Monday, October 26, 2020

மநு விரோதி ?!!

 இந்துவாக இருக்கும் நான்

மநு விரோதியாகவும் இருக்க முடியுமா ?!!
“நான் மநு விரோதி”
போராட்டங்கள் பதிவுகள் ம நு பெண்களுக்கு எதிரி
இவை அனைத்தும் வைரலாக ஓடி முடிந்திருக்கிறது.
ஓடிய பிறகு இதை எழுதலாம் என்று காத்திருந்தேன்.
இதற்கு நடுவில் மனு எப்போதோ எழுதியது..
இதை இப்போது பேசுவது என்ன அரசியல் என்றும்
இந்துக்களை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்
என்றும் இன்னொரு தரப்பும் எழுத ஆரம்பித்திருந்த து
இன்னும் ரசனைக்குரியதாக மாறியது..
இதெல்லாம் இருக்கட்டும்…
இந்துவாக இருந்து கொண்டு
எப்படி மநு விரோதியாகவும் இருப்பது?
இந்தியச் சட்டம் யார் இந்து என்று சொல்கிறது?
யாரெல்லாம் கிறித்தவர் அல்லவோ
யாரெல்லாம் இசுலாமியர்கள் அல்லவோ
அவர்கள் எல்லாம் இந்துக்கள் “ என்று சொல்கிறது.
அப்படியானால் நான் இந்து அல்ல என்று
ஒரு கிறித்தவரோ அல்லது இசுலாமியரோ மட்டுமே
சட்டப்படி சொல்லமுடியும். அவர்களுக்கு மட்டுமே
அந்த அடையாளம் ( NON –HINDU) உண்டு.
அப்படியானால் நான் இந்துதான்.
நான் ஏற்றுக்கொண்டாலும்
ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் ..
இந்திய அரசியலமைப்பு சட்டப்படி
இந்து சட்டங்கள் என்னைக் கட்டுப்படுத்தும்.
அப்படியானால் ம நு ?
ஆம்.. ம நுவும் என்னைக் கட்டுப்படுத்தும்.
நம் சட்டத்தில் மநு எங்கே இருக்கிறார்?
எப்படி வந்தார்?
மநு நம் சட்ட த்தில் இப்போதும் வேறொரு
முகத்தில் இருக்கிறார்.
அந்த முகத்திற்கு “ CUSTOM OR USAGES “ என்று
சர்வ சாதாரணமாக சொல்லிவிடுகிறார்கள்.

என்ன நடந்திருக்கிறது இந்தியாவில்…
எல்லா நாடுகளிலும் சட்டம் அமுலுக்கு வரும்போது
அதற்கு முன்பிருந்த சட்டங்கள் காலாவதியாக்கப்பட்டு
புதிய அரசியலமைப்பு சட்ட த்தை அந்த தேசம்
முழுமையாக தனதாக்கி கொள்ளும்.
இந்தியா என்ன செய்த து?
பாபாசாகிப் அம்பேத்கர் கொண்டு வர விரும்பிய
அந்த திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்கிறதா?
அதாவது இந்தியச் சட்டம் அமுலுக்கு வரும்போது
இதுவரை இந்த நாட்டிலிருந்த பிற சட்டங்கள்
அனைத்தும் நீக்கப்படும்
That all the laws which were in force
till date of adoption of the Indian constitution..
Will stand ABOLISHED
அது நடக்கவில்லையே!
1967 ல் தமிழக அரசு கொண்டுவந்த
சுயமரியாதை திருமணச் சட்டம்,
இந்து திருமணச் சட்ட த்தின் 7 வது பிரிவின்
உட்பிரிவாக 7 (அ) சேர்க்கப்பட்டிருப்பது ஏன்?
என்று இன்றுவரை நாம் பேசவில்லை.
அதாவது 1956 ல் பார்ப்பன புரோகிதம் விலக்கிய
இந்து திருமணம் செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பு
வழங்கியதே, அதில் செய்யப்பட்ட திருத்தம் தான்
பார்ப்பன புரோகிதம் விலக்கிய திருமணமும்
இந்து திருமணமாக ஏற்றுக்கொள்ளப்படும்
என்று சேர்த்திருப்பது.
இன்னும் உடைத்து சொல்லவேண்டும் என்றால்
திராவிட இயக்கத்தின் வெற்றியாக கொண்டாடப்படும்
சுயமரியாதை திருமணமும் இந்து திருமணச் சட்ட த்தின்
இன்னொரு வகையாக வகைப்படுத்தப்
பட்டிருக்கிறது.. (சத்தமில்லாமல் )
any text, rule or interpretation of Hindu Law or any custom or usage
as part of that law.
அதாவது CUSTOM OR USAGE as part of the law.
இப்படித்தான் இந்திய அரசியலமைப்பு சட்டம்
அமுலுக்கு வந்தப் பிறகும் அதற்கு முன்பே இருந்த
சட்டங்களும் நீதிமன்றங்களில் உயிருடன்
வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
Custom is regarded as the third source of Hindu law. ...
As defined by the Judicial Committee custom signifies a rule
which in a particular family or in a particular class or district has
from long usage obtained the force of law.
நான் அறிந்தவரை இந்த பிரச்சனை குறித்து
சிந்தனையாளன் பத்திரிகை ஆசிரியர்
அய்யா. வே. ஆனைமுத்து அவர்கள் பல்வேறு கட்டுரைகள்
எழுதி இருக்கிறார். தமிழுலகில் வேறு யாரும்
இச்சட்டப்பிரச்சனையை முன்வைத்து பேசுவதில்லை.
இந்திய அரசியலமைப்பு படி
இந்துவாக இருக்கும் நான் ,
மநு விரோதியாகவும் இருக்க முடியுமா?
இப்போராட்டத்தை முன்னெடுத்த மதிப்பிற்குரிய வி.சி
மற்றும் தோழர்கள் இந்த CUSTOM or USAGE குறித்து
இன்னும் ஆழமாகவும் ஆக்கப்பூர்வமாகவும்
அடுத்தக் கட்ட நகர்வை நோக்கிச் செல்வார்களா ?
(மேற்கண்ட விவரங்கள் குறித்து
சட்ட வல்லுனர்கள் திருத்தம் இருந்தால்
ஆதாரத்துடன் முன்வைக்கலாம்.)

3 comments:

  1. அருமையான வினாவுடன் கூடிய சிந்தனை

    ReplyDelete
  2. சரியான கேள்விதான்.பகிர்கிறேன்

    ReplyDelete
  3. நானும் தமிழர் திருமண முறையில் (சுயமரியாதை திருமணம்) செய்து இருந்தாலும் இன்னும் திருமண பதிவு செய்யாமல் இருக்க இந்த சட்ட சிக்கலை காரணம் special marriage Act யில் பதிவு செய்ய இன்னும் முயற்சித்து வருகிறேன் - srithar tamilam

    ReplyDelete