Friday, May 10, 2019

அவதார புருஷர்கள் ஏன் அவதரிக்கவில்லை??


அவதார புருஷர்கள் இனி இவ்வுலகில் 
அவதரிக்கப் போவதே  இல்லை. ...

அவள் எதொ  கலகம் புரட்சி மாற்றம் 
இதெல்லாம் பற்றி பேசுகிறாளாக்கும் என்று
 நானும் எங்கள் உரையாடலைத் தொடர்ந்தேன்.
அவள் அடுக்கடுக்காக அடுக்கிய காரணங்களைக் 
கேட்டுவிட்டு என் தலை பாரம் தாங்காமல் 
ஒரு பக்கமாக சரிய ஆரம்பித்து விட்ட து.

காரணம் 1) 
இப்போதெல்லாம் குடும்பத்தில் நாமிருவர்  நமக்கிருவர்
 என்று கட்டுப்பாடு வந்துவிட் ட து காரணமாம்.
இது எப்படி காரணமாகும் தோழி ?

குருஷேத்திரம் நட த்திய பகவான் கிருஷ்ணன் 8வது குழந்தையாம்.
இப்போ எந்தக் குடும்பத்தில் 8 வரை பெத்துக்கொள்கிறார்கள்?

அட டா.. நல்லது தானே.. இனி பங்காளி சண்டைகள் 
இருக்காதுனு நினைச்சுக்கலாமே! 
சரி உன் லாஜிக் படியே எடுத்துப்போம். 
உங்க ஸ்ரீராமன் முதல் பிள்ளை தானே!”

அய்யோ, அப்படி இல்லைமா.. உனக்கு இப்படி
 சொன்னா புரியாது.
உனக்குத் தெரியுமோ.. மகாத்மா காந்தி அவரோட
 அப்பாவுக்கு 4 வது மனைவிக்குப் பிறந்த மகனாக்கும்!

 என்ன இது.. ! அப்போ  நம்ம ஆம்பிளைகள எல்லாம்
 4 மனைவி கட்டிக்கச் சொல்றியா, 
நாலாவது மனைவிக்குத் தான் மகாத்மா பிறப்பார்னு
 இது என்ன புதுக்கரடி.. உண்மை என்ன தெரியுமா.. 
காந்தியின் அப்பாவுக்கு வாய்த்த 3 மனைவியரும்
 பிரசவத்தில் இறந்துப் போனவர்கள். 
அப்படித்தான் அவருக்கு 4 வது மனைவி வாய்த்தார். 

மீண்டும் அவர் விடவில்லை. 
“உனக்கு இதெல்லாம் புரியாது. உனக்கு நல்லா
 விவரமா புரியற மாதிரி சொல்லனும்னா.. ஹாங்க்… 
அம்பேத்கர் அவரோட அம்மா அப்பாவுக்கு
 14 வது குழந்தையா பிறந்தவர் . .. 
இப்போ இதுக்கு என்ன சொல்றே! “

சரவணா.. தாங்க்க முடியலடா..
எங்கிருந்து இந்த மாதிரி புதுசு புதுசா கண்டுப் பிடிச்சி
பரப்புதாங்களோ தெரியலையே..
சரிந்துப் போன என் தலையை நிமிர்த்த முடியாமல்
கோணங்கி ஆகிவிட்டேன் நான்.



No comments:

Post a Comment