Monday, September 16, 2019

பெரியாரின் சமூக அரசியல்

Image result for பெரியாரின் பொன்மொழிகள்

காங்கிரசார் முன்வைத்த சுயராஜ்யம் என்பதற்கு மாற்றாக
 சமூக அரசியல் தளத்தில் தந்தை பெரியார் 
“சுயமரியாதை” என்ற கருத்துருவாக்கதை முன்வைக்கிறார்.

சுயராஜ்யம் என்பது டொமினிக் அந்தஸ்து/ அரசாட்சி உரிமை,
 அதிகாரத்தை தன் வசப்படுத்தல் என்ற
 அரசியல் சூழலில் பெரியார் தனி மனிதனின்
உரிமையை முன்வைக்கும் சுயமரியாதை 
என்ற கருத்துருவாக்கத்தை அரசியலாக்குகிறார்
 என்பதைக் கவனிக்க வேண்டும்.
சாதியின் பெயரால் பிறவி இழிவைச் சுமந்து
வாழும் சமூகத்திற்கு சுயராஜ்யத்தின் அதிகாரம்
 எதையும் வழங்க முடியாது என்பது பெரியாரின் பட்டறிவு.
 தன் அனுபவங்களிலிருந்து
தான் பெரியார் தன் கருத்துருவாக்கங்களை வைக்கிறார்.


பெரியாரின் பகுத்தறிவு கூட மேற்கத்தியர்கள் பேசிய 

analytical school என்பதிலிருந்து வந்த தாக
 எடுத்துக் கொள்வதை விட பெரியார் தான் முன்வைத்த
 பகுத்தறிவு என்பதற்கு மனிதத்தன்மையுடன் அணுகுதல்,
இயற்கைக்கு முரணானதை விலக்குதல்,
 தன் பட்டறிவுக்குட்பட்ட தை மட்டுமே முன்வைத்தல்
 என்பதான கருத்து நிலையுடன் செயல்பட்டிருக்கிறார். 
அவர் மேற்கத்திய சிந்தனைகளை வாசித்திருக்கவில்லை
 என்பதல்ல இதன் பொருள். 

அவர் தன் பரப்புரைகளில்
எப்போதுமே எவரையுமே குறிப்பிட்டு அந்த மேதை 

அப்படி சொன்னார், இவர் இப்படி சொல்லி இருக்கிறார்
 என்றெல்லாம் சொல்வதில்லை.
மக்களின் மொழியில் பேசினார்.
தனக்கு சரி என்று பட்ட தை எவ்வித
சமரசமும் இல்லாமல் எந்த இட த்திலும்
முன்வைத்த ஒரே தலைவர்
தந்தை பெரியார் தான்.


#periyar_politics


1 comment: