Wednesday, August 14, 2019

சுதந்திர இந்தியாவின் இரத்தக் கறைகள்



சுதந்திர நாளின் இரத்தக் கறைகளுடன்
“At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom,” announced Nehru, India’s first prime minister. (1947)
இந்த விடுதலையின் இன்னொரு பக்கத்தில்
ரத்தக் கறைகள்.
அழுகிய பிண நாற்றம்.
மரண இரயிலின் பயணம்.
Image result for india partition
கடந்த நூற்றாண்டின் மிக முக்கியமான வரலாற்று நிகழ்வு இந்தியப் பிரிவினை..
மிக அதிகமான எண்ணிக்கையில் மக்கள் தங்கள் வாழ்விடம் விட்டு நகர்ந்த / துரத்தப்பட்ட ரத்தக்கறைகளுடன் தான் இந்திய சுதந்திரத்தின்
வரலாறு எழுதப்பட்டிருக்கிறது.
பிரிட்டிஷ் இந்தியா பிரிக்கப்பட்ட போது மதச்சார்பற்ற இந்தியா ‘யூனியன் ஆஃப் இந்தியா’ என்றும்; முஸ்லிம்களின் பாகிஸ்தான் ‘டொமினியன் ஆஃப் பாகிஸ்தான்’ என்றும் பிரிந்தன. இந்த இரண்டையும் பிரிக்கும் எல்லைக்கோடுதான் ராட்கிளிப் கோடு. அதை உருவாக்கிய ராட்கிளிப்பின் பெயரால் அது அழைக்கப்பட்டது.
இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டபடி பிரிக்கப்பட்ட பகுதிகளில் பஞ்சாப்,வங்காளம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட சோகம் அந்த மக்களின் வாழ்க்கையில் சொல்லொணா துயரத்தை எழுதி இருக்கிறது.
இந்தியா பக்கம் இருக்கும் முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தான் பகுதியில் இருக்கும் இஸ்லாமியர் அல்லாதவர்கள் இந்தியாவுக்கும் இடம் பெயர வேண்டும்.மொத்தம் ஒரு கோடியே 45 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்தார்கள்.1951ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி சுமார் 72 லட்சத்து 27 ஆயிரம் முஸ்லிம்கள் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குக் குடி பெயர்ந்தார்கள் என்று பாகிஸ்தான் தெரிவித்தது. அதே போல 1951 ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி இந்துக்களையும், சீக்கியர்களையும் சேர்த்து பார்க்கும்போது சுமார் 72 லட்சத்து 96 ஆயிரம் பேர் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குக் குடிபெயர்ந்தார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் விரும்பி இந்த இடப்பெயர்ச்சியை ஏற்றுக்கொள்ளவில்லை. உண்மையைச் சொன்னால் அவர்கள் துரத்தியடிக்கப்பட்டார்கள். பலர் உயிருக்குப் பயந்து ஓடி வந்தார்கள். இது இரு தரப்பு மக்களுக்கும் பொருந்தும்.
இந்தியப் பிரிவினையில் இறந்தவர்கள் 4 லட்சம் பேர் என்று வைத்துக்கொண்டால், அவர்களுள் 2 லட்சம் பேர் முஸ்லிம்கள்; சற்றொப்ப இறந்தவர்களில் சரிபாதிக்கு மேலானவர்கள் இசுலாமியர்கள்.. சுமார் 75 ஆயிரம் பெண்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டார்கள்.
பிரிவினை பூகம்பம் பஞ்சாபை மிக மோசமாகப் பாதித்து உலுக்கியெடுத்தது. இடம் பெயர்ந்த ஒரு கோடியே 45 லட்சம் பேரில் சுமார் ஒரு கோடி பேர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள்.பிரிவினை வன்முறைகளின் போது உயிர் இழந்தவர்களில் மிகுதியானவர்களும் அவர்கள்தாம்.
இந்தியப் பிரிவினைக்கு யார் பொறுப்பு?
ஜின்னா மட்டும் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று கற்பிக்கப்படுவது வரலாற்றின் ஒரு பக்கத்தை இருட்ட டிப்பு செய்துவிடும். 
ஜின்னா, நேரு, நேஷனல் காங்கிரசு , இந்துத்துவ அமைப்புகள் , பிரிட்டிஷ் அரசாங்கம் எல்லோரும் தான் காரணம். 
இது நடந்த து சரியா என்பதற்கு அப்பால்…
இது நடந்த விதம் மிகவும் அதிர்ச்சிக்குரியதாகவும்
சமூக அரசியலையும் பொதுஜன உளவியலையும்
புறம் தள்ளிய அதிகாரத்தின் முகமாகவும் இருக்கிறது.
பிரிவினையைத் தவிர்த்திருக்க முடியாது. பிரிவினைக்குப் பிறகு இரு பிரதேச மக்களும் இடம் பெயர்வதற்கான கால அவகாசத்தை ஒரு உடன்படிக்கை வாயிலாக சாத்தியப்படுத்தி இருக்கலாம். இடப்பெயர்வு கலவரமின்றி
அமைதியாக நடைபெற இரண்டு நாடுகளும் ஒத்துழைத்திருந்தால் இன்றைய விரோத மனப்பான்மை ஆரம்பத்திலேயே முறியடிக்கப்
பட்டிருக்கும். 
இப்படியான ஒரு திட்ட த்தை அன்று இராஜாஜி அவர்கள் முன்வைத்திருக்கிறார். 
C R FORMULA என்று தேடினால் அதைப் பற்றிய விவரங்கள் கிடைக்கின்றன.
சி.ஆர் ஃபார்முலாவில் முதல் திட்டமே இடைக்கால அரசு தான். 
அப்படி ஒரு திட்டமிடலுடன் பிரிவினை நடந்திருந்தால்…
இந்திய சுதந்திரத்தின் ரத்தக்கறைகளாவது இல்லாமல் இருந்திருக்கும்.
எது நடந்ததோ அதை இனி ஒன்றும் செய்துவிட முடியாது.
ஆனால் அது இவ்வளவு கொடூரமாக நடந்திருக்க வேண்டாம். அதற்கான விலையை நாம் இன்றுவரை
கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
அந்த மரண இரயிலில் உறங்கிப்போன
கனவுகளுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Sunday, August 11, 2019

