Friday, November 19, 2021

வேளாண் சட்டமும் அரசியலும்

 FARM LAWS WITHDRAWN.





THE ISSUE IS GONE!
If there is NO issue
that means there is NO POLITICS.





காங்கிரசுக்கு நல்லதொரு ஆலோசனைக் குழு
தேவைப்படுகிறது. ஏற்கனவே இருக்கும்
ஹார்வேர்ட் ஆட்கள் வெள்ளைவேட்டிகள்
எல்லாம் இப்போ ஏனொ எடுபடவில்லை.
கவர்ச்சியான அரசியலுக்கு
என்னவெல்லாம் செய்யவேண்டுமோ
அதை எல்லாம் செய்யத் தெரியாமலோ
அல்லது செய்ய முடியாமலோ
காங்கிரசு முழிமுழிண்ணு பரிதாபமாக
முழிப்பதைப் பார்க்கும்போது
பச்சப்பிள்ளைக்கு கூட அழுகை வந்துவிடுகிறது.
ஞே..!
வேளாண் சட்டங்களை மோதி அரசு திரும்ப பெறுகிறது.
அப்படியானால் ,
விவசாயிகளின் பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டது.
So there is NO ISSUE at all ,!!!
If No ISSUE then NO POLITICS .
(சரவணா.. அப்படின்னு நான் சொல்லல. டிவிக்காரர்கள்
தொண்டைவறள கத்திக்கொண்டிருக்கிறார்கள். )
இதில மோதிஜி ரொம்பவும் செண்டிமெண்ட் டச்
செய்திட்டாருனு சீக்கியர் சமூகம் பேசுவது
அரசியலா மதமா என்று தெரியவில்லை.
காரணம் வேளாண் சட்டத்தை திரும்ப பெற்றது
குருநானக் ஜெயந்தி அன்று.
குருநானக்கின் ஆவிதான் மோதியின் கனவில்
வந்து சொல்லியிருக்கலாம் , மோதிஜி குருநானக்கை
குருநானக் மக்களை மதிக்கும் மாமனிதர் என்று
அவர்களைக் கொண்டே பேச வைக்கும்
இன்னொரு உணர்ச்சி அரசியல் திடீரென காட்டாற்று
வெள்ளம் போல பாய்ந்து வருகிறது.
விவசாயிகளின் போராட்டத்தை
இந்து –சீக்கியர் போராட்டமாக”
திசைமாற்ற நடந்த முயற்சிகளை
மோதி முறியடித்துவிட்டார்”
என்று புதுக்கரடி விடுகிறார்கள்.
சும்மா சொல்லப்பிடாது..
இப்படியான ஒரு கற்பனை எந்த ஒரு புனைவிலும்
இதுவரை வந்திருக்காது..
காங்கிரசு.. இந்தக் கவர்ச்சி அரசியலை
எதிர்கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்?
சீக்கியர்கள் – டில்லி – காங்கிரசு இன்னொரு
கறைபடிந்த சரித்திரப் பக்கங்கள் புரட்டப்படுமோ
என்று காங்கிரசு இளசுகள் பயப்படுகிறதா..!
காங்கிரசு ஏன் தமிழக அரசியலில் இருந்து
பாடம் கற்றுக்கொள்ளக் கூடாது?
தந்தையின் அரசியல் அதிகாரம்..
வாரிசு அரசியல் ..
எதுவாக இருந்தாலும்
பாவ புண்ணியத்தில்
அப்பா வேறு பிள்ள வேறு..
அவரவர் கர்மத்திற்கு அவரவர் பொறுப்பு..
அவரவர் பசிக்கு அவரவர்தானே சாப்பிடவேண்டும்.
இப்படியாக எத்தனை தத்துவங்கள்
நம்பிக்கைகள் நம்மிடம் வாழ்கின்றன.
அதில் எதையாவது எடுத்துவிட
என்ன தயக்கம்?
என்ன நான் சொல்றது சரிதானே!
இது ஒன்றும் புதிதல்லவே.
ஆகையினால்,
புதுக்கரடி ஊரில் புகுந்து வேட்டையாடுவதற்கு முன்
இது பொம்மைக்கரடி என்று எடுத்து தூக்கிப்போட்டு
விளையாடிவிட வேண்டும்.
இப்போது எதிரணிக்கு தேவை..
களத்தில் சிக்ஸர் அடிப்பவர் மட்டுமல்ல,
பந்தைப் பிடித்து வீசி
அவுட் ஆக்குபவர்களும் தேவை.
அரசியல் ஒரு விளையாட்டு.
தொடர் விளையாட்டு.
பொதுஜனம் எப்போதும் பார்வையாளர்கள் மட்டுமே.
இந்திய மக்களாட்சி விதிகளில் முக்கியமானது
முதல் 5 ஆண்டுகள் ஆட்சியில் கட்டி
எழுப்பப்பட்டிருக்கும் பிம்பங்கள்
ஊடகங்கள் ஊதிப்பெருக்கிய
விசுவரூபங்கள்..
அடுத்து தொடரும் ஐந்தாண்டு காலத்தில்
சரிந்துவிடும்.
எச்சரிக்கை.
ஜன நாயக முதலாளித்துவ கவர்ச்சி அரசியலின்
அசல்முகம் ..
அரசியல் எழுதும் புதிய அத்தியாயங்கள்.


1

No comments:

Post a Comment