Tuesday, March 26, 2013

திருமண அழைப்பிதழ்







மேற்கண்ட திருமண  அழைப்பிதழை இன்றைய தினகரன்\மும்பை பதிப்பு
நாளிதழின் கடைசிப் பக்கத்தில் பார்த்தேன். நானும் ஒரு மும்பை வாசியாக
இருப்பதால் உங்கள்அனைவரையும் திருமணத்தில் கலந்து கொள்ள
\விரும்பி அழைப்பது என் கடமையாகிவிட்டது.

வருக வருக அனைவரும் வருக.

இத்திருமண அழைப்பிதழில் குடும்பத்தில் மூத்தவன் என்கிற
முறையில் மூத்த சகோதரனின் பெயரை தங்கள் நல்வரவை
விரும்பும் என்றாவது அச்சிட்டிருக்கலாமே என்று
உங்களில் பலர் யோசிப்பது எனக்குப் புரிகிறது.
எனக்கும் அதே எண்ணம் தான் வந்தது.

தலைவரிடம் கேட்டால் தனக்கு எதுவுமே தெரியாது என்பார்.

எல்லாம் பக்தரடித் தொண்டர்களின் வேலை என்று அறிக்கைவிடுவார்.
.
யார் பெயரைப் போடலாம், போடக்கூடாது என்பதை
பொதுக்குழு தீர்மானிக்கும் என்பார்.

பாவம் மூத்தவன்! என்ன செய்வாரோ தெரியவில்லை,
தலவலி, வயத்தவலி என்று ஏதாவது காரணம் சொல்லி
நிகழ்வுக்கு வராமல் இருப்பதைவிட வேறு ஏதாவது
வழி இருக்கிறதா என்ன?

இச்செய்தியை சமகால அரசியல் நிகழ்வுகளுடன்
தொடர்பு படுத்திக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.



Wednesday, March 20, 2013

இலண்டன் சர்ச்சில் இசுலாமியர் தொழுகை









ஸ்காட்லாந்தில் அபிர்டீன் பகுதியில் இருக்கும் செயின்ட் ஜாண்
ஆலயமும் சையத் ஷா முஸ்தபா ஜெம் மஜித் பள்ளிவாசலும்
அருகருகே இருந்தன. பள்ளிவாசல் சிறிதாக இருந்ததால்
தொழுகை நடத்தும் இசுலாமியர்கள் திறந்தவெளியில்
உட்கார்ந்து  தொழுகை நடத்தினார்கள்.




பனிப்பொழியும் நேரம், உறைகள் அணியாத கைகள்,
குளிரில் நடுங்கும் கால்களுடன் அந்த இசுலாமிய சகோதரர்கள்
திறந்த வெளியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொழுகை
நடத்துவதை எல்லோரையும் போல வேடிக்கைப் பார்க்கவில்லை
ஐசக் பூபாலன்.



ஐசக் பூபாலன்  செவிலியர் வேலைக்குப் படித்தவர். இலண்டனில்\
கிறித்தவ ஆலயத்தில் போதகராக இருக்கிறார். சம்பந்தப்பட்ட
ஆலய  நிர்வாகத்தினரிடம் முறையாகப் பேசி வெள்ளிக்கிழமைகளில்
சர்ச்சில் எதுவும் நடப்பதில்லை என்பதைச் சுட்டிக்காட்டி  அனுமதி வாங்கினார்
வெள்ளிக்கிழமைகளில் இசுலாமியர்கள் சர்ச்சுக்குள் வந்து ஐந்து முறை
தங்கள் தொழுகையை நடத்தலாம் என்றார்.. ஆரம்பத்தில் இசுலாமியர்களிடம்
தயக்கம் இருந்ததாம். ஒன்றிரண்டு பேராக வர ஆரம்பித்திருக்கிறார்கள்,
இப்போது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இசுலாமியர்களின்
தொழுகை இடமாக சர்ச் .

ஐசக் பூபாலன் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தைச் சார்ந்தவர் என்பது
நமக்குப் பெருமை தரும் செய்தி.


