Tuesday, July 1, 2008

ஒரு கேள்விக்குப் பதிலான கவிதை





நான் ஏன் பிறந்தேன்?
என்னை ஏன் பெத்துப் போட்டே?
யார்ட்ட கேட்டுட்டு என்னைப் பெத்தீங்க?
நான் பொறக்கனும்னு உங்கக்கிட்டே வந்து அழுதேனா?
இந்த மாதிரி கேள்விகளை நாம் ஒவ்வொருவரும்
வெவ்வேறு அர்த்தத்தில் கேட்டிருப்போம்.
நம்மிடமும் இந்தக் கேள்விகள் கேட்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இப்படித்தான் நடிகர் அமிதாபச்சன் தன் தந்தை ஹரிவன்ஷ்ராய் பச்சனிடம்
கேட்டார்.

ஆப்நே ஹமே பைதா க்யூன் க்யா?

அப்போது அமிதாப்புக்கு இளம்வயது. கல்லூரி முடித்து வேலைக்காக
காத்திருந்த நாட்கள்.
கவிஞரான ஹரிவன்ஷ்ராஜ் பச்சன் மகனின் கேள்விக்கு உடனே பதில் சொல்லவில்லை.
அன்றிரவு அதைக் கவிதையாக எழுதி மறுநாள் மகனிடம் கொடுக்கிறார்.

கவிதைக்குத் தலைப்பு:
புதிய தலைமுறை (நயிலீக்)
-----------------------------

வாழ்க்கையில்
வாழ்வதற்கான
போராட்டத்தில்
காயங்களுடன்
கேட்கிறான் என் மகன்
என்னிடம்.
'என்னை ஏன் பெற்றெடுத்தாய்?"

அவன் கேள்விக்கு
என்னிடம் பதிலில்லை!
ஏனேனில்
என் அப்பாவும்
என்னிடம் கேட்காமலேயே
என்னைப் பெற்றெடுத்தார்!
என் அப்பாவின் அப்பாவும்
கேட்கவில்லையே!
அப்பாவின் அப்பாவுக்கு அப்பாவும்
அப்படியே.

வாழ்க்கைப் பாதையில்
சோதனைகள்
அன்றுபோலவே இன்றும்.
நாளையும் இதுவே தொடரும்
இன்னும் அதிகமாக.
மகனே
நீ ஏன்
ஒரு புதிய அத்தியாயத்தை
புதிய சிந்தனையை
உருவாக்ககூடாது?
உன் மகனிடம்
கேட்டபின்
அவனைப் பெற்றெடு.

(செய்தி: நன்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா 29/6/08)




.

No comments:

Post a Comment