Monday, April 25, 2016

விருத்தாசலமும் கனக சுப்புரத்தினமும்





இவர்கள் இருவரும் நண்பர்கள், சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் தங்களுக்குள் இருக்கும்
கருத்தியல் ரீதியான வேறுபாடுகளுக்கு நடுவில் இருவரும் ஒருவரை ஒருவர் கொண்டாடினார்கள், மதித்தார்கள்,
ஆனாலும் என்னவோ இவர்கள் இருவரையும் கொண்டாடியவர்கள் இவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த நெருக்கத்தை, புரிந்துணர்வை.. ..
பெரிதாக பேசிக்கொள்வதில்லை.
ஒருவர் என் தந்தை கொண்டாடிய பாரதிதாசன் என்ற கனகசுப்புரத்தினம்.( தன் ஒரே மகனுக்கு சுப்புரத்தினம் என்று பெயர் சூட்டி பெருமை கொண்டவர் என் தந்தை பி.ஏஸ்.வள்ளிநாயகம் அவர்கள்)
இன்னொருவர் நான் என் வாசிப்பில் கண்டடைந்த புதுமைப்பித்தன் என்ற விருத்தாசலம்.
"தமிழர்களுக்கு பாரதியார் விட்டுச்சென்ற செல்வங்களில் குயில்பாட்டு, கண்ணன்பாட்டு, பாஞ்சாலிசபதம் இவைதவிர பாரதிதாசன் என்னும் கனகசுப்புரத்தினமும் ஒருவர்"
என்று உரக்க சொன்னவர் புதுமைப்பித்தன்.
1931க்குப் பின் வெளிவந்த மணிக்கொடி இதழ்களில் பாரதிதாசனின் மிகச்சிறந்த கவிதைகள் வெளிவந்துள்ளன. அக்கவிதைகளைக் கொண்டாடுகிறார் திஜரா.
பாரதிதாசனுக்கு அறிஞர் அண்ணா 29/07/1946 ல் நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் பொற்கிழி வழங்கியபோது அந்த நிதிதிரட்டும் குழுவில் உறுப்பினராக இருந்தவர் புதுமைப்பித்தன். பொருளாதர நெருக்கடி, வேலை இல்லை.. இச்சூழலில் புதுமைப்பித்தன் தன் பங்கிற்கு வழங்கி இருந்த
அன்பளிப்பு தொகை ரூ.100/ .... !!
புதுமைப்பித்தனை கொண்டாடும் மணிக்கொடி வட்டமும் சரி,
பாரதிதாசனைக் கொண்டாடிய/கொண்டாடும் திராவிட இயக்க/ திராவிட அரசியல் மேடைகளும் சரி..
இந்த இருவருக்கும் நடுவில் இருந்த தமிழ் உறவை
ஏன் கொண்டாடவில்லை?
புதுமைப்பித்தன் பிறந்தநாள் : 25 ஏப்ரல் 1906
பாரதிதாசன் பிறந்தநாள் : 29 ஏப்ரல் 1891.

No comments:

Post a Comment