(நன்றி: டைம்ஸ் ஆஃப்  இந்தியா 21/3/13 )

காட்சி மாற்றங்கள்




இடையில் நடந்தது என்ன?

காட்சிகளில் மாற்றம்.




Thursday, March 7, 2013

யாருக்குப் பெண்கள் தினம்?





மார்ச் 8, 1908ல் மென்கெட்டன் வீதிகளில் 15000 பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக நடத்திய அந்தப் பேரணி..
பெண்கள் தினத்தின் அந்த முதல் புள்ளியில்
ஒரு கறுப்பு நிறப் பெண் கூட கலந்து கொள்ளவில்லை
என்கிற வரலாற்றை பெண்கள் தினம் கொண்டாடும் பலர்
மறந்து போயிருக்கலாம்.
ஆனால் எங்களால் மறக்க முடியவில்லை.
ஏன் தெரியுமா...?
நியூயார்க்கின் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் அந்த
உரிமையைக் கூட ஆப்பிரிக்கன் அமெரிக்கன் கறுப்புபெண்கள்
பெற்றிருக்கவில்லை.

அன்றைக்கு பெண்கள் உரிமைகாக நடந்த அந்தப் பேரணியாகட்டும்,
அங்கே ஒலித்த பெண்களின் குரலிலாகட்டும் ,
தன்னை ஒத்த சக மனுஷியான ஆப்பிரிக்க பெண்ணுக்காக
எந்தக் குரலும் இல்லை.

இந்தக் கதை ஏதொ ஆப்பிரிக்க அமெரிக்க இன வரலாற்றின் பக்கம் மட்டுமல்ல.,
இதோ இந்தியாவின் ..சாதியக் கொடூரத்தில் எவராலும் எப்போதுமே
எழுதப்படாத இந்தியப் பெண்களின் கதையும் தான்.

இந்திய இராணுவமே எங்கள் பெண்களை வல்லாங்கு செய்கிறது.
காஷ்மீரில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பெண்கள்
இந்திய எல்லைக் காவல் படையால் அனாதைகளாக்கப்பட்டிருக்கிறார்கள்.
பாலியல் வன்புணர்வு குற்றஞ்சாட்டப்பட்டவர்களை எங்கள் அரசியல்
கட்சிகள் வேட்பாளர்களாக்கி நாடாளுமன்றம் அனுப்புகின்றன.
எங்கள் தலைநகர் டில்லியில்  ஒரு நாளுக்கு 4 பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள்.
பெற்ற மகளைத் தாயாக்கும் ஆண்மிருகஙக்ள் எங்களுடன் வாழ்கின்றன.
ஒருதலைக் காதல் கொண்டு ஏற்க மறுக்கும் பெண்களை ஆசிட் ஊற்றி
தன் காதல் பழியைத் தீர்த்துக் கொள்ளும் இளைஞர்கள் எங்கள்
சமூகத்தில் நடமாடுகிறார்கள்.
காதலும் வீரமும் எங்கள் பண்பாடு என்று கொண்டாடிய எங்கள் சமூகத்தில்
சாதிமறுப்பு திருமணம் செய்ய, அதிலும் தலித் ஆண்களைக் காதலிப்பதும்  திருமணம் செய்து கொள்வதும் தங்கள் சுயசாதிப் பெருமைக்கு இழுக்கு
என்று கொக்கரிக்கும் அரசியல் தலைவர்கள் பகிரங்கமாக எங்கள்
மேடைகளில் உலா வருகிறார்கள்.
ஊமைகாளாக்கப்பட்டிருக்கிறார்கள் அவர்கள் வீட்டுப் பெண்கள்.
இந்தப் பெண்களுக்கு இல்லை பெண்கள் தினம் 


எங்கள் சாலைகளில் பெருக்கி சுத்தம் செய்யும் அவள்
ஓடும் புகைவண்டியில் நெருக்கியடித்து நுழைந்து
காதணியும் நைட்டியும் விற்றுப்பிழைக்கும் அவள்
சிவப்பு விளக்குப் பகுதியில் பகல் நேரத்தில்
பள்ளிக்கூடம் போய் இரவு நேரத்தில்
கட்டிலுக்கடியில் ஓசையின்றி தூங்கும் மகள்
இந்தப் பெண்களுக்கு இல்லை பெண்கள் தினம். 

