Tuesday, January 5, 2016

பதன்கோட் தாக்குதல் .. இந்திய உளவுத்துறையின் தோல்வி


பதன்கோட் தாக்கப்பட்டிருப்பது கவலை தரும் செய்தி.
பதன்கோட் சதாரண விமானப்படை தளம் மட்டுமல்ல.
அத்தளத்திற்கு சில சிறப்பம்சங்கள் உண்டு.
* பாகிஸ்தானின் தாக்கினால் அதை எதிர்கொள்ள இந்திய
இராணுவம் உருவாக்கிய முதல் சிறப்பு விமானப்படைத்தளம்.
*108 Squadron Hawkeyes that fly the MiG-21 fighters and also the 125 Helicopter Unit Gladiators.
*தேவைப்பட்டால் பாகிஸ்தான் பகுதியைத் தாக்கும் மிக் போர்விமானங்கள் எப்போதும்
தயார் நிலையில் இருப்பதும் இத்தளத்தில் தான்.
*இந்திய-பாகிஸ்தான் போர் நடந்தப்போதெல்லாம் முதல் தாக்குதலுக்குள்ளாகும் முக்கியமான போர்த்தளம் இது
.
கடுமையான கட்டுப்பாடுகள் கொண்ட தளத்திற்கு இந்திய இராணுவ உடையில் தீவிரவாதிகள் ஊடுருவ முடிகிறது என்பதும், தாக்குதல் நடத்த முடிகிறது என்பதும்
கவலைப்பட வேண்டிய செய்தி.
"நேற்றுவரை பாகிஸ்தான்நமக்கு எதிராக எப்படி நடந்து கொண்டிருக்கிறது என்பதிலிருந்து
நாம் எந்தப்பாடமும் கற்றுக்கொள்ளவில்லை. இரண்டு நாட்கள் கூச்சலிடுவோம்.
விவாதம் செய்வோம். அவ்வளவுதான். அதன் பின் வழக்கம்போல அடுத்த ப்ரேக்
நியூஸ் .. வெட்ககேடு.. " என்று கொந்தளிக்கிறார் மேஜர் ஜெனரல் சட்பீர் சிங் (ஓய்வு).
நம் உளவுத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? உளவுத்துறையின் தோல்வி இது
என்று தன் கருத்தை வைக்கிறார் அவர்.
"இது தீவிரவாதிகளின் தாக்குதல் அல்ல
.ஐ எஸ் ஐ த திட்டமிட்டு நடத்திய தாக்குதல்.
தீவிரவாதிகள் என்ற பெயரில் பாகிஸ்தான் நம்மீது நடத்திய யுத்தம் ."என்கிறார்
இராணுவ அறிவியல் ஆய்வு செய்யும் அசோக் கே பெகுரியா .
இது ஒன்றும் எதிர்பாராமல் நடந்த தாக்குதல் அல்ல. எப்போது நம் பாரதப்பிரதமர் மோடி அவர்கள் லாகூரில் இறங்கி பிறந்தநாள் வாழ்த்து சொன்னாரோ அப்போதே
இதற்கான ஒத்திகையும் காட்சிகளும் எழுதப்பட்டு விட்டன.
எப்போதெல்லாம் பாகிஸ்தான் ஆட்சியில் இருப்பவர் இந்தியாவுடன்
நல்லுறவு கொள்ள விரும்புவதாக தெரிந்தால் கூட போதும்..
பாகிஸ்தானின் இராணுவமும் உளவுத்துறையான ஐ எஸ் ஐ யும் இப்படி எதையாவது செய்து எல்லா கதவுகளையும் மூடிவிடும்..
சொல்லப்போனால்,
இந்திய பாகிஸ்தான் உறவு என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட இரு நாடுகளின் தலைவர்களொ அவர்களின் ஆட்சியோ தீர்மானிக்கும் விஷயமட்டும் அல்ல.
அதற்கும் மேலே.

1 comment: