Wednesday, March 22, 2017

the secret diary of Kasturba

புத்தக அலைவரிசை

காந்தியை விட 6 மாதத்திற்கு மூத்தவர் கஸ்தூரிபா. 
அதுமட்டுமல்ல காந்திக்கு அவர் 3வது மனைவி.
 முதலிரண்டு பெண்கள் தவழ்ந்து விளையாடுவதற்கு 
முன்பே இறந்துவிட்டார்கள். ஆம்.. பிறந்தவுடனேயே 
நிச்சயிக்கப்பட்ட மனைவியர். கஸ்தூரிபாவின்
 அந்தக் கடைசி தருணங்கள்.. 
மகன் சொல்கிறான்.. "அம்மாவுக்கு ஊசி போட்டால் நல்லது "என்று.
 காந்தி அதைத் தடுக்கிறார். இயற்கையாக மரணத்தை
 வலியுடன் ஏற்றுக்கொண்டு அவள் தலையை எடுத்து
 தன் மடிமீது வைத்துகொண்டு..
வாசிக்கும் போது என்னடா இப்படியும் கிறுக்குத்தனமாக
 ஒரு மனுஷன் வாழ்ந்திருக்கிறானே என்று
 கோபம் கலந்த ஏதோ ஒரு வகையான ஈர்ப்பு ஏற்படுகிறது.
இன்னொரு புத்தகம்..
இதைத்தாண்டி காந்தியின் மூத்தமகன் ஹரிலாலில் கடைசி நாட்கள்
 ஒரு காவியத்தின் துன்பியல் காட்சிபோல விரிகிறது.
 ரேஷ்மாபாய் என்ற பாலியல் தொழில் செய்யும் பெண்
 போன் செய்கிறாள் திடீரென்று ஹரிலாலின் தம்பி மகன்
 கேசவ்லால் காந்திக்கு. கேசவ்லால் காந்தி ஹரிலாலின் மருமகன்
 சுரேந்திரபாய் க்கு போன் செய்து அழைக்கிறார்.
 இருவரும் கேசவ்லால் வீடிருக்கும் மாதுங்காவிலிருந்து புறப்படுகிறார்கள். பாலியல்தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் காந்தி குல்லாவுடன்
 இரவில் அலையும் அவர்களை அப்பெண்களும் இளைஞர்களும்
 அதிசயமாகவும் கேலியாகவும் பார்க்கிறார்கள்.
 குல்லாவை எடுத்து சட்டைப்பைக்குள் வைத்துக்கொண்டு 
போனில் தகவல் சொன்ன ரேஷ்மாபாயைத் தேடுகிறார்கள்.
சீவ்ரி அரசு மருத்துவமனையில் தன் கடைசி நாட்களை
 எண்ணிக்கொண்டிருக்கும் தேசப்பிதாவின் மூத்தமகன்..
வாசிக்க வாசிக்க தேசப்பிதா தன் மூத்தமகனுக்கு மட்டும் 
பிதாவாக இருக்கவில்லையே என்ற எண்ணம் பாறாங்கல்லாகி
 வாசிப்பு நிமிடங்களைக் கனமுள்ளதாக்கிவிடுகிறது.

காந்தியுடன் முரண்படும் புள்ளிகள் பலவுண்டு. 
ஆனாலும் அந்த மனுஷன் தன் வாழ்க்கையில்
 தன் அனுபவங்களின் ஊடாக தன்னையே வருத்திக்கொண்டு...
காந்தி மகாத்மாவாகவே இருக்க ஒரு மனைவியாக கஸ்தூர்பாவும் 
ஒரு மகனாக ஹரிலாலும் கொடுத்த விலை அதிகம் தான்.
 மகாத்மாக்களுக்கு வேண்டுமானால் அதெல்லாம்
 பெரிதாக இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் என்னைப் போன்ற சாதாரண மனுசிக்கு.. அப்படியல்ல.

புத்தக அலைவரிசை: THE SECRET DIARY OF KASTURBA - BY
Neelima Dalmia Adhar
&MAHATMA VS GANDHI - by Dinkar JOSHI

2 comments:

  1. ,...ஆம், காந்தியடிகள் தம் மனைவி குழத தைகளிடம் சற்றே கருணையோடு நடந்து கொண்டிருக்க வேண்டும்தான்...
    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
  2. ,...ஆம், காந்தியடிகள் தம் மனைவி குழத தைகளிடம் சற்றே கருணையோடு நடந்து கொண்டிருக்க வேண்டும்தான்...
    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete