Friday, January 27, 2017

பூவிதழின் ஓசை




வற்றிப்போன தாமிரபரணி
வாடிப்போன நெச்சி இலைகள்
நீச்சலடித்த கன்னடியன் கால்வாய்
சடுகுடு ஆடிய தாராவி கடற்கரை
சீட்டுக்கட்டாய் சரிந்து சரிந்து 
எதுவும் எதுவுமின்றி பழகிப்போன பயணம்
பத்தமடை பாயில் படுத்துக்கொண்டே
நீச்சலடிப்பதில் மூச்சுத் திணறுகிறது.
இன்னும் விடியாதப் பொழுது
பூவின் இதழ்கள் உதிரும் ஓசையில்
களைந்துவிடுகிறது வேர்களின் மெளனம்

3 comments:

  1. அருமை. நெச்சியா? நொச்சியா?

    ReplyDelete

  2. நொச்சி தான். டச் கீ மயக்கத்தில் நெச்சி ஆன மாயத்தை..

    ReplyDelete