Monday, November 8, 2021

அம்பேத்கரும் ஆதிவாசிகளும்

 அம்பேத்கரும் தொல்பழங்குடி மக்களும்.










கடவுள்கள் பிறப்பதற்கு முன்பே
நாங்கள் இங்கே இருந்தோம்.
நாங்கள் பிறந்து
ரொம்ப காலத்திற்குப் பிறகுதான்
கடவுள்கள் பிறந்தார்கள்.
மனிதர்களின் மத்தியிலிருந்துதான்
அவர்கள் பிறந்தார்கள்.
நாங்கள்
கடவுள்களுக்கு
முன்பிறந்தவர்கள்..
(இந்திரனின் மொழியாக்கத்தில் தொல்பழங்குடியின் குரல்)
பாபாசாகிப் அம்பேத்கர் ஆதிவாசிகள் – schedule tribes - குறித்து
என்னமாதிரியான கருத்தை வைத்திருந்தார்?
அவர் ஆதிவாசிகளை கண்டு கொள்ளவில்லையா?
இப்படியான பல சர்ச்சைகள் இன்றும் முன்வைக்கப்
படுகின்றன.

இந்தியாவில் வாழும் தொல்பழங்குடி மக்கள்
அனைவரும் அதிகாரத்தின் பாதிப்பு என்ற ஒரு புள்ளியில்
மட்டும் தான் இணைகிறார்கள்.
தமிழ் நாட்டின் இருளர்களும் மத்தியபிரதேசத்தின்
‘கோண்ட்”தொல்பழங்குடிகளும் வேறு வேறானவர்கள்.
மராட்டிய மண்ணின் மகர்களும்
தமிழகத்தின் பறையர்களும் வேறு வேறானவர்கள்.
ஆனால் அரசு அதிகாரத்தின் பாதிப்புக்கு உள்ளாகும்
மக்கள் என்ற வகையில் schedule caste & schedule tribe
என்று வகைப்படுத்தப் படுகிறார்கள்.
(எல்லோருக்கும் தெரிந்தது தான். ஒரு நினைவூட்டல்!)
அம்பேத்கர் தொல்பழங்குடி மக்கள் குறித்து பேசியதை
“அசாம் டைம்ஸ்” வெளியிட்டிருக்கிறது.

link below:

https://assamtimes.org/node/22262


No comments:

Post a Comment