பின் யாருக்குத்தான் இந்தப் பெண்கள் தினம்?



பெப்சி கம்பேனியில் இந்திரா நொயி
ஐ சி ஐ சி ஐ வங்கியில் CEO சந்தன் கோச்சர்
அப்பலோ மருத்துவமனை மேனேஜிங் டைரக்டர் பிரீத்தா ரெட்டி
ஜே பி முர்கன் இந்தியாவின் CEO கல்பனா மூர்பாரியா
இந்திய பேரரசின் எல்லையில்லா அதிகாரம் கொண்ட சோனியா காந்தி
தமிழகத்தின் ஜெயலலிதா
மம்தா ...

இவர்களுக்கும் இவர்களை ஒத்த கார்ப்பரேட் மற்றும் அரசியல் தலைவர்களின்
பெரிய வீடு சின்னவீடுகளுக்கும் அவர்களின் மகள், மருமகள்கள் மற்றும் பேத்திமார்களுக்கும் வெள்ளித்திரை சின்னத்திரை பிரபலங்களுக்கும்
மார்ச் 8, பெண்கள் தின கொண்டாட்டம் உண்டு, உண்டு, உண்டு.







Tuesday, March 5, 2013

அந்தக் கதை

மராத்தி கவிஞர் கவிதா மகாஜன் எழுதிய  the story
கவிதையின் தமிழாக்கம்.


அவள்
சூரிய வெளிச்சத்தை
உணர்ந்த தருணங்களின் கதையிது.

மண்ணில் அந்த வீடு
விரைவாகவும் உறுதியாகவும்
எழுந்து நின்றது.
கதவுகளும் சன்னல்களும
நம்பமுடியாமல்
வாய்ப்பிளந்து நின்றன.
சுவர்கள் பெருமூச்சுவிட்டபடியே
அவசரமாகக் கண்களை மூடும்போது
அவள்
பிரகாசமான 
சூரிய வெளிச்சத்துண்டுகளை
தன் நாக்கில் வைத்துக் கொண்டாள்.

தலைவன் அவளிடம் கேட்டான்:
உன் வசீகரமான மேனி
சிவந்த உதடுகள்
குளிர்ந்த விழிகள்
எல்லாம் என்னவாகும்?

கண்களில் மின்னும் ஆசைகளுடன்
கைகளைப் பொன்னூஞ்சலாக்கி
அவன் நிழல்
அவளை நெருங்கும் ஆசையில்..
ஆனால் அவளோ
சிரித்துக் கொண்டே இருந்தாள்
பொன்னிறமாக ஒளிவீசும்
சூரிய வெளிச்சத்தை
விடாமல் பிடித்துக் கொண்டே.


Friday, March 1, 2013

நேற்று அவர்கள் அறிவித்தார்கள்..



நேற்று அவர்கள் அறிவித்தார்கள்
--------------------------------------------------------------அர்ஜூன் காம்ப்ளே

சொர்க்கத்து மலர்களை முகர்ந்து பார்ப்பதில்
மும்முரமாக இருந்தோம் நாங்கள்
அவர்கள் வந்து எங்கள் பாதங்களை
பூமிக்கடியில் புதைத்தார்கள்
மலரின் மணங்களைக் களவாடிச் சென்றார்கள்
மாளிகை எழுப்பினார்கள்:

மழைப் பொழிந்த போது
தூய்மையான தண்ணீரைப் பருகினார்கள்
புதையுண்ட எங்கள் பாதங்களிலிருந்து
பூதியபூமி மேலெழுந்தது.
அதேபூமியில்
பல்வேறு வண்ணங்களில்
பலதரப்பட்ட மலர்களைப் பயிரிட்டார்கள்
பல்வேறு பரிசோதனைகளைச் செய்தார்கள்
மலர்களைப் பறிக்கும்போது
எங்கள் கால்களை அழுத்தி மிதித்தார்கள்
தெரிந்தோ தெரியாமலோ

