Tuesday, January 8, 2019

இலக்கியத்தில் தாதாகிரித்தனம்



இலக்கியத்தில் தாதாகிரித்தனம்...
குண்டர்கள் தீர்மானிக்கிறார்கள்
இலக்கிய விழாக்களின் தலைமையை
91 வயதான மூதாட்டி.. Nayantara Sahgal
அப்பெண் மராத்திய இலக்கிய விழாவுக்கு
சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார்.
ஆனால் ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருக்கும்
அவர் மராத்தி இலக்கிய நிகழ்வுக்கு எப்படி
அழைக்கப்படலாம் என்று இங்கிருக்கும்
லோக்கல் அரசியல் பயமுறுத்தியதால்
காரணம் எதுவும் சொல்லாமல்
அப்பெண்ணை விரும்பி அழைத்தவர்கள்
இப்போது “வந்துவிடாதே” என்று கடிதம்
அனுப்பிவிட்டார்கள்..
யார் இந்தப் பெண்?
இவர் அரசியல் குடும்பத்தில் பிறந்தவர்
என்றாலும் அரசியல் பின்புலத்தை மட்டும்
வைத்துக்கொண்டு எழுத வந்தவர் அல்ல.
நேருவின் உடன்பிறந்த சகோதரி விஜயலட்சுமி
பண்டிட்டின் மகள் தான் இவர். ஆனால் இந்திரா
காந்தியின் ஒற்றை அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்திய
அக்குடும்பத்தைச் சார்ந்தவர்.
அதனால் தான் இந்திராகாந்தி
இத்தாலிக்கு தூதுவராக பதவி ஏற்க இருந்தவரை
தான் பிரதமரானவுடன் தன் அத்தைமகளின்
பதவியை ரத்து செய்தார்..
1986 ல் , Rich Like Us – எங்களைப் போன்ற செல்வந்தர்கள்
 என்ற நாவலுக்காக
சாகித்திய அகதெமி விருது பெற்றவர். 
ஆனால் 2015 ல் மதவாதிகளால்
படுகொலை செய்யப்பட்ட நரேந்திர தபோல்கர், 
கோவிந்த் பன்சாரே ஆகியோரின்
படுகொலையை எதிர்க்கும் வகையில் தனக்கு
 வழங்கப்பட்ட சாகித்திய அகதெமி
விருதை திருப்பிக் கொடுத்தவர்… “
உறவுகள்” என்ற தலைப்பில் அவர்
எழுதிய எழுத்துகள் பெண்ணிய தளத்திலும் சமூக தளத்திலும்
அதிர்வலைகளை உருவாக்கியவை.
அவராகவே எவரிடமும் தன்னை அழைக்கச்சொல்லவில்லை.
ஆளுமைமிக்கவராகவும் கம்பீரமாகவும் தன் எழுத்துகளில்
வாழ்ந்துக் கொண்டிருப்பவரை அழைத்தவர்கள், அதுவும்
பிஜேபி முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அவர்களுடன்
கலந்து கொள்ள இருந்த துவக்கவிழா நிகழ்வு இது.
சொல்லப்பட்ட ஒரே காரணம்… அவர் ஆங்கிலத்தில்
எழுதுகிறார் என்பது மட்டும் தான்!
அவர் வரவை எதிர்த்தவர்களின் வாரிசுகள்
ஆங்கிலப்பள்ளியில் படித்தவர்கள்,
 படித்துக்கொண்டும் இருப்பவர்கள்.

இலக்கியத்தில் அரசியல் இருக்கலாம்.
இருக்க வேண்டும்.
ஆனால் அரசியல் கட்சிகளின் அதிகாரம்
இருக்க கூடாது.
இலக்கிய நிகழ்வுக்கு யாரை அழைப்பது
யாரை அழைக்க கூடாது என்பதை
 தீர்மானிக்க வேண்டியது இலக்கியவாதிகள்
தானே தவிர அரசியல் கட்சிகள் அல்ல.

No comments:

Post a Comment