கண்ணா.. நீ தான் மோதிஜியா இல்லை



Image result for modi as krishna
மழைக்கால பாராளுமன்ற சிறப்பு பட்டிமன்றம்..
கண்ணன் யார்?
காண்டீபன் யார்?
அமித்ஷாவா ? மோதிஜியா!
காணத்தவறாதீர்கள்..
......
கண்ணா .. நீயும் மோதியா இல்லை
நீ தான் அமித்ஷாவா..
காஷ்மீர் மாறினால் கெளரவம் மாறுமா – நெவர்
கண்ணா நீயும் மோதியா இல்லை 
நீதான் அமித்ஷாவா
அறிவைக் கெடுத்ததோ தேர்தலின் கெளரவம்
அவர் மேல் தொடுத்ததோ அர்ஜூனன் கெளரவம்
நடந்தது அந்த நாள்
முடிந்ததா பாரதம்
நாளைய பாரதம் யாரதன் காரணம்?
ஹே.. கண்ணா
மூன்றடி மண் கேட்டான் வாமனன் உலகிலே
மூன்றென வைத்ததோ மக்களின் தலையிலே
வளர்த்த மக்களோ வெள்ளத்தின் பிடியிலே
மாறும் அவதாரமே அதுதான் உலகிலே
ஹே கண்ணா…
மக்களின் கெளரவம் தேர்தலின் முடிவிலே
மரிக்கின்ற உரிமையோ உங்களின் வடிவிலே
ஆகட்டும் பார்க்கலாம் ஆட்ட த்தின் முடிவிலே
இருவரும் ஆடினால் நீதி வெல்லுமோ உலகிலே
காலம் மாறினால் கெளரவம் மாறுமா
மக்களின் கனவுகள் மரித்து தான் போகுமா.. 
நெவர்..
ஹே கண்ணா..
நீயும் மோதியா இல்லை நீதான் அமித்ஷாவா..
நெவர்..

Thursday, August 8, 2019

காஷ்மீர் - லடாக் கின் குரல்

  Image result for ladakh mp

லடாக் தொகுதி மக்களவை உறுப்பினர் இனமான போராளி ஜம்யங் செரிங் நேம்ஜியலினார் அவர்கள் ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை.

தோழரின் உரையை தமிழில் மொழி பெயர்த்த நெறியாளர் ஜெயகுமார் ஸ்ரீநிவாசன் அவர்களுக்கும், மொழி பெயர்ப்பு கட்டுரையைப் பிரசுரித்த நடுநிலை பத்திரிகை வலம் மாத இதழின் ஆசிரியருக்கும் நெஞ்சார்ந்த நன்றி

"பண்டிட் ஜவாஹர்லால் நேருவின் தவறான முடிவினால் நேர்ந்த பிழையை இன்றைய அரசாங்கம் சரிசெய்துள்ளது. அதை நாங்கள் வரவேற்கிறோம். இங்கே பேசிய பலரும் லடாக்கிலே, கார்கிலிலே என்று பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் லடாக் என்றால் என்னவென்று தெரியுமா? கார்கில் என்றால் என்ன என்று தெரியுமா? இவற்றின் முழு விவரம் தெரியுமா?

இப்படிப் பேசிய பலரும் லடாக்கைத் தூக்கி ஓரமாகப் போட்டிருந்தார்கள். அங்கே உண்மையில் என்ன நடந்தது, என்ன நடக்கிறது என்று கொஞ்சம் கூடக் கவலைப்படவில்லை. இதே நாடாளுமன்றத்தில், லடாக்கில் புல் கூட முளைப்பதில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். லடாக்கின் மொழி, உணவு, கலாசாரம், வேலைவாய்ப்பு, வாழ்க்கை முறை எல்லாம் அவர்களுக்குத் தெரியுமா? லடாக்கைக் குறித்துப் பேசிய அவை உறுப்பினர்களில் எத்தனை பேர் நேரில் லடாக்கை பார்த்திருக்கிறார்கள்? அவர்களுக்குத் தெரிந்த லடாக்கெல்லாம் புத்தகங்களில் வாசித்த லடாக் மட்டுமே.

