Friday, January 4, 2019

ஸ்டாலினா கனிமொழியா

Image result for உதய நிதி ஸ்டாலின் திமுக
உடன்பிறப்புகளுக்கு இது சோதனைக்காலம்!
திருவாரூர் தொகுதியில் எப்படியும் திமுக
வெற்றி பெற்றே ஆக வேண்டும்!
திமுக வின் இமெஜ் இந்த  இடைத்தேர்தலின்
முடிவில் இருக்கிறது என்பது இடைத்தேர்தல்
வரலாற்றில் இன்னொரு திருப்புமுனை..
குடும்பத்தில் சிலரின் பெயர்கள் அடிபட்டன.
இதோ… அதிகாரப்பூர்வமான வேட்பாளர்
அறிவிக்கப்பட்டுவிட்டார். தேர்வு செய்யப்பட்டிருக்கும்
வேட்பாளர் அறிவிப்பு உடன்பிறப்புகளுக்கு ஒரு
நிம்மதியை தற்காலிகமாகத் தந்திருக்கும்.
(எனக்கும்  தான்!)
உதய நிதி ஸ்டாலின், திமுக வின் இளைய கலைஞர்
என்றெல்லாம் அறிவிக்கப்பட்ட தும் '
மேடையில் இடம் கொடுக்கப்பட்ட தும் 
ஏன் அவர் கையாலேயே
விருதுகள் கூட வழங்கப்பட்ட தும்.. 
இதெல்லாம்..
உதய நிதி என்ற தனி நபர் செய்த தல்ல!
தொண்டர்களிடையே இக்காட்சிகள்
 மன உளைச்சலையும்
முணுமுணுப்பையும் ஏற்படுத்தியதையும்
 தலைமை அறியும்.
இந்தக் காட்சிகள் அரங்கேறி கொண்டிருந்தப் போது
இதை ஏன் வெளிப்படையாக உங்கள்
 பொதுக்குழு கூட்ட த்தில்
பேசுவதில்லை என்பதற்கு 
அவர்களிடம் பதில் இல்லை.
பொதுவாக பொதுப்புத்தியில் 
அதிமுக கட்சியினர் அனைவரும்
“அம்மாவின் அடிமைகள்” என்ற பிம்பம் மிக எளிதாக
உருவாக்கப்பட்டுவிட்ட து. 
அவர்களும் அம்மா போன
கார்த்தட த்தை காத்திருந்துக் கும்பிட்டவர்கள் தான்.
அவர்களை அடிமைகள் என்று சொன்னவர்கள்
இதை எல்லாம் வெளியில் புலம்புகிறார்களே தவிர
ஏன்  தங்கள் கட்சியில் வெளிப்படுத்துவதில்லை!
கொத்தடிமைகளாக வாய்மூடி இருப்பது ஏன்?

உதய நிதி.. திருவாரூர் தொகுதியில் தீயா
புகுந்து தேர்தல் வேலைச் செய்யப்போகிறார்.
தாத்தாவின் மறைவில் ஏற்பட்ட இடைத்தேர்தலைப்
பேரன் தன் சிம்மாசனத்திற்கான துருப்புச் சீட்டாக
மாற்றும் திட்டங்கள் உண்டு.
திரு ஸ்டாலின் அவர்களுக்கும் திருவாரூர் தேர்தல்
வாழ்வா சாவா தான். எப்படியும் திமுக வெற்றி பெறும்
என்ற நம்பிக்கை இருக்கிறது என்றாலும்…
கவனிக்க வேண்டிய சில புள்ளிகள்…
பல ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் திமுக என்ற
மாபெரும் அரசியல் கட்சியின் தலைமைப் பதவிக்கு
வந்திருக்கும் திரு ஸ்டாலின் அவர்களுக்கு பிரச்சனையே
கட்சியோ எதிர்க்கட்சியோ அல்ல. அல்லவே அல்ல.
அவரைச் சுற்றி இருக்கும் அவர் குடும்பமும் கிட்சன்
கேபினட்டும் மட்டும் தான்!
இதை அவர் கட்டுக்குள் கொண்டுவரத் தவறினால்..
அவரிடமிருக்கும் கட்சியின் தலைமை தானாகவே
திருமிகு.கனிமொழி கரங்களுக்குப் போய்விடும்.
கனிமொழியின் புதல்வர் அரசியலுக்கு வர
இன்னும் சில காலம் இருக்கிறது என்பதால்
இப்போதைக்குப் பிரச்சனை ஏற்படாது.

சுடலைஆண்டவா..தொண்டர்களைக் காப்பாற்று.

1 comment:

  1. சுடலை ஆண்டவர்தான் மக்களை காப்பாற்ற வேண்டுமா ?

    ReplyDelete