அதன்பின் அவர்கள் ஒரேவண்ணத்தை
மலர்களில் ஒட்டினார்கள்
அதே மலர்களால் தங்கள் தேர்களை அலங்கரித்தார்கள்
அதே மலர்களால் தங்கள் போர்களைக் கொண்டாடினார்கள்

சிலகாலம் மழைவரவில்லை
தேர்கூட சிறைக்கூடத்தில்'
சவச்சீலைகள் கூட தென்படவில்லை
அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள்
அவர்களின் தலைவர்
எங்கள் கல்லறையைத் தோண்டினார்
அதன்பின் அவர்கள் முடிவுசெய்தார்கள்
கள்ளிச்செடிகளை பயிரிடுவதென்று.
நேற்று அவர்கள் அறிவித்தார்கள்
கள்ளிச்செடிகளைப் பிடுங்கி எறிவதாக
நேற்று அவர்கள் அறிவித்தார்கள்
எங்கள் பாதங்களை விடுவிப்பதாக'
நேற்று அவர்கள் அறிவித்தார்கள்
நாங்கள் பருகுவதற்கு சிறுதுளி தண்ணீர் தருவதென.


(மராத்தி கவிதையின் தமிழ் மொழியாக்கம்: புதியமாதவி
உதவி: அர்ஜூன் டாங்க்ளே)

Monday, February 25, 2013

SEMINAR ON SOCIAL JUSTICE








Let us start this day with surya namaskaar.

This is our sunrise

I like to read the poem of Sharankumar Limbale, (marathi poet)

I do not ask for the sun and moon from your sky
Your farm your land
Your high houses  or your mansions
I do not ask for gods and rituals
Castes and sects
Or even for your mother, sisters, daughters,
I ask for
My rights as a man
Each breath from my lungs
Sets off a violent trembling
In your texts and traditions
Your hells and heavens
Fearing pollution
Your arms leapt together
To bring to ruin our dwelling places.
You’ll beat me, break me,
Loot and burn my habitation
But my friends!
How will you tear down my words
Planted like a sun in the east?
My rights : contagious caste riots
Festering city by city, village by village,
Man by man
For that’s what my rights are-
Sealed off, outcast,road-blocked, exiled.
I want my rights give me my rights.
Will you deny this incendiary state of things?
I ‘ll uproot the scriptures like railway tracks,
Burn like a city bus your lawless law
My friends!
My rights are rising like the sun
Will you deny this sunrise?


Vanakkam
Namasthe
Namshkaar
Aapkaa svagat hai
Suswagatham
Swaagatham
&
JAI BHIM

DEAR FRIENDS,

Today is the memorable day in mumbai.
The history is repeating here after 1940, in the same soil.
I am very proud to know that our fathers generation at mumbai invited Thanthai Periyaar
At 1940 to discuss about the social justice with Dr. Babasaheb Ambedkar and Jinnah.
It was really a gathering wind to smash congress, the media said,
JUSTICE LEADER TO SAIL IN THE SAME BOAT WITH JINNAH AND AMBEDKAR.

Our dharavi kaalakilla road public meeting of 07 Jan 1940,
Very important day in mubai tamizar.
In that meeting Ambedkar was the president and Periyar was the chief guest
The interpreter  is  Anna!

Today, the history is repeating again !
We invited the president of dravidar khazhagam, Mr veeramani,
The strong pillar of social justice in India after Periyar with us
In the same soil with Dr.Ambedkar’s followers

We know, backward class & dalith
The sutras and panchamaas
The total non Brahmins should come under one roof to fight for the
Social justice.

This team
This conference
The scholars in the dais
It is the dream of mahatma Buhler
And the wish of Thanthai Periyar.

2500 years ago, Gauthama Buddha ,the first person to introduce the social
equality and justice in North India. In south, the great poet, scholar and philospher
Thiruvalluvar strong said
EVERYONE IS EQUAL BY BIRTH

PIRAPOKKUM ELLA UYIRKKUM

Saahu Maharaj, Mahatma Bhule, Dr.Babasaheb Ambedkar, Thanthai Periyar, Kanshiram..
The long list..
We all know the social history of the social justice revolution.