லடாக் கடந்த 71 வருடங்களாக யூனியன் பிரதேசமாக மாற போராடிக்கொண்டிருக்கிறது. 1948ல் உருவான லடாக் ஜனசங்கத்தின் தலைவர், நேருவிடம் லடாக்கை, தனி யூனியன் பிரதேசமாக மாற்ற கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையில் லடாக்கை யூனியன் பிதேசமாக மாற்றுங்கள் அல்லது இந்தியாவின் இதர பகுதிகளோடு இணையுங்கள்; ஆனால் ஜம்மு காஷ்மீரோடு மட்டும் இணைத்து விடாதீர்கள் என்று கோரியிருந்தார். அன்றைய நேரு அரசாங்கம் எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல, அதைப்பற்றி யோசிக்கக்கூட தயாராக இல்லை.

காஷ்மீரத்தோடு சேர்த்ததால்தான் எங்கள் மொழி, வாழ்க்கை, கலாசாரம், வளர்ச்சி எல்லாம் தடைபட்டுப்போனது. பெரு மரியாதைக்குரிய டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, ஜம்மு காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து கொடுப்பதை எதிர்த்ததோடு, லடாக் ஜம்மு காஷ்மீரோடு இணைக்கப்படக்கூடாதென்றும் போராடினார். அவரை நாங்கள் இன்று நன்றியோடு நினைவுகூர்கிறோம்.

இன்னொன்றையும் மறந்துவிடாதீர்கள். பாகிஸ்தானோடு நடந்த அனைத்துப் போர்களிலும் லடாக் தனது பங்களிப்பையும் பலிதானத்தையும் இந்திய நாட்டிற்காக வழங்கியுள்ளது. 1948, 1972 மற்றும் 1999 வருடங்களில் நடந்த அனைத்துப் போர்களிலும் லடாக் மக்கள் தங்கள் இன்னுயிரை அளித்திருக்கிறார்கள். இதற்குக் காரணம் லடாக்கியர்கள் இந்தியாவைத்தான் தனது நாடாகக் கருதினார்கள். தங்களை இந்தியர்களாகத்தான் கருதினார்கள். இந்தியாவுக்கே தங்கள் வாழ்வையும் சாவையும் அர்ப்பணிக்க ஆசைப்பட்டார்கள். ஆனால் எங்கள் விருப்பத்திற்கு மாறாக வலுக்கட்டாயமாக ஜம்மு காஷ்மீரோடு இணைக்கப்பட்டோம்.

மரியாதைக்குரிய காஷ்மீரைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏ இவற்றை நீக்குவதால் என்னாகிவிடும் என்று கேட்டார். இதற்கு என்னுடைய பதில், இந்தச் சட்ட பிரிவுகள் நீக்கத்தால் மக்களுக்குச் சேரவேண்டிய பணத்தை, இரு குடும்பங்கள் மட்டுமே பிடுங்கித் தின்பது நிற்கும். மற்றும் ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகியவை வளர்ச்சி பெறும். அதே உறுப்பினர்கள் இனி கார்கில் என்ன ஆகும் என்றெல்லாம் கவலை தெரிவித்தனர். ஆனால் கார்கிலின் 70% மக்கள் யூனியன் பிரதேசமாக ஆவதை முழு மனதுடன் வரவேற்கிறார்கள். 2014 தேர்தல் அறிக்கையிலேயே யூனியன் பிரதேசமாக மற்றுவதை சேர்க்கச் சொல்லியிருந்தோம். 2019 தேர்தல் அறிக்கையிலும் இதே கோரிக்கையைச் சேர்க்க வைத்தோம்.

கார்கில் மற்றும் லடாக்கின் ஒவ்வொரு கிராமத்தின் ஒவ்வொரு வீடுகளிலும் (பெளத்தர்கள், கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள் என்ற பாகுபாடில்லாமல் அனைவரிடமும்) சென்று யூனியன் பிரதேசமாக ஆவதின் அவசியத்தையும், நன்மையையும் எடுத்துச் சொல்லியிருந்தோம். அவர்கள் அனைவரும் ஒருமனதாகவும் முழுமனதாகவும் இதுவரை லடாக் பகுதியிலிருந்து தேர்வான பாராளுமன்ற உறுப்பினர்களைக் காட்டிலும் அதிகபட்ச வாக்குவித்தியாசதில் என்னை அவைக்கு அனுபிவைத்துள்ளனர். மக்கள் பாரதப் பிரதமர் திரு. மோதியை முழுமையாய் நம்பினார்கள். இந்தத் தனி யூனியன் பிரதேசத்து அறிவிப்பை முழுமனதுடன் வரவேற்கின்றனர்.

