Wednesday, September 4, 2019

பாவமய்யா எங்க ஊரு கண்பதி பப்பா

Image result for ganpati in crowd  2019

40,000 காவல்துறையினர் இரவு பகலாய்..காவல்
5000 சிசிடிவி காமிராக்கள் சுழன்று கொண்டிருக்கின்றன.
7703 கண்பதி சிலைகள் கண்பதி மண்டல்களில்.
வீடுகளில் மட்டும் 1,63000 கண்பதி சிலைகள் சிறிதும் பெரிதுமாய்.
கண்பதி சிலைகளுடன் கெளரி சிலையும் 11,667..
இவைகளைக் கரைப்பதற்கு 129 நீர் நிலைகள் …
கண்பதி ஊர்வலத்தை முன்னிட்டு 56 ரோடுகள்
 பொதுமக்கள் பயன்பாட்டிலிருந்து மூடப்படும். 
18 ரோடுகளில் கன ரக வாகன ங்கள் செல்ல தடை, , 
99 கார் பார்க்கிங்க் ஏரியாவில் கண்பதி உற்சவத்தை முன்னிட்டு 
14 நாட்களும் பொதுமக்கள் பயன்படுத்த தடை…
அப்புறம்.. வழக்கமா போயிட்டு வருகிற
 பெஸ்ட் பஸ் ஓட்டுனர்கள் கண்டக்டர்கள் ..
 கண்பதி ஊர்வலம் வரும் போது.. அப்படியே ஒதுங்கி
நின்னுட்டு வேடிக்கைபார்க்கனும்..
நாங்களும் தான்…
கண்பதியை நினைச்சாலும் பாவமா தான் இருக்கு..
திருடனுக்கு அவரும் ரொம்ப பயப்படுத மாதிரி இருக்கு!
மாதுங்கா கிங்க் சர்க்கிள் பகுதி கண்பதி சிலையை மட்டும் 
264 கோடி ரூபாய்க்கு இன்சூர் செய்திருக்கிறார்கள்.
அம்புட்டு தங்கமும் வைரமும் போட்டுட்டு அவரு
இருப்பதைப் பார்க்கவே கூட்டம் அலைமோதுகிறதாம்!
ஒரு குடைடைப் பிடிச்சிட்டு அவரு போட்டிருக்கிற
தங்கம் வைரத்தை கண்ணால பார்த்துட்டு வந்துடலாம்னா..
இந்த மழை வேற.. நை நைனு.. விடாம..
என்னவோப்பா சரவணா…
இதெல்லாம் ரொம்ப பழகிப்போச்சு.
ஆரம்பத்தில் கண்பதி உற்சவ வரலாறெல்லாம் தேடிப்
பிடிச்சி எழுதிப் போட்டேன்.
அப்புறம் நீர் நிலைகளைப் பாதிக்குதுனு சுற்றுசூழல்
பார்வையை அச்சத்துடன் சொல்லிப் பார்த்தேன்.
இப்போ.. பேசாமா .. கொழுக்கட்டையைத் தின்னுட்டு
வேடிக்கைப் பார்த்திட்டு இருக்கலாம்னு முடிவு
பண்ணிட்டேன்…
ஆனா .. பாவம்.. இந்த கண்பதி ப்ப்பா..
(அம்ச்சி மும்பை.. 2019 கணக்கு மட்டும் தான் இதெல்லாம்.
 மும்பையைத் தாண்டி .. போனா.. சரவணா.. )

No comments:

Post a Comment