Friday, June 6, 2014

குறிஞ்சி




எல்லாவற்றையும் எழுதிவிடலாம் என்று
நினைத்தவுடன்
என்னைச் சுற்றி வட்டமிடுகின்றன
வல்லூறாய் உன் பார்வைகள்.

உயிருடன் கொத்தித்தின்னக் காத்திருக்கின்றன
கூர்மையான ஆயுதங்களுடன்.
மெதுவாக இருட்டில் நகர்ந்து
சிதறிக்கிடக்கும் எழுத்துகளைச் சேகரித்து
மேகக்கூட்டத்தில் மறைத்து வைக்கிறேன்.
என்றாவது
இடியுடன் கூடிய கார்காலத்தில்
மின்னல் வெளிச்சத்தில்
நட்சத்திரங்கள் தோற்றுப்போன 
நள்ளிரவில்
வழிப்போக்கனாய் வந்தவன்
பார்க்கலாம், வாசிக்கலாம், தேடலாம்
கோடுகளிலும் புள்ளிகளிலும்
நான் புதைத்து வைத்திருக்கும்
ரகசியங்களை.

     (என் கவிதை நூல் ஐந்திணையிலிருந்து )

No comments:

Post a Comment