கார்கிலைப் பற்றிப் பேசும் அவை உறுப்பினர்களுக்கு கார்கிலைப் பற்றி என்ன தெரியும்? நாடாளுமன்ற கூட்டுக் குழு ஜம்மு மற்றும் காஷ்மீருக்குச் சென்றனர். மதிப்பிற்குரிய உள்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் லே வந்திருந்தார். அப்போது அவர் கேட்ட ‘உங்களுக்கு என்ன வேண்டும்?’ என்ற கேள்விக்கு, லடாக்கைத் தனி யூனியன் பிரதேசமாக மாற்றுங்கள் என்பதே எங்கள் கோரிக்கையாக இருந்தது. வேறு என்ன வேண்டும் என்ற கேள்விக்கு, ‘லடாக்கைத் தனி யுனியன் பிரதேசமாக மாற்றுவது மட்டுமே எங்கள் கோரிக்கை; வேறு எதுவும் வேண்டாம்’ என்றோம். லடாக்கின் அனைத்து மத அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் அனைவரும் ஒரே குரலில் லடாக்கைத் தனி யூனியன் பிரதேசமாக ஆக்க கையெழுத்திட்டு மனு அளித்தோம். இந்த மனுவில் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் கையெழுத்திட்டிருந்தன. ஆனால் ஜனநாயகம் பேசும் காங்கிரஸ் என்ன செய்தது? அம் மனுவில் கையெழுத்திட்ட காங்கிரஸ் தலைவர்களை உடனடியாக கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டது. இதுதானா உங்கள் ஜனநாயகம்? இதுதானா உங்கள் பேச்சுரிமை?

நேற்று (5-8-2019) காலை 11 மணியிலிருந்து சபை உறுப்பினர்கள் பேசுவதைக் கேட்டுகொண்டிருக்கிறேன். இந்த சட்டப்பிரிவுகளை நீக்குவதால் காஷ்மீர மக்களின் நிலைமை என்னாகும், அவர்களின் உரிமை என்னாகும் எனத் தொண்டை கிழிய கத்திக்கொண்டிருந்தனர். இந்த அவை மூலமாக அப்படிப் பேசுபவர்களைப் பார்த்துக் கேட்கிறேன். அவர்கள் மூலமாய் ஜம்மு காஷ்மீரத்தை ஆட்சி செய்பவர்களைப் பார்த்துக் கேட்கிறேன். இந்திய அரசாங்கத்திடம் இருந்து வரும் பணம் ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக்கிற்கான பணம். ஆனால் நீங்கள் லடாக்கின் வளர்ச்சிக்கு என்ன செய்தீர்கள்? லடாக்கிற்கான பணத்தையும் சேர்த்து காஷ்மீருக்குச் செலவு செய்தீர்கள். இதுவா உங்கள் சம உரிமை?

அடுத்ததாக, ஜம்மு மற்றும் காஷ்மீரத்திற்கு இரு தலைநகரங்கள். குளிர்காலத் தலைநகரம் மற்றும் கோடைகாலத் தலைநகரம். அதில் லடாக்கிற்கான பிரதிநிதித்துவம் என்ன என்பதைப் பாருங்கள். தலைமைச் செயலகத்தில் 1000 வேலை வாய்ப்புகள் உருவாகிறதெனில் காஷ்மீரிகள் எடுத்துக்கொண்டது போக, ஜம்மு மக்கள் சண்டையிட்டுப் போராடிப் பெற்றுக் கொண்டது போக, மீதம் உள்ளதில் எத்தனை இடங்கள் லடாக்கிகளுக்கு தந்தீர்கள். இதுவா உங்கள் சம உரிமை?

திரு அத்னான் என்ற உறுப்பினர் மத்தியப் பல்கலைக்கழகம் குறித்துப் பேசினார். காஷ்மீரிகளுக்கு ஒன்றும், போராடிப் பெற்ற ஜம்மு மக்களுக்கு ஒன்றும் கிடைத்தது. ஆனால் லடாக்கிற்காக, நான் மாணவர்கள் தலைவனாக, அனைத்து மாணவர்களையும் ஒன்றுதிரட்டி தலையில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு ஒரு பல்கலைக்கழகம் வேண்டுமெனப் போராடினேன். கொடுத்தீர்களா? இதுவா உங்கள் சம உரிமை?

இப்போது லடாக்கின் வளர்ச்சியைப் பற்றிக் கவலைப்படும் காங்கிரஸ் உறுப்பினர்கள், முதலமைச்சராக இருந்தபோது லடாக்கின் வளர்ச்சிக்காக என்ன செய்தீர்கள்? புதிய மாவட்டங்களைப் பிரிக்கும்போதும் பாதி காஷ்மீருக்கும் மீதி ஜம்முவிற்கும் கொடுத்தீர்கள். லடாக்கிற்கு என்ன கொடுத்தீர்கள்? இதுவா உங்கள் சம உரிமை?

வரிவடிவமே இல்லாத காஷ்மீர மொழிக்கு அந்தஸ்து கொடுத்தீர்கள். ஜம்முவின் மொழிக்கும் அந்தஸ்து கொடுத்தீர்கள். ஆனால் வரிவடிவமும், பேச்சு வடிவமும் கொண்ட தனித்துவம் கொண்ட லடாக்கிய மொழிக்கு இன்றுவரை மொழி அந்தஸ்து கொடுக்கவில்லை. இதுவா உங்கள் சம உரிமை?

உறுப்பினர்கள் அனைவரும் மதச்சார்பின்மை, மற்றும் மக்களாட்சி குறித்துப் பேசினார்கள் . அது குறித்தும் நான் பேச விரும்புகிறேன். சட்ட பிரிவு 370 இருக்கும் தைரியத்தில் காஷ்மீரப் பண்டிட்டுகளை இரவோடு இரவாக அடித்து விரட்டினீர்களே, இதுவா உங்கள் மதசார்பின்மை? இதுவா உங்கள் சம உரிமை?

