பிச்சி:
Saturday, December 25, 2021
பிச்சி
பிச்சி:
Sunday, December 5, 2021
அறிவாயுதம் - ஜெய்பீம்
டிசம்பர் 06 (1956) பாபாசாகிப் அம்பேத்கரின்
Thursday, December 2, 2021
அம்மாவின் காதலன்(ர்)
அம்மாவின் காதலன்(ர்)
அப்பாவின் காதலி
அல்லது காதலியர் குறித்து
எழுதுவதும் பேசுவதும் எளிது மட்டுமல்ல,
கொஞ்சம் கவித்துவம் கலந்து பெருமைக்குரியதாக
மாறிவிடுகிறது. அப்பாவின் காதலும் காதலியரும்
பிள்ளைகளுக்கு விருப்பமானவர்களாக இருக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக அப்பாவின் காதலியர் காதலியராக
மட்டுமே இருப்பதால் சொத்துப்பிரச்சனை எழுவதில்லை.
இதில் அப்பாவின் “சின்னவீடுகள் “ விதிவிலக்கு.
அங்கே சொத்துப்பிரச்சனை , வாரிசுப்பிரச்சனை
வந்துவிடுவதால்
அதை விட்டுவிடுங்கள்.
அப்பாவின் காதலியரை ஏற்றுக்கொள்ளும் பிள்ளைகளுக்கு
அம்மாவின் காதலனை மட்டும் ஏற்க முடிவதில்லை!
அம்மா என்ற கட்டமைக்கப்பட்ட பிம்பத்திற்கு
அம்மாவின் காதலன் ஒரு வில்லன் மாதிரி தெரிகிறான்.
எனக்குத் தெரிந்து அம்மா இறந்தப்பிறகு அப்பாவுக்கு
மறுமணம் செய்து வைத்த பிள்ளைகள் பலர் உண்டு.
இதில் சுய நலமும் இருக்கிறது ..( வயதான காலத்தில்
கிழவனுக்கு யார் பணிவிடை செய்வது?)
அம்மாவுக்கு..?
எனக்குத் தெரிந்து ‘புதியபெண்ணியம்” இதழ்
நடத்திய
தோழர் லலிதா அவர்களுக்கு அவர் பிள்ளைகள்
ஒரு
வாழ்க்கை துணைவரைத் தேட முயற்சி செய்தார்கள்.
அதுவும் நடக்கவில்லை!
அப்பாவின் காதலியர் .. அப்பாவின் மறுமணம்
மகிழ்ச்சியாக மட்டுமல்ல, புரட்சியாகவும் இருக்கிறது.
அம்மாவின் காதலர் , அம்மாவின் மறுமணம்
நெருடலாகத்தான் இருக்கிறது.
@@@
என் சிறுகதை தொகுப்பு “பெண்வழிபாடு”
அதில் “அம்மாவின் காதலன்” என்று ஒரு சிறுகதை.
முதலில் அந்தப் புத்தக தொகுப்புக்கு நான்
“அம்மாவின் காதலன்(ர்) “ என்ற தலைப்பை தான்
தெரிவு செய்திருந்தேன். புதியமாதவியின்
“அம்மாவின் காதலன்’ என்று சொல்லிப்பார்த்தேன்.
என் புரட்சி முகம் விழித்துக்கொண்டது.
பெயரை மாற்றிவிட்டேன். “பெண்வழிபாடு” என்ற
தலைப்பில் அப்புத்தகம் வெளிவந்தது.
இப்படித்தான் அம்மாவின் காதலும்
“பெண்வழிபாடு” என்ற வெளிச்சத்தில் காணாமல்
போய்விடுகிறது.
பாவம்.. என் அம்மாக்களும்.
அவர்களின் மனம் கவர்ந்த
அம்மாவின் காதலன்
(ர்)களும்.
Monday, November 22, 2021
சாதி கெட்டப்பயலே..
Sunday, September 12, 2021
பேருந்துகளில் விரசமாகும் காமத்துப்பால்
பெண்ணியம் பேருந்தில் பயணிப்பதில்லையோ??!
Saturday, April 3, 2021
இலண்டன் - திரள் சமூக கலை இலக்கிய குழுமம்.
இலண்டன் - திரள் சமூக கலை இலக்கிய குழுமத்தின்
பார்வைக்கு:
வணக்கம் நண்பர்களே.
உங்கள் விசித்திரமான
அணுகுமுறை தான் என்னை இதை எழுத வைத்திருக்கிறது, இதற்காக , நான் மிகவும் வருந்துகிறேன்.
காரணம்
அழைப்பிதழில் பெயர்
போட்டு அந்த நிகழ்வில் நான் கலந்து கொள்ளவில்லை என்ற முதல் நிகழ்வாக உங்களின் நேற்றைய
நிகழ்வு அமைந்துவிட்டது.
