Tuesday, April 19, 2016

நிலம் எனும்..

நிலம் எனும்
-----------------


"அம்மா... உழவர்களும் அவர்களின் தொழிலும் இவ்வளவு உயர்ந்தது என்றால்
ஏனம்மா என்னை நீ விவசாயி ஆக்கவில்லை?" என்று என் மகன் கேட்பது போல.ஒரு பொங்கல் நாள் முகநூல் பதிவில் எழுதியிருந்தேன்.
நாம் அனைவருமே விவசாயத்தை, விவசாயிகளைக் கொண்டாடுகிறோம்,
மதிக்கிறோம், கவிதை எழுதுகிறோம், இன்னும் என்னவெல்லோமோ
செய்து கொண்டிருக்கிறோம். ஆனால்.. நம் வீட்டிலிருந்து ஒருவரையும்
அந்த மையப்ப்புள்ளிக்குள் விட்டுவிடாமல் மிகவும் பத்திரமாக
வெளிவட்டத்தில் சுற்றவிட்டிருக்கிறோம்.
கிராமத்தில் மட்டும் என்ன வாழ்கிறதாம்? ஒவ்வொரு வீட்டின் திண்ணையிலும் மச்சியிலும் நெல்லும் தானியங்களும் காய்ந்து கொண்டிருக்கும்.. 30  வருடங்களுக்கு முன்.
இப்போது எந்த வீட்டிலும் நெல் மூடைகளை காணவில்லை. இலவச தொலைக்காட்சியில் மக்கள் மெகா தொடர்களைப் பார்க்கிறார்கள். 100 நாள் வேலைத்திட்டத்தில் ஏதொ கிடைக்கிறது. வீட்டுக்காவலுக்கு பெரிசுகள் மட்டும் . மாதாமாதம் அவர்களுக்கு
நகர்ப்புறத்திலிருந்து வரும் மணியார்டருக்காக தபால்காரரை எதிர்பார்த்து
காத்திருக்கிறார்கள்.
நகர்ப்புறங்களில் வீடுகள்..  வீடுகள்.. வீடுகள் .. வீட்டு மனைகள்..
இப்போதெல்லாம் வீடுகளொ வீட்டு மனைகளோ குடியிருப்புக்கானவை மட்டுமல்ல.
 அவர்களின் அசையா சொத்து, சில வருடங்களில்
ஒன்றை பத்தாக்கும் அலாவூதின் அற்புதவிளக்கு.
இந்த இரு வாழ்க்கையின் போராட்டங்கள்.. ஆண் - பெண் உறவில் ..
சு.வேணுகோபாலின் "நிலம் எனும் நல்லாள்" நாவலாக...
நிலம் சார்ந்த மனிதனாக பழனிக்குமார்.
நிலத்தை வாழ்க்கையாக நினைக்கிறான்.
நகரத்தில் வாழும் அவன் மனைவிக்கு நிலம் வாழ்க்கை அல்ல.
அது ஒரு சொத்து. பண மதிப்பீடு.
தன் நிலத்தை விற்பது என்பது பழனிக்குமாருக்கு தன் ஜீவனைக் காயப்படுத்துவது போல.
அவன் மனைவிக்கு நிலத்தை விற்பது என்பது லாப நஷ்ட கணக்கு.
இந்தப் போராட்டத்தில் அவர்களுக்குள் இருந்த காதல் காணாமல் போய்விடுகிறது.
இரண்டு பூனைகளும் சண்டைப்போட்டுக்கொண்டு ஒருவரை ஒருவர் காயப்படுத்துவது போல கழிகிறது அவர்கள் வாழ்க்கை.
அவரவருக்கான நியாயங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
புத்தகத்தை வாசித்து முடித்தவுடன் .. பழனிக்குமாரும் ராதாவும் நமக்குள்
.. ஒருவகையில் இது எம் தலைமுறையின் நாவல்.

பழனிக்குமாரின் பிள்ளைகளுக்கு இப்பிரச்சனை இருக்காது.
அவர்கள் மனைகளை வாங்கலாம், விற்கலாம்..
அவர்கள் மனைகளின் தரகர்களாக இருப்பார்களே தவிர
நிலத்தின் மைந்தர்களாக
 நிலத்துடன் உறவு கொண்ட மனிதர்களாக இருக்கப்போவதில்லை.
நாவலில் சில வரிகள்:
"அகல விரித்த கால்களுக்கிடையில் கோயிலைக் குவித்துச் சேர்த்து உருட்டிக்கொண்டிருக்கும் மாசாணி, தன் பருவம் பற்றி அறியாப் பேதை மாசாணி. மணற்கோவில் இந்த மாசாணி முன் ஒன்றுமில்லை. அது வெறும் மணல். அவள் உயிரோட்டமுள்ள கோவிலாக அமர்ந்திருக்கிறாள். பாவாடை ஏறி விலகி மாசாணியின் கருவறை வாசல் பயமுறுத்துகிறது. அவள் கால்களுக்கிடையில் கன்னி கனலாய்ச் சுடர்கிறாள். மனிதவடிவில் தான் கோயில்களை உருவாக்கியிருக்கிறானோ
ஆதிக் கலைஞன். ஆதி அம்மை, அங்கையற்கண்ணி உடலே கோபுரமாக அமர்ந்திருக்கிராள்.
அணையா விளக்கை நேருக்கு நேர் பார்க்கக் கூச்சமாக இருக்கிறது..."
(தமிழினி வெளியீடு.)


No comments:

Post a Comment