It is really ashamed to India, the great democracy of the world, to discuss on this
Subject after 65 years of Independent.
The wrongs and the consequent disabilities are historical because they
Originated in the PAST,
But they are not the things of the past ,
They are the REALITY EVEN TODAY.

KHERLANCHI AND DHARMAPURI

Only the name of the places are different
But he reasons are same, same..

How could there be free, fair, equal competition among unequals?
I remember Ayyaa Veeramani’s article of 2004 to Hindu paper
He said: RESERVATION IS DEMANDED AS A RIGHT
TO SET RIGHT THE WRONGS.

Reservation is the policy based on the principles of social justice
To eradicate the continuing social injustice.

Recently while watching the Parliament session, our speaker Meerakumar
Said< : the worlds richest persons are living in India, How come we are poor
Country? Many are below the poverty line? I really don’t understand this!”
 She may know why it is?
But as a politician she refused to accept the fact.
India’s natural resources are not only for Ambani and Mittal families,
Everyone, you and me , have the right for our natural resources..

Our parliament never open the gates for us,
We don’t have our representation
Our Indian democracy was never been ruled by 50% majority winning votes
Of any individual parties or aligns
Candidates got less than 20% votes also become MP in India.
We realized this basic mathematic error and started campaign for electoral
Reforms in India.

I like to say few words about Mr. Suresh Mane and Mr. Pradeep Dhoble.

I have met Suresh Mane in the Tata institute seminar with Black African American scholars. We all know that he is actively involved into the political affairs and growth
Of the BSP. He is the founder of Bahujan Municipal Kamkar Union .
He is fighting for the rights of the Mumbai municipal workers and Mumbai
Port trust workers. He is academically superior person in politics.
The most important fact about him is, for me, as a writer,
He is the author of 4 books.

Pradeep Dhoble, Engineer, MBA  graduate.
President of  OBC Seva sangh
President of Air Corp. OBC Employees Association
And sec. Of All India federation of Backward class Employees association.

Mr. V Kumaresan, the general secretary
Of The rationalists’ Forum, Tamil nadu.
The rationalist forum is the backbone of the social justice
Activities

It is great  pleasure to welcome u all,
The BSP Activists
Ambedkar followers
Periyaar perumthondarkaL
My karunchattai thambimaar
Dravidian movement leaders of Mumbai,
Writers,  journalists
Iam thanking the team on behalf of everyone
For arranging this seminar ..

Before saying  bye to all,
I am repeating Dr. Babasaheb Ambedkar’s address to the
Assembly on 26th Nov 1950.

ON 26TH JAN 1950, WE ARE ENTERING INTO THE WORLD OF CONTRADICTIONS. IN POLITICS WE HAVE EQUALITY AND IN SOCIETY
INEQUALITY. IN POLITICS WE WILL BE RECONGNISING THE PRINCIPLE OF ONE MAN ONE VOTE AND ONE VOTE ONE VALUE. BY REASON OF OUR
SOCIAL AND ECONOMIC STRUCTURE CONTINUE TO DENY THE PRINCIPLE OF
ONE MAN ONE VALUE”

RESERVATION IS NEITHER A POLICY MATTER  , A POLITICAL
GIMMICK NOR A MATTER OF CHARITY. IT IS A CONSTITUTIONAL
OBLIGATION”

Thank you.

(welcome address  on 24/2/2013
at Ambusher Velbai sabhagraha, near Nappoo hall,
central matunga, Mumbai 19.

Seminar on social justice
Reservation –
Challenges and tasks

 Presidentail address: Dr K Veeramani , president, Dravidar kazhagam, Tamil Nadu

Speakers: Prof. Dr. Suresh Mane, Mr. Pradeep Dhoble and Mr V kumaresan.


Arranged by Mumbai Rationalist Forum, OBC seva sangh, Maharashtra.