அவை உறுப்பினர் ஒருவர் சொல்கிறார், லடாக்கில் இஸ்லாமியர்களின் மக்கள் தொகை அதிகமுள்ளது, அவர்களின் நிலை என்னாகும் எனக் கவலைப்படுகிறார். நான் சொல்கிறேன், இதே சட்டப் பிரிவுகளைத் தவறாகப் பயன்படுத்தித்தான் லடாக்கிய பெளத்தர்களைப் படுகொலை செய்து, திட்டமிட்டே இஸ்லாமியர்களின் எண்ணிக்கை உயரும்படி செய்தீர்கள். இதுவா உங்கள் செக்யூலரிசம்?

இந்த இரு குடும்பங்கள், நான் சொல்கிறேன், அவர்கள் ஆட்சி செலுத்தவில்லை, ராஜாங்கம் நடத்தினார்கள்! இதே குடும்பம், 1979ல், லடாக்கை இரு பகுதிகளாகப் பிரித்தது. பெளத்தர்கள் மெஜாரிட்டியுடன் லே மாவட்டம், இஸ்லாமியர்கள் மெஜாரிட்டியுடன் கார்கில் மாவட்டம் எனப் பிரித்தீர்கள். லடாக்கிய சகோதரர்களுக்குள் சண்டையை மூட்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள். இதுவா உங்கள் சம உரிமை? இதுவா உங்கள் செக்யூலரிசம்?

இங்கு அமர்ந்துகொண்டு கார்கிலில் முழு அடைப்பு எனச் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு யார் சொன்னது கார்கிலில் முழு அடைப்பு என? புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்! நானிருக்கிறேன், லடாக்கிலிருந்து வந்திருக்கிறேன். எந்தப் புத்தகத்தையும் பத்திரிகைகளையும் படித்துவிட்டுப் பேசிக்கொண்டிருக்கவில்லை. கள நிலவரத்தை நான் லடாக்கியனாகப் பேசுகிறேன். நீங்கள் லடாக்கிலிருந்து வரவில்லை. நான் வந்திருக்கிறேன். இதுவரை நீங்கள் பேசி நாங்கள் கேட்டோம். இன்று நாங்கள் பேசுகிறோம், நீங்கள் கேளுங்கள். சௌகரியமாக அமர்ந்து கேளுங்கள்.

இவர்கள் அனைவரும் ஒரு சாலையையும், மார்கெட்டையும் கார்கில் என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். சகோதரரே, உங்களுக்கு கார்கிலைப் பார்க்க வேண்டுமெனில் சம்ஸ்கர் செல்லுங்கள், வாகா முல்கோட் செல்லுங்கள், ஆர்யன் பள்ளத்தாக்கிற்குச் செல்லுங்கள், த்ஸ்தி கர்கோன்னைப் பாருங்கள். 70 சதவீதப் பகுதிகளும், மக்களும் இந்த முடிவிற்கு வரவேற்பு அளிக்கின்றனர். இந்தச் சட்டத்திருத்தத்திற்கு நன்றி சொல்கின்றனர். கார்கிலில் இன்று நடப்பதாகச் சொல்வதெல்லாம் உண்மையில் நடக்கவில்லை, இங்கிருப்பவர்கள் அங்கே தொலைபேசி மூலம் பேசிச் செய்ய வைக்கின்றனர். அவர்களுக்கே தெரியாது தாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என. கார்கில் மக்கள் தங்கள் நலனைக்குறித்து யோசிக்க வேண்டும், இங்கிருந்து உத்தரவு கொடுப்பவர்களின் பேசுக்களைக் கேட்டுக்கொண்டிருக்கக்கூடாது.

ஜன சங்கத்தின் நிறுவனர் டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி ஒரு தீர்மானம் எடுத்தார். ஒரு நாட்டில் இரு அரசு, இரு அடையாளங்கள், இரு தலைமைகள் இருத்தல் கூடாது, கூடாது, கூடாது என. இதே சங்கல்பத்துடன் நான் கர்வத்துடன் சொல்கிறேன், இவர்களுக்கே தெரியாது, இதுவரை லடாக்கியர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என. இவர்கள் இன்றைக்கு ‘எங்கள் கொடி போகிறது’ என ஒப்பாரி வைக்கிறார்கள். சகோதரா, லடாக்கியர்கள் 2011லேயே உங்கள் கொடியை அகற்றிவிட்டோமே, லடாக் ஹில் அட்டோனமஸ் டெவலப்மெண்ட் கவுன்சில் சேர்மன் , கவுன்சிலர், டெப்டி மினிஸ்டர் ஒரு தீர்மானம் செய்து ஜம்மு காஷ்மீர் கொடியை அகற்றிவிட்டு இந்திய மூவர்ணக் கொடியை அல்லவா பயன்படுத்தி வருகிறோம்! ஏனெனில் நாங்கள் இந்தியாவின் பகுதியாகவே இருக்க விரும்புகிறோம். இதுதான் லடாக்.

