Wednesday, September 11, 2019

அரபிக்கடலுக்கு ஆணையிடுங்கள் அமித்ஷா ஜி



Image result for amit shah with ganpati
மதிப்பிற்குரிய அமித்ஷா அவர்களுக்கு
நமஸ்தே.
வழக்கமாக எல்லோரும் மோதிஜியை முன்னிறுத்தி
 தான் எல்லாவற்றையும் பார்க்கும் சூழலில் நான்
 உங்களுக்கு எழுதும் கடிதம் உங்களை
ஆச்சரியப்படுத்தாது…
அதிகாரத்தின் முகம் நீங்கள் தான்.
நீங்கள் தான் மோதிஜியின் அரசியல் வாழ்வின் சூத்திரதாரி.
கோத்ராவிலிருந்து காஷ்மீர் வரை கோடு போட்டு
கட்டம் போட்டு பிஜேபிக்கு அசுரபலம் தந்தவர்
நீங்கள் நீங்கள் நீங்களே தான்…
உங்கள் முன்னால் மோதிஜி கூட காற்றடைத்த வெறும் பலூன்..
அது பறப்பதும் திசை மாறுவதும் உங்கள் கைகளில்
இருக்கும் மந்திர சக்தியால்…
ஆகையினால்.. உங்களுக்கு இக்கோரிக்கையை
வைக்க முன்வருகிறேன்.
காரணம் உங்களால் மட்டுமே
இதை நடைமுறை படுத்த முடியும் என்பதால் தான்!
உங்கள் புத்திசாலித்தனம், அதிரடி நடவடிக்கைகள்
அகண்ட பாரதக் கனவுகளின் பக்கங்கள் எல்லாம்
நடந்த து, நடப்பது , நடக்கப்போவது
அனைத்துக்கும் நீங்களே சூத்திரதாரி என்பதை
உணர்த்துகின்றன.
மதிப்பிற்குரிய அமித்ஷா அவர்களே…
கண்பதி உற் சவத்தின் அரசியலுக்குள் போக விரும்பவில்லை.
மும்பையில் கனமான மிகப்பெரிய கணபதி சிலைகளை
 உற்சவத்தில் எடுக்கிறார்கள். 
அந்தச் சிலைகள் களிமண்ணால்
செய்யப்பட்டவை அல்ல. 
அவை POP statues.
Giant size statues made of Plaster of Paris (POP) with toxic paints of 
LORD GANESH are bring dumped in the river, lakes and sea.
 Won’t this POP made statues increase the water level of the river?
 AT Lalbaug in MUMBAI, as giant size GANESH STATUES 
have been Dropped in sea, the ARABIAN sea has entered
 into the PAREL AREA, and this flooding has happened
 without rain and up-tide of the ocean.

பாலாகங்காதிர திலகர் எதற்காக 
இந்த கண்பதியை இப்படி ஊர்வலமாக்கினார் 
என்பதையோ அந்த அரசியலையோ 
பேசுவது உங்களை எரிச்சலூட்டும்.
அப்படி எதுவும் செய்ய விருப்பமில்லை.
நீங்கள் கோப ப்பட்டால் என்னவாகும்?

சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.
. POP சிலைகள் கரைவதில்லை, 
Toxic நீர் நிலை உயிர்களுக்கு ஆபத்தானது 
என்றெல்லாம் இத்தனை ஆண்டுகள் பேசியாகிவிட்ட து
. எனவே நான் அதை எல்லாம் பேசப்போவதில்லை.

இன்று பெரிய பெரிய கண்பதிகளை 
கரைத்தாக வேண்டும். எனக்கு அச்சமாக இருக்கிறது..
ஏற்கனவே இம்மாதிரி ஒரு பெரிய கண்பதியை
 எடுத்து வந்து பிரதிஷ்டை செய்யும் போது
 மேடை சரிந்து சிலை உடைந்து பக்தனின் 
கால் உடைந்து 3 உயிர்கள் எங்கள் தாராவிப்பகுதியில்.. . 3 உயிர் 
சரி வேண்டாம் அதெல்லாம் .. 3 உயிர் என்ன 
3000 உயிர் இதெல்லாம் நீங்கள் பார்க்காதாதா..
 அறியாததா…
கோமாதாவை வணங்கும் நீங்கள் அதன் சாணத்தின்
மகிமையை அறிவீர்கள். 
சாணத்தால் பிடித்து வைக்கும் கண்பதிகள்
 எங்களுக்குப் புதிதல்ல
உங்கள் வானளாவிய அதிகாரத்தால் 
இனிமேல் சாணி + களிமண்ணால் செய்யப்பட்ட 
கணபதியை மட்டுமே உற்சவத்தில் எடுத்துவர வேண்டும்
என்று ஆணையிட முடியுமா..
இந்த மகா மகா கண்பதி சிலை வியாபாரம் , 
அலங்காரம் இதை ஒட்டி நடக்கும் வியாபாரம் 
முடங்கி விட்டால் 
அது நம்ம பொருளாதரத்தின் GDP ஐ பாதித்துவிடுமே…!

ஆகையினால்.. ப்ளீஸ்..
இந்த அரபிக்கடலுக்கு ஆணை இடுங்கள்..

எதைக் கொண்டு போட்டாலும் சரி
எதைக் கொட்டினாலும் சரி..
பொங்கி கரைக்கு வரக்கூடாது என்று
ஆணையிடுங்கள்..
உங்களால் முடியும் அமித்ஷாஜி..
அது எப்படி நீங்கள் சொல்லி
உங்கள் ஆணையை மீறி
கடலலை கரைக்கு வந்துவிடும்?????
உங்களால் மட்டுமே முடியும்..
எதையாவது செய்து
ஆர்ப்பரிக்கும் இந்தக் கடலைக்கொஞ்சம்
அடக்கி வையுங்கள்…
ஓம் கண்பதி நமஹ..
அமித்ஷா வாழ்க..

No comments:

Post a Comment