Saturday, February 16, 2013

அப்சல் குரு - தூக்குமேடையில் உயிர்த்தெழும் கேள்விகள்




அப்சல் குருவைத் தூக்கிலிட்டதன் மூலம் இந்திய அரசு ஒரு வழக்கை முடித்துவிட்டதாக நினைக்கலாம். ஆனால் இந்த வழக்கின் முடிவில் இன்னும் முடிவு பெறாத கேள்விகள் அவை அப்படியே தான் இருக்கின்றன. தூக்குமேடையில் அந்தக் கேள்விகள் மீண்டும் உயிர்த்தெழுந்திருப்பதை இந்தியவின் கூட்டு மனசாட்சி என்ற கல்லறைக்குள் அடைத்துவிட முடியாது.
கேள்வி எண்: 1
அப்சல் குரு பயங்கரவாத அமைப்பிலிருந்து விலகி இந்திய பாதுகாப்புப் படையிடம் சரணடைந்தவர் என்பதை அவருடைய ஒப்புதல் வாக்குமூலமும் பாதுகாப்பு படையும் ஒத்துக்கொண்டிருக்கின்றன. அப்சல் குரு தொடர்ந்து எல்லைப் பாதுகாப்பு படையுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். அப்படிப்பட்ட ஒருவரை நம்பி எப்படி பாராளுமன்றத்தை தாக்கும் தீவிரவாத அமைப்பினர் செயல்பட்டார்கள்? எல்லைப் பாதுகாப்புப் படையினர் அதைக் கண்காணிக்க எப்படி தவறிவிட்டார்கள்?
கேள்வி எண் : 2
டிசம்பர் 19, 2001ல், பாராளுமன்றத் தாக்குதலுக்கு ஆறுநாட்கள் கழித்து காவல் துறை ஆணையர் எஸ்.எம்.ஷங்காரி பாராளுமன்றத்தை தாக்கிய முகமது யசின் என்பவரை அடையாளம் காட்டினார். அதாவது நவம்பர் 2000ல் மும்பையில் கைது செய்யப்பட்ட முகமது யசின் ஜம்மு காஷ்மீர் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். ஷங்காரி சொல்வது சரி என்றால், ஜம்மு காஷ்மீர் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்ட முகமது யசின் எப்படி இந்தத் தாக்குதலில் இடம் பெற்றார்?
கேள்வி எண்: 3
பாராளுமன்றத் தாக்குதல் நேரடியாக CCTV காமிராவில் பதிவு செய்யப்பட்டிருந்ததை அனைத்துக் கட்சியினரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். காங்கிரசு கட்சியின் பிரியரஞ்சன் துஷ்முன்ஷி பாராளுமன்றத்தைத் தாக்கியது ஆறு பேர் என்றும், அவர்கள் காரில் வந்து இறங்கியதை தான் கண்டதாகவும் சொல்கிறார். ஆனால் இந்திய பாதுகாப்புப் படை 5 பேரை மட்டுமே சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். எங்கே அந்த ஆறாவது நபர்? காமிராவும் ஆறு பேர் என்றுதான் பதிவு செய்திருக்கிறது. அப்படி இருக்க ஏன் காவல் துறையினர் பாராளுமன்றத்தைத் தாக்கியது 5 பேர் தான் என்று சொன்னார்கள்? தாக்குதலை நேரடியாக பதிவு செய்திருக்கும் CCTV/ காமிரா  நீதிமன்றத்தில் ஏன் சாட்சியமாக்கப்படவில்லை?
கேள்வி எண் : 4
பாராளுமன்றத் தாக்குதலில் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் என்று சொல்லப்படும் அந்த ஐவரைப் பற்றி எந்த விவரமும் இன்றுவரை தெரிவிக்கப்படவில்லையே! ஏன்? யார் அவர்கள்?
கேள்வி எண் 5:
பாராளுமன்றம் தாக்கப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே இத்தாக்குதல் குறித்து காவல்துறையும் அரசாங்கமும் அறிந்திருந்தன. அத்துடன் டிசம்பர் 12, 2001ல் அன்றைய பிரதமர் வாஜ்பாய்க்கு இது குறித்த எச்சரிக்கை அனுப்பப்பட்டிருந்தது. அடுத்த நாள் தாக்குதல் 13, டிசம்பரில் தாக்குதல் குறித்த இத்துணை விவரங்கள் அறிந்திருந்தும் பயங்கர வெடிமருந்துகள் ஆயுதங்களுடன் கூடிய கார் எப்படி பாதுகாப்பு படையின் கண்காணிப்புகளைத் தாண்டி பாராளுமன்றத்தில் நுழைந்தது?
கேள்வி எண் : 6
அப்சல் குருவை சித்திரவதை செய்ததை அப்சல் குரு மட்டுமல்ல, செய்த அதிகாரி சிறப்பு பாதுகாப்பு படை டி.எஸ்.பி. தேவிந்தர் சிங் ஒத்துக் கொண்டிருக்கிறார். அந்த தேவிந்தர் சிங் தான் டில்லியின் ஒரு சின்ன வேலை இருக்கிறது என்றும் அந்த சின்ன வேலையைச் செய்ய வேண்டியும் அப்சல் குருவை பணித்திருக்கிறார் ( அதாவது ஆணையிட்டு மிரட்டி இருக்கிறார்) அது என்ன சின்ன வேலை?
கேள்வி எண் : 7
அது என்ன CRACKDOWN - CORDON AND SEARCH OPERATION? காஷ்மீரில் இந்திய அரசு கட்டவழித்து விட்டிருக்கும் இந்த தீவிரவாதத்திற்கு என்ன பெயர்?