நான் இரு குடும்பங்களைப் பற்றிப் பேசி வருகிறேன். காஷ்மீரின் கௌரவம் காஷ்மீரின் கௌரவம் என தண்டோரா அடித்துக்கொண்டிருக்கிறார்களே, அவர்கள் சமாதானம் பேசுபவர்களல்ல. அவர்கள்தான் பிரச்சினையே. அந்தப் பிரச்சினை முடிவுக்கு வருகிறது. காஷ்மீர் தனது பாட்டன் சொத்து என்ற திமிரில் அவர்கள் அதிகார போதையிலிருக்கிறார்கள். அப்படி இல்லை, இல்லவே இல்லை.

எனது உரையை முடிக்கும் முன்னர் இந்திய அரசுக்கும், மதிப்பிற்குரிய பாரதப் பிரதமர் நரேந்திர மோதி அவர்களுக்கும், அமித்ஷா ஜி அவர்களுக்கும், மற்றும் இந்த அவை உறுப்பினர்களுக்கும், இன்று எதிர்ப்பு தெரிவித்துவிட்டு நாளை இதன் பலனை அனுபவிக்கப் போகிறவர்களுக்கும் எனது முழு நன்றிகளை லடாக்கியர்கள் சார்பாகத் தெரிவிக்க விரும்புகிறேன், ஏனெனில், இந்திய சரித்திரத்தில் முதன்முறையாய் லடாக்கியர்களின் தேவைகளை, எண்ணங்களை இந்த அரசு கேட்கிறது. கார்கிலிலும், சீனத்தை ஒட்டியுள்ள பகுதியிலும் கஷ்டங்களை அனுபவிக்கும் லடாக்கியர்களின் கஷ்டங்களை இந்த அரசு புரிந்துகொள்கிறது.

இந்தச் சட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். இதற்குப் பின்னரும் குழப்பத்தில் இருப்பவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். நாட்டின் மீது அன்பிருப்பின் அதை வெளியில் சொல், யாருக்காகவும் காத்திருக்காதே. கர்வத்துடன் சொல் ஜெய் ஹிந்த்! அபிமானத்துடன் சொல், நாங்கள் இந்தியர்கள் என!"

Tuesday, August 6, 2019

காஷ்மீர் 370.. எது வரலாற்று பிழை?

Image result for kashmir 370
எது வரலாற்றுப் பிழை?
காலம் தான் பதில் சொல்லும்.
நேருவின் வரலாற்று தவறு நீங்கிவிட்ட து.
பாரத மாதாக்கி ஜே.. என்று இன்றைய பிரதமர் மோதிஜி அவர்கள் மகிழ்ச்சியுடன் ..
காஷ்மீருக்கு 370 கிடையாது.
இனி காஷ்மீர் இந்திய நடுவண் அரசின் நேரடிப்பார்வையில் யுனியன் டெரிடரியாக… என்று அமித்ஷா அறிவிக்கும் போது
என் காலடி நிலம் அதிர்ந்து அடங்கியது.
ஜன நாயகப் படுகொலை .. என்று எதிர்க்கட்சிகளின் குரல்..
வெற்றுக்கோஷமாக முடங்கிப்போனது உண்மை.
370 சட்டவிதிப்படி காஷ்மீருக்கு கொடுத்திருக்கும் தனி அந்தஸ்து இந்திய வரலாற்றில் நீண்ட நெடிய திருப்பங்களைக் கொண்ட து.
370 ஐ சட்டமேதை அம்பேத்கர் ஆதரிக்கவில்லை என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. அதற்கான ஆதாரங்கள் அம்பேத்கரின் நேரடி எழுத்திலிருந்து கிடைக்கவில்லை.
1991ல் பிஜேபி பத்திரிகை தருண் பாரத் (an editorial in Tarun Bharat, an RSS mouthpiece, dated 1991 citing the verbal account of Balraj Madhok, an RSS veteran, about Ambedkar – four decades after his death!)
அம்பேத்கர் 370 ஐ எதிர்த்தார் என்று சொல்கிறார்கள்.
ஆனால் 370ஐ அம்பேத்கர் எழுதவில்லை என்பதும்
காஷ்மீருடனும் நேருவுடனும் நெருக்கமானவரும்
சட்ட வரைவுக்குழுவில் இருந்தவருமான கோபாலசாமி அய்யங்கர் அவர்கள் தான் எழுதினார் என்பதும் ஆதாரப்பூர்வமானவை. இந்த ஆதாரத்துடன் பார்க்கும் போது காஷ்மீருக்கு கொடுத்த 370 ஐ அம்பேத்கர் வரவேற்கவில்லை என்ற முடிவுக்குத்தான் வர வேண்டி இருக்கிறது. அம்பேத்கர் சொன்னதாக சொல்லப்படும் சொற்றொடர்களை விலக்கினாலும் கூட இந்த முடிவுக்கு மட்டுமே வர வேண்டி இருக்கிறது.
காஷ்மீர் விசயத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுடன் சர்தார் வல்லபாய் படேல் ஒரு விலகல் மனப்பான்மையுடன் இருந்த தையும் காஷ்மீர் நேருவுடன் சம்பந்தப்பட்ட நேரடி பிரச்சனையாக உருவகிக்கப்பட்ட தும், காஷ்மீர் ஒரு தலைவலி என்று படேல் சொன்னதும் இப்படியாக பல்வேறு புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன.
இனி…..
370 .. இல்லை.
காஷ்மீருக்கு என்று இருந்த தனி சட்டங்கள் ( சட்டப்புத்தகம்) இல்லை. காஷ்மீருக்கு தனிக்கொடி இல்லை. இந்திய சட்டங்கள் அனைத்தும் காஷ்மீர் மக்களுக்கும் பொருந்தும். காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து சிறப்பு விதிவிலக்குகளும் விலக்கப்படுகின்றன.
இதனால்.. காஷ்மீர் மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள்.
காஷ்மீர் பொருளாதர வளர்ச்சி அடையும்.
என்று பிஜேபி அரசு சொல்கிறது.
ஒகே. நம்புகிறோம்.
காஷ்மீரில் இனி இந்திய இராணுவத்தின் கெடுபிடி
இருக்காதா,,?
370 ஐ நீக்கியதால் காஷ்மீர் தீவிரவாத அச்சுறுத்தலில்
இருந்து தப்பிக்கும் அல்லது குறையும் வாய்ப்புகள்
என்னவெல்லாம் சாத்தியம்?
என்னமாதிரியான பொருளாதர வளத்தை காஷ்மீருக்கு இந்திய அரசு கொடுக்கப்போகிறது?
இந்தக் கேள்விகள் எழுகின்றன.
இது ஜன நாயகப் படுகொலை என்ற ஒற்றை வார்த்தைக்குள் எதிரணி கூச்சலிடுவதில் அர்த்தமில்லை.
உலக நாடுகளின் வரலாற்றில் ஒவ்வொரு வல்லரசும்
இந்த மாதிரி தான் கலக க்குரல்களை அடக்கிவிடுகின்றன.
வளர்ச்சி, பாதுகாப்பு என்ற பெயரில் இந்த அடக்குமுறை தொடர்கிறது. இந்தியாவும் தன்னை வல்லரசு என்று நிரூபித்துவிட்ட து.
கல்வி பொருளாதாரம் நிம்மதியான வாழ்க்கை ..
இதற்காக காஷ்மீர் மக்கள் தங்கள் தனித்துவத்தை
விலையாக கொடுக்கப் போகிறார்கள். இதற்கு அவர்கள் காரணமில்லை என்றாலும் காஷ்மீர் அரசியல் காரணமாகிவிட்ட து.
காஷ்மீரில் இனி நிலம் வாங்கலாம்.!
வீடு கட்டலாம்..!
நட்சத்திர விடுதிகள் கட்டலாம்!!
தொழிற்சாலைகள் ஆரம்பிக்கலாம்..!!
காஷ்மீர் ஆப்பிள்களில் சிலர் தங்கள்
பிராண்ட் முத்திரைகளைக் குத்தலாம்.!!!
காஷ்மீரின் இயற்கை அழகுக்கு
வெளி நாட்டு முதலாளிகள் அள்ளிக்கொடுப்பார்கள் தானே!!!
இந்தியாவின் ஜிடிபி கூட இதனால் அதிகரிக்கும் வாய்ப்புண்டு… 
அடேங்க்கப்பா..
மோதிஜி…
வரலாற்றுப்பிழையை நீக்கியதாக சொல்கின்றீர்கள்..
எது வரலாற்றுப்பிழை என்பதை
காலம் தான் பதில் சொல்லும்.

