Wednesday, May 19, 2021

CPI (M) மாநிலக்கட்சியாகிறதா?

 

CPI (M ) மாநிலக்கட்சி ஆகிறதா..
நிறம் மாறும் காட்சிகள்
கேரளாவில் மட்டுமே பொதுவுடமை அரசியல்..
ஒருவகையில் இன்றைய அரசியல் களத்தில்
கேரளாவில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கும்
பொதுவுடமைக் கட்சி அகில இந்திய கட்சியிலிருந்து
மா நில கட்சியாக இறங்கி இருக்கிறது.
இந்த இறக்கத்தில் இன்னும் சில சரிவுகள்
வெளிப்படையாகத் தெரிகின்றன.
எல்லா முடிவுகளுக்கும் அதிகாரத்திற்கும் பொலிட் பீரோ
முடிவு செய்யும் என்று தங்கள் ஜன நாயக கட்டமைப்பை
உரக்கப்பேசும் தோழர்கள்.. இன்று கேரள முதல்வர்
பினராயி விஜயனின் சில முடிவுகளைப் பற்றி
மவுனம் சாதிக்கிறார்கள்.
பொலீட் பீரோவாவது.. உங்கள் ஆலோசனையாவாது…
பினராயி ஒரு சூப்பர் மேனாக
தன்னைக் காட்டிக் கொள்கிறார்.
அதற்கு முதல் பலிகாடானது சைலஜாதான்!
அப்படி என்ன சைலஜா செய்துவிட்டார்?

அவர் சுகாதரத்துறை அமைச்சராக இருந்தப்போது
மிகச்சிறப்பாக செயல்பட்டவர். அவரைப் பாராட்டி
வாஷிங்க்டன் போஸ்ட் எழுதியதை
எல்லாம் தோழர்கள் கொண்டாடினார்கள்.
நிஃபா புயல் அழிவை மிகத் திறமையாக எதிர்கொண்டார்
என்று ஐரோப்பா விருது கொடுத்தது..
நடந்து முடிந்த தேர்தலிலும் மிக அதிகமான ஓட்டு
வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனைப் படைத்திருக்கிறார்.
இவ்வளவும் தோழர் சைலஜாவின் செயல்பாடுகள்.
ஆனாலும் அவருக்கு பினராயின் மந்திரிசபையில் இடமில்லை!

கட்சியின் அகில இந்திய செயலாளர்களாக இருக்கும்
சீதாரம் யெச்சூரியும் பிருந்தா கரத்தும் புதிய அமைச்சரவையில்
தோழர் சைலஜா டீச்சர் விலக்கப்பட்டிருப்பதை எதிர்த்து குரல்
கொடுத்திருக்கிறார்கள்.
ஆனாலும் பினராயின் முடிவு தான் இறுதியானது.
இப்போது சைலஜாவுக்கு “கொறாடா” பதவி..
இது சைலஜாவுக்கு இறக்கமா
அல்லது சிபிஎம்மிற்கா?
தோழர்கள் தான் அறிவார்கள்.
அப்புறம் இதிலே போய் பெண்ணியம், பெண்ணின் அரசியல்,
சமவாய்ப்பு, சம உரிமை இத்தியாதி எல்லாம்
நான் பேசவில்லை. .தோழர்களே.

(தகவல்கள் : மின்னம்பலம். நன்றி TSS மணி)

No comments:

Post a Comment