(crackdown என்பது பயங்கரவாத அமைப்புகளிலிருந்து தப்பிவந்த/ பிடித்துக் கொண்டு வரப்பட்டவர்கள் இந்திய பாதுகாப்பு படையின் கைக்கூலிகளாக்கப்படுகிறார்கள். காஷ்மீரிலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் பொதுமக்கள் ஒரிடத்தில் கூட வேண்டும் என்ற அழைப்பு வந்தவுடன் அவர்கள் அந்த இடத்திற்கு வந்தாக வேண்டும். அப்போது பாதுகாப்புப் படையின் கைக்கூலி அதாவது அவர்கள் மொழியில் சொல்வதானால்\ இன்ஃபார்மர் யாரை எல்லாம் கை நீட்டி அடையாளம் காட்டுகிறானோ அவர்கள் எல்லாம் பிடித்துச் செல்லப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு மனநிலை பிறழ்ந்த நிலையில் தெருவில் தூக்கி எறியப்படுவார்கள் அல்லது குண்டு பாய்ந்த உடல் சாக்குக் கோணியில் அழுகிக் கிடக்கும். இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட கொலைகள் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒரு மாதத்தில் குறைந்தது 12 கொலைகளாவது நடக்கின்றன, தீவிரவாதத்துடன் எவ்விதமான தொடர்புமில்லாத பொதுமக்கள் மீது)
கேள்வி எண்: 8
நீதிமன்றங்கள் குற்றவியல் வழக்குகளை இந்தியாவின் கூட்டுமன்சாட்சியைத் திருப்திபடுத்தும் நோக்கில் முடிவு செய்கின்றன என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பது பாராட்டுதலுக்குரியது தான்!! ஆனால் எது இந்தியா? இந்திய கூட்டு மனசாட்சியின் நிறம் என்ன? எப்போதெல்லாம் அது விழித்துக் கொள்கிறது? இந்திய கூட்டு மனசாட்சியின் கூண்டில் எப்போதும் குற்றவாளிக் கூண்டில் நிற்பவர்கள் யார்? ஏன்?
-

Monday, February 11, 2013

இந்திய ரா வும் கமலின் ர்ரா நாடகமும்





இந்திய விடுதலைக்குப் பின் நேருவின் காலத்தில் சீனா இந்திய எல்லையைத் தாக்கிய போது இந்தியா அந்தப் போரை எதிர்கொள்ளும் நிலையில் இல்லை.
இந்தியாவின் அந்த இக்கட்டான நிலைதான் இந்திய உளவுத்துறை அமைவதற்கான ஓர் உடனடி அவசியத்தை ஏற்படுத்தியது எனலாம்.
(Research & Analysis Wing (RAW)) ரா என்ற இந்திய உளவுத்துறை ஆரம்பிக்கும்போது 250 பேருடன் அமெரிக்க டாலர் 400,000 மூலதனத்துடன்
ஆரம்பிக்கப்பட்டது. இன்று 8 முதல் 10 ஆயிரம் பேர் ராவில் இருப்பதாக
சொல்கிறார்கள். ரா வின் வேலைகளுக்காக ஒதுக்கப்படும் பட்ஜெட் தொகை
அமெரிக்க டாலர் 145 மில்லியன்.