அகண்ட பாரதக் கனவுகளில்
இமயம் கொஞ்சம் நடுங்கத்தான் செய்கிறது.
டியர் மோதிஜி.. & respected Amith Shah 
வரலாறு உங்களை மறக்காது.
 எங்களையும் தான்.!

Wednesday, July 31, 2019

எந்தப் பெண்ணுக்கு 3 நாட்கள் விடுமுறை??


Imageஇதைப் பேசி இருப்பவர் என் அன்புக்கும்
 மதிப்புக்கும் உரியரவிக்குமார் எம்.பி. 
(திமுக எம். பி என்று சொல்லவா அல்லது வி.சி. எம்.பி
என்று சொல்லவா.. விடுங்கள். எப்படியானாலும்
 அவர் தமிழகத்தின் எம்.பி. அதுபோதும்!)

இவர் எந்தப் பெண்களுக்காக
 இதைப் பேசி இருப்பார் என்று
யோசித்து யோசித்து இந்த மழை நேரத்திலும்
 மண்டைக்காய்கிறது!

வர்க்க ரீதியாக பேசி இருந்தாலும் சரி,
சாதி ரீதியாக பேசி இருந்தாலும் சரி..
இவர் எந்தப் பெண்களுக்காக பேசி இருக்கிறார்?

வரப்போரத்தில் பிரசவித்து
கதிர் அறுக்கும் அருவாளால்
 தொப்புள் குடியை அரிந்த அவள்
ஓடையிலே கால்கழுவி
ஓடிக்கொண்டிருக்கிறாள்..
அவளுக்காகவா..  பேசி இருக்கிறார்???
இல்லை…
பட்டுப்போன்ற சானிடெரி நாப்கினைத்
தொட்டுப்பார்க்கும் ஆசையில்
அம்மாவின் கிழிந்தப் புடவை
தொடைகளில் அறுக்க
குனிந்து வளைந்து
மாடிப் படிகளில் ஏறி இறங்கி
பத்துப்பாத்திரம் கழுவி
வீடு வீடாக ஓடிக்கொண்டிருக்கும்
அவளுக்காக பேசி இருக்கிறாரா..?
இந்த 3 நாட்கள் யாருக்காக?

