Monday, November 21, 2016

PAST SO PRESNT IN PRESENT


இறந்தகாலத்தில் முகம்பார்க்கும் நிகழ்காலம்
அதுவும் அரசியலில் இறந்த காலத்தைத் தூக்கி சுமந்துக்கொண்டிருக்கும் நிகழ்கால அரசியல்வாதிகள்..
ghosts who walk
why is the past so present in indian politics?
எவ்வளவு ஆழமான  விவாதப்பொருள்..
இத்தலைப்பை வாசித்தவுடனேயே என்னையும் உற்சாகம்
தொற்றிக்கொண்டது. என்னவெல்லாம் பேசுவார்கள்?
NCPA - Littile theatre sunday 20/11/16 - 5 to 6 pm
வழக்கம்போல கூட்டம் ஒரு இருக்கை கூட காலியாக
இருக்கவில்லை. வெங்கட் துலிப்லா வும் ஷரிர் மஷானியும்
உரையாடல். தலைமை திலீப் பட்கோன்கர். (venkat dhulipala
and zareer masani . chair: Dileep padgaonkar)
ஷரீர் மஷானி மிகவும் சிறப்பாக ஆரம்பித்தார்.
ராமஜென்மபூமி முதல் பாரதப் பிரதமர் ப்ளாஸ்டிக் சர்ஜரி
இந்தியாவில் இருந்ததாக அறிவியல் கருத்தரங்கில் பேசியது
முதல் ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டே வந்தார். மராட்டிய
மண்ணில் எங்கே பார்த்தாலும் சத்ரபதி சிவாஜியின் பெயர் சூட்டப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார். மும்பையில்
விக்டோரியா டெர்மினஸ் சத்ரபதி சிவாஜி ரயில்நிலையமானது.
விமானத்தளத்தின் பெயரும் சத்ரபதி சிவாஜி விமான நிலையம்தான்.
இப்படியாக எங்கே பார்த்தாலும் வீரசிவாஜி ... கர்நாடகத்தில்
திப்பு சுல்தான் ஜெயந்தி கொண்டாடப்படுவதைச் சுட்டிக்காட்டி
அரசர்கள் அவரவர் அதிகாரத்தை நிலைநிறுத்தவே போராடினார்களே
தவிர நாட்டு விடுதலைக்கும் அவர்கள் போராட்டங்களுக்கும்
எந்த தொடர்பும் இல்லை என்பதையும் சிரித்துக் கொண்டே
விவரமாக சொன்னார்.  அவர்கள் வாழ்ந்தக் காலங்களில் அவர்கள்
வீரர்களாக தலைவர்களாக இருந்திருக்கலாம் ஆனால் அவர்களை
அப்படியே நிகழ்காலத்திற்கு கொண்டு வந்து ஒரு அவதார புருஷனாக
காட்டுவதும் இளைய தலைமுறைக்கு கடந்த கால முகங்களை
நிகழ்காலத்திற்கான அடையாளமாகக் காட்டுவதும் ஆபத்தானது
என்றார் மஷானி. அதன் பின் விடுதலைப் போராட்டம் , காந்தி, நேரு
என்று ஆரம்பித்த உரையாடல் அப்படியே தலைமையின் கேள்விகளின்
ஊடாக கொஞ்சம் கொஞ்சமாக தலைப்பிலிருந்து விலகி விலகி விலகி.. ரொம்பவே விலகிப்போய்... என்னவோ இந்தியா பாகிஸ்தான்
பிரிவினையைப் பற்றிய உரையாடலாக மாறியது. இதற்கு முழுக்காரணமும் நிகழ்ச்சியை நடத்திய திலீப் படுகோன்கர் தான்.
சிக்னலை தவறான பாதையில் காட்டினால் வண்டி ட்ராக் மாறித்தானே
பயணிக்கும்... எப்படியே அதுவும் ரொம்ப ரொம்ப சூடான விவாதமாக இருந்தாலும் இப்படி அநியாயமாக ட்ராக் மாறி
வண்டி ஒடியதில் என்னைப் போல பலருக்கு ஏமாற்றம் தான்.
மாயாவதி உத்திரபிரதேசத்தில்  நிறுவி இருக்கும் ஏகப்பட்ட ஆனை
சிலைகளும் பாபாசாகிப் அம்பேத்கர் சிலைகளும் ஒரு எதிர்வினை
செயல் தான் என்று ஒரு போடு போட்டார் பாருங்கள் வெங்கட்..
இந்த நாட்டில் மகாத்மா காந்தி ரோடு, இந்திராகாந்தி ரோடு,
ராஜிவ்காந்தி ரோடு.. என்று எல்லா பாதைகளையும் ஒரே
குடும்பத்து காந்திகள் வரிசையாக அடைத்ததின் எதிர்வினைதான்
மாயாவதி செய்தது என்றார்.
பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்து அம்பேத்கர் எழுதி இருப்பது
குறித்து விவாதம் இன்னொரு RIGHT TURN . அவர் சொன்ன கருத்துகளை அப்படியே கேட்டுக்கொண்டேன். இன்னொரு முறை அம்பேத்கரின் குறிப்பிட்ட
இக்கருத்து குறித்து மீள்வாசிப்பு செய்தாக வேண்டும்.
இப்படியாக டிராக் மாறி ஓடினாலும் வண்டி ஏகப்பட்ட
பயணிகளுடன் (எண்ணச்சிதறல்களுடன் )  நிகழ்ச்சி முடிந்து
24 மணி நேரம் கடந்தும் எனக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது.

2 comments:

  1. எண்ணங்கள் தொடரட்டும்... வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. அருமையான அலசல்

    ReplyDelete