Saturday, April 30, 2016

ஜெய் மகாராஷ்டிரா



மே 1, உழைப்பாளர்கள்  தின வாழ்த்துகள்.
மே 1, மகாராஷ்டிர தினமும் கூட.
சென்னை மாநிலத்தைப் போலவே பம்பாய் பிரசிடென்சியும்
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் குஜராத், மராட்டியம், மத்திய பிரதேசத்தின் சில  பகுதிகளை உள்ளடக்கியதாக  இருந்தது.  மொழிவழி மாநிலமாக இந்தியாவைப் பிரிப்பதற்கு முதலில் ஆதரவு கொடுத்த காங்கிரசு ஆட்சிக்கு வந்தப்பின் அப்பிரிவு இந்திய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் என்று கருதியது.
நேரு இக்கருத்தில் உறுதியாக இருந்தார். ஆனால் மராத்தி பேசும் மக்கள்
தங்களுக்கான மாநில கோரிக்கையை முன்வைத்து பிப். 6, 1956ல் சம்யுக்த மகாராஷ்டிர சமிதியை உருவாக்கினார்களா. அவர்களின் தொடர் போராட்டத்தில் ஃப்ளொரா பவுண்டனில்
அவர்கள் நடத்திய பேரணியில் பலர் உயிரிழந்தார்கள். அன்றைய நிதித்துறை அமைச்சராக இருந்த டி. தேஷ்முக்  தன் எதிர்ப்பை காட்ட பதவி விலகினார். சற்றொப்ப 105 பேர் உயிரிழந்தார்கள். அவர்களுக்கான நினைவு சின்னம் தான் ஹுடாம சவுக்கில்  இருக்கிறது. இப்போராட்டத்தில் பம்பாய் நகருக்கு மராட்டியர்களும் குஜராத்திகளும் உரிமை கொண்டாடினார்கள். நடுவண் அரசோ பம்பாய் நகருக்கு தனி ஸ்டேட்
அந்தஸ்த்து கொடுக்க விரும்பியது. பம்பாய் எங்கள் நகரம், பம்பாய் எங்கள் மண்,
என்று இம்மண்ணின் மைந்தர்கள் எடுத்த போராட்டம் வெற்றி பெற்றது.
மே 1, 1960 ல் மகாராஷ்டிர மாநிலம் பிறந்தது.
இன்றைய தினத்தை மகாராஷ்டிர மாநிலத்தவர் சாதி, மத, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து கொண்டாடுகிறார்கள்.
ஜெய் மகாராஷ்டிரா என்ற முழக்கத்துடன்.

No comments:

Post a Comment