Saturday, April 16, 2016

முரண்வெளி


முரண்கள் எல்லாம் பகை முரண்கள் அல்ல.
உடன்பாடுகள் எல்லாம் நட்பு உடன்படிக்கைகளும் அல்ல.
முரண்வெளியில் பயணிப்பது கத்திமுனையில் நடப்பது போலதான்.
நட்பு முரண்களாக என் வெளி விரிகிறது.
லெனின் சொன்னது போல என் ஆயுதத்தை நான் தீர்மானிப்பதில்லை.
என் எதிரில் நிற்பவர்கள் தீர்மானிக்கிறார்கள்.
காந்தி மகானைப் போல நான் அஹிம்சைவாதி அல்ல.
நிராயுதபாணியாக வெள்ளைக்கொடி ஏந்தி வந்தவர்களை
கொலை செய்த களம்.. 
அபிமன்யுவின் மரணத்தைவிட கொடியது.
தனிமனித ஆசாபாசங்களில் எவரும் எனக்கு வேண்டாதர்கள் அல்ல.
எந்த மூலையில் அநியாயம் நடந்தாலும்
உங்கள் உள்ளம் கொதிக்கிறதா.. அப்படியானால் நீ என் நண்பன்..
என்று என்னருகில் வந்து மீண்டும் சொல்கிறான் சேகுவேரா.
நான் சொல்வதை எல்லாம் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதல்ல என் எதிர்ப்பார்ப்பு.
ஆனால் அதைச் சொல்வதற்கான என் உரிமையை எவரும் பறித்துவிட முடியாது..
வால்டேர் எனக்காகவே .. உங்களுடன் பேசுகிறான்.
காதலைப் பற்றியும் கத்தரிக்காய் குழம்பு வைப்பதை பற்றியும் எழுதுவதில்லை தான். நான்!
எழுதத்தெரியாது என்பதால் அல்ல.!!
அபிப்பிராயங்கள் உண்மைகளாகிவிடுவதில்லை.
நான் எதை எழுதவேண்டும், எப்படி எழுதவேண்டும்
என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் என்னிடமில்லை. 
காலம் என் கைப்பிடித்து எழுதிக்கொண்டிருக்கிறது.
முடிவுகளை விட முயற்சிகள் முக்கியமானவை.
வெற்று வாழ்த்துகளில் செத்துக்கொண்டிருக்கும் ஜீவனுக்கு
நட்பு முரண்வெளி யில் ஒரு சொட்டு அமுது.

No comments:

Post a Comment