Thursday, March 16, 2017

ஆதாமின் எச்சில்




வெயில்நதி ஓடிய பெருவெளியாய்
நீண்டு கிடக்கிறது  பகல்வெளி.
ராஜநாகங்கள் பிணைந்து எழுந்து
புணர்ந்து மடிமீது தலைசாய்த்து
இளைப்பாறுகின்றன.
ஆலிலை சருகுகளின் ஓசையில்
சாரைப்பாம்புகளின் மொழி
வனத்தின் மவுனத்தைக் களைக்கிறது. 
துவைத்த துணிகளை உலர்த்திக் கொண்டிருக்கிறேன்.
காற்றில அசையும் கொடியில்
ஊஞ்சலாடுகிறது இரவில் தீண்டிய நாகம்.
விஷங்களை விழுங்கிய நட்சத்திரங்கள்
வானத்தில் துப்புகின்றன  
ஆகாயமெங்கும் நீலநிற எச்சில்படுக்கை.
ஆதாமின் ஆப்பிள் கசக்கிறது.குமட்டுகிறது.
.வாந்தி எடுக்கிறேன்.
கூநதலில் சூடிய முல்லைப்பூக்கள் கருகி விழுகின்றன.
மலைகளைக் குடைந்து நீளும் பாதையில்
பாறைகள் உருண்டு மோதுகின்றன.
காயங்களுடன் .. எட்டிப்பார்க்கிறாள் நாககன்னி.
ஆதரவாக என்னை அணைத்துக் கொள்கிறாய் நீ..
கைகளில்  நெல்லிக்கனியுடன். 







No comments:

Post a Comment