யார் யாருக்கு அறிவித்த 3 நாட்கள்?
யார் வீட்டில் இந்த 3 நாட்கள்?
யாருக்காக பேசுகிறோம் இந்த 3 நாட்களை????
ரவிக்குமார்.. யாருக்காக பேசி இருப்பார்
அந்த 3 நாட்கள்  விடுப்…..பை…..

Sunday, July 28, 2019

நனைந்த சொற்கள்

Thanks to Sri N Srivasta .. frm his facebook page dated 24 July 2019
The word 'gila' of Faarsi origin is commonly used in Hindi and Urdu to mean wetness. The word also can be interpreted as a complaint. Rain causes havoc whether in shortage or excess. Not just people and property but even words get wet in the rain says this poem in Tamil by Poet #Puthiyamaadhavi_Sankaran which is reproduced here with prior permission from the poet together with an English translation by moi:
கண்ணாடி சன்னல்களில் பட்டுத்தெறிக்கும் 
பெருமழையின் அதிகாரம்
 குடைக் கம்பிகளை வளைத்து சிதைக்கிறது. 
நினைவுகளின் சாபம் துரத்தும் மழைக்காலத்தில் 
மின்னலின் சுமை தாங்காமல் 
சிவலிங்கம் இரண்டாகப் பிளக்கும் ஓசையில் 
தண்டவாளங்கள் அதிர்கின்றன...
மெல்ல எட்டிப் பார்க்கிறேன்.
இருள் கவிந்திருக்கிறது.
மழையில் நனைந்த சொற்களை
தேகத்தின் சூட்டில் காய வைக்கிறேன்.
நாளை உலர்ந்த சொற்களுடன்
விடியும் பொழுதுக்காய்.
The power
of the heavy rain
scattering off
glass window panes
bends and distorts
the spokes of the umbrella.
When the Shivling
breaks into two
unable to bear
the burden of lightning
in rainy season
chased by the curses
of memories,
rails reverberate.
I peep out slowly.
Darkness has gathered.
I dry the words
dampened by rain
in body heat
for tomorrow
to dawn with
dried words.
~Sri 11:35 :: 23.07.2019 :: Noida

Friday, July 26, 2019

COW EXHALES OXYGEN


Image result for cow exhale oxygen
பசுமாடு ஆக்சிஜனை வெளியிடுகிறது.
பசுமாட்டைத் தடவினால் சுவாசப்பிரச்சனை இருக்காது.
பசுமாடு கூட இருந்தா காச நோய் கூட குணமாகிடும்

ட்டேய்  ட்ட்டேய்ய்ய்ய் சரவணா….
இந்த மாதிரி ஆட்களை எங்கிருந்துடா தேடிப் பிடிச்சி
மா நிலங்களுக்கு முதல்வராக்குகிறீங்க!
தாங்க முடியலடா …

பசுமாடு சமஸ்கிருதம் தமிழ் பேசுகிறது என்று
சொன்னீர்கள்.. எதோ கனவு கண்ட தாக நினைத்துக் கொண்டோம்.
எதோ ஒரு நதி நீரைப் பருகினால் பெண்களுக்கு
சுகப்பிரசவமாகிவிடும் , ந்னோ சிசரியன் என்று
சொன்னீர்கள்.. வடிவேலு காமெடி மாதிரி ரசிச்சிட்டு
போயிட்டோம்
இப்போ உங்க பிரச்சனை என்ன?
பசுமாட்டை ராஷ்டிர மாதா என்று அறிவிக்கனும்..
அவ்வளவுதானே.. தாராளமா சொல்லிட்டுப் போங்க.
பசுமாடு ராஷ்டிரமாதா வாகிட்டா காளைமாடு
ராஷ்டிர பிதா ஆகிவிடும்!
எருமை மாடு ராஷ்டிர தாத்தா ஆகிவிடலாம்.

மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் வேண்டாம்.
பசுமாடுகளை வைத்து நேரா ஆக்சிஜன் கொடுக்கலாம்.
(உங்களுக்கு மட்டும்.. !)
அதுக்காக பசுமாடு ஆக்சிஜனை சுவாசித்து
ஆக்சிஜனை வெளியிடுகிறதுனு.. சொல்லி
பசுமாடுகளை குழப்பி விடாதீர்கள்..
பசுமாடுகள் சாதுவானவை.
சாது மிரண்டால் காடு கொள்ளாது.
நாடும் தான்.
Image result for cow exhale oxygen


·         உத்தரகாண்ட் மா.
·          நில பிஜேபி முதல்வர் திரிவேந்திரசிங்க்
·         ராவத் டேராடூனில்
·         Trivendra Singh Rawat said cows are the only animal that can exhale oxygen
·         The Uttarakhand CM also said massaging cows can cure breathing problems
·         He went on to say that living in close proximity with cows can cure tuberculosis.
·         Uttarakhand Animal Husbandry Minister Rekha Arya, who said the cow is the
·          "only animal that not only inhales oxygen, but also exhales it".
·          Her remarks came on the floor of the Uttarakhand Assembly
·         on Wednesday when a resolution was passed,
·         seeking the status of "rashtra mata" (mother of the nation) for the cow.