Monday, January 27, 2020

காணாமல் போன பஞ்சமி நிலங்கள்

காணாமல் போன பஞ்சமி நிலங்கள்..
தமிழகத்திற்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலம்
12 லட்சத்து 61 ஆயிரத்து 13 ஏக்கர் .
தற்போது தமிழக அரசு ஆவணப்படி
பஞ்சமி நிலம் 1,26,113. ஏக்கர்.
காணாமல் போனது 10 லட்சத்து 73 ஆயிரத்து
887 ஏக்கர் நிலம்**
ஆட்டையைப்போட்டது யாரு..?!
இவ்வளவு நிலங்களும் இன்று யார் யார் கையில்
இருக்கின்றன? இதை எந்த ஒரு அரசாங்கமும்
கண்டுப்பிடிப்பது கடினம் அல்ல.
என்னதான்.. அதிமுக அரசு திமுக வைக் குறை
சொல்லட்டும்.. திமுக மேடைகள் அதிமுக வை
குறை சொல்லட்டும்.. இப்படி மாறி மாறி
ஆட்சி அதிகாரத்திலும் எதிர்க்கட்சியாகவும்
இருந்த இருக்கின்ற அதிமுக மற்றும் திமுக
இவர்களுடன் கூட்டணி வைத்துக்கொள்ளும்
சகல கட்சிகளும்… எக்காரணத்தைக் கொண்டும்
ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்கவே
மாட்டார்கள்..
தமிழ் நாட்டிலிருக்கும் மத நிறுவன ங்கள், பெரும்
வணிக நிறுவன ங்கள், அரசியல் கட்சிகளின்
சொத்துகள் எல்லாமே பஞ்சமி நிலத்தின்
பட்டாவில் தான் நிற்கின்றன.
ஒருவகையில் இதெல்லாம் பங்காளிச்சண்டைகள்
மாதிரிதான்..
பாவம்.. பொதுஜனங்கள் தான்..
ஆனாலும் ரொம்பவும் அசாத்தியமான நம்பிக்கை
நம்ம ஆட்களுக்கு உண்டு.
அசுரன் பார்த்துவிட்டு .. தனுஷ் நடிப்பைப் பார்த்து
விட்டு .. பஞ்சமி நிலம்.. அது இதுனு பேச
ஆரம்பித்து தனுஷ் அடுத்தப் பட்த்திற்கு மேக்கப்
போடறமாதிரி நம்ம ஆட்களும் அடுத்த டாபிக்
சீரியஸ்னஸ்க்கு மாறிடறோம்.. இதெல்லாம்
நல்லா தெரிஞ்சி வச்சிக்கிட்டு தான்யா
நம்ம நாட்டில.. இம்புட்டு பகற்கொள்ளைகள்
நடக்கின்றன.
என்னவோ போ.. சரவணா..
அர்ச்சகன் பொறுக்கித்தின்ன கோவில்
அதிகாரி பொறுக்கித்தின்ன அரசாங்கம்
அயோக்கியன் பொறுக்கித்தின்ன அரசியல்..
பொறுக்கித்தின்ன தெரிந்தவன் தான்
பிழைக்கத்தெரிந்தவன்..
அதைக் கேள்வி கேட்பவனெல்லாம்
பரதேசி.. உருப்படாத ஜென்மங்கள்..
நான் உட்பட..
(** ஆதாரம் சிந்தனையாளன் பொங்கல்மலர் 2020)

No comments:

Post a Comment