Wednesday, February 1, 2023

CONDOM ... கெட்டவார்த்தை அல்ல.

 condom கெட்டவார்த்தையல்ல!



இதைப் பொதுவெளியில் பேச வேண்டுமா?
இப்போதும் இப்படியான எண்ணம் உங்களில் பலருக்கு
ஏற்படலாம். ஆனால் ஏன் பேசக்கூடாது?
ஒவ்வொரு நாளும் 42,700 கருக்கலைப்புகள் நடக்கின்றன.
அதில் 10 பெண்கள் மரணிக்கிறார்கள்.
காரணம் ஆண் மனதில் இருக்கும் சில தேவையற்ற
மீசை முறுக்குதலும் இதிலெல்லாம்தான் தங்கள் “ஆண்மை”
இருப்பதாக அவர்கள் நினைப்பதும்தான்.
சரி, நினைத்துவிட்டுப்போகட்டும்
ஆனால், இதனால் பாதிக்கப்படுவது பெண்களாக
இருக்கும்போது..!!!
பெண்ணுடல் கருக்கலைப்பை அனுபவிக்கிறது.
உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் அவள் சிதைக்கப்படுகிறாள்.
ஆண் பெண் உறவில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும்
திருமண உறவிலும் கருக்கலைப்பை சந்திக்காத
பெண்கள் வெகுசிலர். ஆணின் புரிதலற்ற
சில வறட்டுத்தன ங்களைச் சொல்லத்தான் வேண்டி இருக்கிறது.
கதை ஆணுறை பயன்படுத்துவது பற்றியது.
ஆணுறை பயன்படுத்தும் ஆண் அசிங்கமானவன்,
அது வெளியில் சொல்லக்கூடியதல்ல,
ஆணின் பெருமைக்கு அது இழுக்கு..
இத்தியாதி கருத்துகள் இப்போதும் இருக்கின்றன.
இச்சூழலில் மத்தியபிரதேசத்தில்
ஒரு குடும்பத்தின் இளைய மருமகள்
'காண்டம் 'தொழிற்சாலையில் வேலை செய்கிறாள்.
அதை வெளியில் சொல்ல தயக்கம்.
குடை தயாரிக்கும் கம்பேனியில்
வேலைப்பார்ப்பதாக பொய் சொல்ல வேண்டி இருக்கிறது.
அந்த வீட்டில் மூத்த மருமகள் கருக்கலைப்பை
அனுபவிக்கிறாள். காரணம் அவள் கணவனுக்கு
“ஆணுறை” என்பதே “கெட்டவார்த்தை”
மாணவர்களுக்கு பாடம் நட்த்தும்போது
ஆணுடல், பெண்ணுடல் சார்ந்த இப்பகுதியை
ஆசிரியர்கள் பாடமாக கற்பிக்கவும் விரும்புவதில்லை.
சிறுகுடல் பெருங்குடல் ஜீரணம் மட்டும் போதும்.
அதில் 10 மார்க் கேள்வி இடம்பெறும்.
அதை மட்டும் படித்தால் போதும் என்று
சொல்லிவிடுகிறார்கள்.
இதெல்லாம்தான் இப்போதும் தொடர்கிறது.
ஆண் பெண் உடல், அது குறித்த தெளிவைக் கற்பித்தால்
இருக்கிற ஒழுக்கம் எதுவும் கெட்டுப்போகாது.
பெண்களின் நாப்கின் கேர்ஃப்ரியை இப்போதும்
கடைக்காரர் வெளியில் தெரிந்துவிடக்கூடாது
என்று செய்தித்தாளில் பொதிந்துதான் தருகிறார்.
ஆணுறையை மெடிக்கல் ஸ்டோரில் வாங்குவதற்குள்
ஆணுக்கும் வேர்த்து விறுவிறுத்து
நாக்கு வறண்டுப் போய்விடுகிறது.! ஏன்???
நம் சமூகம் ஆண் பெண் உறவில் பொய்யாகவும்
தேவையற்ற பயங்களுடனும்…
திரைப்படம்
JANHIT MEIN JAARI. (பொதுநலன் கருதி )

No comments:

Post a Comment