தைப் போட்டு தேர்தலில் வாக்குகளை இழந்துவிட எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் துணிவு இருக்காது.
*சமூக உரிமைகள் அச்சுறுத்தப் படும் போதெல்லாம்
 இந்தியாவின் நடுத்தர வர்க்கம் 2015 போராடுவதற்கு தயக்கம்
 காட்டாது. தன் எழுச்சியாக டில்லியில் நடந்த
பெண்ணின் பாலியல் வல்லாங்குக்கு எதிராகப் போராடிய நடுத்தர வர்க்கத்து
இளைஞர்கள் நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கிறார்கள்.

அப்போது இந்தியா காலனி ஆதிக்கத்தில் இருந்தது.
இன்றும் இந்தியா தங்கள் வொயிட்காலர் இளைஞர்களை 
காலனி ஆதிக்கத்திற்கு - தாராளமயத்திற்கு உருவாக்கிவிட்டது.
சுகமான வாழ்க்கை, பீஸா , கோக்.. என்று பழகிவிட்ட நம் இளைஞர்கள்
எந்தளவுக்கு போராட்ட குணம் உடையவர்களாக இருக்கிறார்கள்
என்று தீர்மானிப்பது அவ்வளவு எளிதல்ல. ஒரு டில்லி நிகழ்வை
வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த ஒரு சமூகத்தையும் பார்ப்பதோ
அல்லது அந்த நிகழ்வு வெளிக்கொண்டுவரப்பட்டதில் இருக்கும்
அரசியலைப் புரிந்து கொள்வதோ நடுத்தர வர்க்கத்தின் பொதுப்புத்திக்கு
இன்னும் சாத்தியப்படவில்லை.

(சிவப்பு வண்ணத்தில்அத்வானி கருத்துக்கு வைக்கப்படும் 
எதிர்வினைகளுக்கான மறுப்புகள் .. என் தரப்பிலிருந்து)

.. எங்கோ ஓரிடத்தில் ஏதோ ஒரு நெருடல்..
நானும் என் தோழியும் தினமும் இதைப் பற்றி ஒரு மணி நேரமாவது விவாதிக்கிறோம்.
எங்களுக்கும் சில கேள்விகள் இருக்கின்றன.
1)எமர்ஜென்சி 25வது வருடத்தைக் கூட பேசாத ஊடகங்கள் இன்று
எமர்ஜென்சி 40 வது வருடத்தைப் பற்றி ஒவ்வொரு பத்திரிகையும்
பேசுவது ஏன்?
2)அத்வானி எதையோ சொல்லமுடியாமல் குறிப்பாக சொல்லி இருப்பதன்
மர்மம் என்ன?
3) அத்வானியின் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக திட்டமிடப்பட்டே
குற்றவாளிகளாக.. அவர்கள் குற்றவாளிகளாக இருந்தாலுமே திடீரென கண்டுப்பிடித்தது
போல  இப்போது அடையாளம் காட்டப்படுவது ஏன்?
இதற்குப் பின்னால் இருக்கும் மவுனமான சூத்திரதாரி யார்?
4) எமர்ஜென்சி 40 என்று அண்மையில் கொண்டாடிய பிஜேபியின் விழாவுக்கு
அத்வானி ஏன் அழைக்கப்படவில்லை?
5) விழாவுக்கு தலைமை ஏற்ற  அமித் ஷா நிருபர்கள் கேட்ட இக்கேள்விக்கு
ஏன் பதில் சொல்ல மறுக்க வேண்டும்?

என்னவோ நடக்குது.. எங்கேயோ புகையுது..
அறிவிக்கப்படாத ஒரு எமர்ஜென்ஸி.. அமுலுக்கு வரலாம்.

No comments:

Post a Comment