27/3/21 திட்டமிடப் பட்ட உங்கள் நிகழ்வு “பிரதிகளின்
மொழி அரசியல்”
மிகவும் அருமையான
மிகச்சிறந்த தலைப்பு. திட்டமிடப்பட்டபடி அன்று நிகழ்வு நடக்கவில்லை என்று அறிகிறேன்.
அது உங்கள் அமைப்பு சார்ந்த பிரச்சனை. அதில் நான் எதுவும் சொல்வதற்கில்லை. அதே நிகழ்வு
அதே தலைப்பில் 3/4/21 நேற்று நடைபெற்றிருக்கிறது.
வாழ்த்துகள்.
ஏப்ரல் 01 காலையில் சுவிஸ் ஊடறு றஞ்சி அவர்கள் என்னைத்
தொடர்பு
கொண்டு 03 ஆம்
தேதி பேச முடியுமா என்று கேட்டவுடன் நானும் இசைவு கொடுத்தேன். அதன் பின் நிகழ்வு இருக்கிறதா
இல்லையா என்பதை
இருமுறை நானே றஞ்சியுடன்
தொடர்பு கொண்கு கேட்டுக்கொண்டிருந்தேன். அழைப்புதழ் தயாராகிறதாக சொல்கிறார்கள் என்று
அவரும் அவருக்கு
கிடைத்தச் செய்தியை
என்னுடன் பகிர்ந்து கொண்டார்.
ஆனால் நிகழ்வு
நடக்கும் 03/4/21 நேற்று காலை 10.39 மணிக்கு றஞ்சி
எனக்கு அழைப்பிதழ்
அனுப்புகிறார். மாலையில் நடக்கும் நிகழ்வுக்கு
காலையில் தான்
அழைப்பிதழ் அனுப்பி உறுதி செய்யப்பட்ட து.
இதில் றஞ்சி மீது
எனக்குத் துளியும் வருத்தமில்லை.
றஞ்சி என்னைத் தொடர்பு கொண்ட து கெளரி பாராவின்
வேண்டுதலால். இதுவும் ஓகே. ஆனால் கெளரி பாராவுக்கு வாசன்
அவர்களுக்கோ ஏன்
திரள் குழுமத்திற்கு நான் புதியவள் அல்ல. ஏற்கனவே
அவர்கள் அழைத்து
31 அக்டோபர் 2020 ல் நடந்த நிகழ்வில் நான் கலந்து
கொண்டிருக்கிறேன்.
அப்போது வாசன் தான் என்னை நேரடியாக
தொடர்பு கொண்டு
கால அவகாசம் கொடுத்து நட த்தினார்.
அப்படி இருந்தும்
திரள் அமைப்பிலிருந்து யாரும் என்னைத் தொடர்பு
கொண்டு நிகழ்வை
உறுதிப்படுத்தவில்லை. காலையில் வாசன்
அனுப்பி இருந்த
உள்பெட்டி மெசஞ்சர் செய்தி மாலையில் நான்
பார்த்துவிட்டு
கடந்து செல்வதை தவிர வேறு வழி?
நீங்கள் அதிமுக்கியத்துவம் கொடுத்து அழைக்கவில்லை
என்று நான்
ஆதங்கப்படவில்லை.
ஆனால் 24X7 நாங்கள் ஓய்வாக இருப்பதாகவோ
அல்லது நீங்கள்
எப்படி எந்த முறையில் அழைத்தாலும் ஓடோடி
வந்துவிடுவோம்
என்றோ உங்கள் “மவுனமொழியின் பிரதி அரசியல்”
உணர்த்தியது. சகமனிதரை
எப்படி நட த்துகிறோம் என்பது தான்
பிரதி நிதியின்
சமூக அரசியல். எந்தக் கடவுச்சீட்டும் அதை தீர்மானிப்பதில்லை.
பிரதிகளின் மொழி அரசியல் < பிரதி நிதிகளின்
மவுன மொழி
அரசியலாக மாற்றியதில்
நீங்கள் சொல்ல விரும்பியது என்ன?
ஏன்?
நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு என் வாழ்த்துகளும்
அன்பும்.
நிகழ்வில் கலந்து
கொள்ளவில்லை என்ற வருத்தமில்லை எனக்கு. ஆனால்
அதை இப்படி வெளிப்படுத்த வேண்டிய சூழலுக்காக வருந்துகிறேன்.
Saturday, November 7, 2020
கவிஞரின் மனைவியும் கவிஞரின் கணவரும்..
கவிஞரின் மனைவி VS... கவிஞரின் கணவர்..

