Saturday, May 29, 2021

வைரமுத்து ONV விருது சர்ச்சைகள்

வைரமுத்துவுக்கு வக்காலத்து வாங்கும் பதிவல்ல.

(யாரும் அப்படி திசை திருப்பி விடாதீர்கள்)
அதை ஒட்டி எழுந்திருக்கும் உரையாடல் வெளியை
முன்வைக்கும் பதிவு..
ஆண் பெண் உறவு நிலையில் குடும்பம் என்ற
நிறுவனத்தின் கட்டமைக்கப்பட்ட ஒழுக்கவிதிகளை
யாருமே மீறியதில்லை என்று சொல்லமுடியுமா?
கலைஞன், கவிஞன் என்றால் அவர்களுக்கு
லைசன்ஸ் உண்டு.. என்று பொதுப்புத்தி ஏற்றுக்
கொண்டிருக்கும் ஆண்மைய கருத்துருவாக்கங்களால்
ஆனது நம் சமூகம. பொம்பள வேண்டாம்னா வேணும்னு அர்த்தம் என்று படுக்கையறை மந்திரங்களைச் சொல்லி ஏமாற்றமுடியாது!
எப்போதும் .. NO MEANS NO தான்.
வேண்டாம், முடியாது என்று
பெண் சொல்வதை ஆண் கேட்டுத்தான் ஆகவேண்டும்.
தன் செல்வாக்கு அதிகாரம் பணபலம் ஆள்பலம் என்று
எதைக் கொண்டும் அதை மீறுவது தலைகுனிவைத்தான்
ஏற்படுத்தும்.
தன் சுயலாபங்களுக்காக ஆணைப் பயன்படுத்திக்
கொள்ளும் பெண்களும் உண்டு,
இதுவும் இந்த நாணயத்தின் இன்னொரு பக்கம்.
தங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டவுடன் கொதித்தெழும்
மேல்தட்டு வர்க்க பெண்கள், சாதியின் பெயரால்
பெண்ணுடல் அனுபவிக்கும் வன் கொடுமைக்கு எதிராக
என்றைக்காவது ஒருமித்த குரலில் பேசி இருக்கிறார்களா?
என்று கேட்டால்..
அதற்கு மவுனம் தான் என் பதில்.
ஆனால் அதைப் பேசவில்லை என்பதாலேயே அவர்கள்
இன்று பேசும் எதையும் பொருட்படுத்த வேண்டியதில்லை
என்ற முடிவுக்கு வருவது.. அபத்தம்.
நம் சமூகம் சாதி சமூகம் தான்.
பெண்களும் அதில் விதிவிலக்கல்ல
என்ற புரிதலுடன் அதையும் கடந்து செல்ல வேண்டி இருக்கிறது.
“கண்ணதாசனுக்கு பல பெண்களுடன் தொடர்பிருக்கவில்லையா?”
“நீங்கள் போற்றும் அண்ணா நடிகை பானுமதி குறித்து
சொன்னது நினைவில்லையா?”
நண்பர்கள் என்னிடம் கேட்கிறார்கள்.
ஆனால் கண்ணதாசனும் அண்ணாவும்
சம்பந்தப்பட்ட பெண்ணின் விருப்பமின்றி
நடந்து கொண்டார்களா… ?
என்பதுதான் நாம் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது.
ONV அமைப்பு வைரமுத்துவுக்குக்கான விருது அறிவிப்ப
மறுபரிசீலனை செய்யப்போவதாக அறிவித்துவிட்ட
நிலையில் வைரமுத்து விருதை திருப்பி அளிப்பதாக
அறிவித்துள்ளார்..
“விருது பெறாமலேயே விருதை திருப்பி அளிப்பதாக
அறிவித்த வைரமுத்து…” என்று ஆனந்த விகடன்
எழுதுகிறது!
வைரமுத்து கவிதைகள் பிடிக்குமா?
வைரமுத்து மீதிருக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள்..
இவை எல்லாவற்றையும் தாண்டி…
இந்த விருது தமிழை எழுதியதால்..
தமிழில் எழுதியதால்..
வந்த விருது என்ற வகையில்..
தமிழும் தான் தலைகுனிந்து விட்ட தாக
கண்ணீர்விடும் கவிதைகளுக்கு
துடைத்துக் கொள்ள கர்சீப் கொடுக்கலாம்.
அவ்வளவுதான்.

1 comment

1 comment:

  1. நல்லது. இதை வைரமுத்து அவர்களின் பார்வைக்கு அனுப்பியிருக்கிறேன்

    ReplyDelete