ரா அதிகாரிகள் முழுமையாக பயிற்சி பெற்றது இஸ்ரேலிடம்.

ரா அமைப்பில் இரண்டு பிரிவுகள் இருக்கின்றன.
(counter intelligence team - X  and counter intelligence team J)
CIT - X பிரிவு பாகிஸ்தான் முதலான அண்டைநாடுகளின் ஒவ்வொரு
அசைவுகளையும் கவனிக்கும். CIT J என்ற பிரிவு காலிஸ்தான் போன்ற
உள்நாட்டு பிரிவினை சக்திகளைக் கவனிக்கும். இந்த இரண்டு பிரிவுகளும்
சேர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தானில்  தீவிரவாத சக்திகளை வளர்ப்பதாக பாகிஸ்தானின் இராணுவப்பிரிவு நிபுணர் எழுத்தாளர் ஆயிஷா
சித்திக்குவ ( Newsline)சொல்கிறார். ப்ஃரண்ட்லைன் எடிட்டர் பிரவீன் சுவாமி
'பாகிஸ்தானின் முக்கிய நகரங்களான கராச்சி, லாகூர் பகுதிகளில் வீரியம்
குறைந்த வெடிகுண்டுகள் அவ்வப்போது வெடிக்கத்தான் செய்கின்றன"
என்று ஆயிஷா சொல்வதை உறுதி செய்கிறார்.

பொருளாதரத்தில் பாகிஸ்தானை முழுவதுமாக
சார்ந்து நிற்க வேண்டிய நிலையில் இருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு
இந்தியா இதுவரை அளித்திருக்கும் நன்கொடை ரசீதுகளின் பட்டியல்
ஒவ்வொரு இந்தியனும் அறிந்து கொள்ள வேண்டியதாகும்.

இந்திய இராணுவத்தின் சாலை போக்குவரத்து துறை ஆப்கானிஸ்தானுக்கு
சாலை வசதிகளைச் செய்து கொடுத்தது முதல் பாரதப்பிரதமர்
மன்மோகன்சிங் ஆப்கானிஸ்தானுக்கு விஜயம் செய்யும் போது
நன்கொடை பட்டியலின் தொகை மே 2011ல் அமெரிக்கா டாலர்
2 பில்லியனைத் தாண்டிவிட்டது. இந்த தொகையைக் கொண்டு
மும்பை மாநகரைக் குடிசைகளே இல்லாத பெருநகரமாக்கி இருக்க முடியும்,
ஏன் ஒட்டுமொத்த இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில்
அத்தியாசவிசயமான தேவைகளைப் பூர்த்தி செய்திருக்க முடியும்.

இத்துடன் மின்சாரம், எண்ணெய் மற்றும் இயற்கை வாயு என்று
கொடுப்பதுடன் ஆப்கானிஸ்தான் மாணவனுக்கு உயர்கல்விக்கான
ஊக்கத்தொகையை இந்தியா கொடுப்பதும் ஆச்சரியமளிக்கிறது.
ஆனால் இந்த அபரிதமான உதவிகளை மனித நேய அடிப்படையிலோ
அல்லது அண்டைநாட்டுடன் நல்லுறவு கொள்ளும் நோக்கத்திலோ
இந்தியா கொடுக்கவில்லை. இந்தியாவின் ரா , ஆப்கானிஸ்தானை
தன் ரகசிய உளவு வேலைகளுக்கான தளமாகவும் இந்தியாவை
எப்போதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பாகிஸ்தான், சீன நாடுகளை
உன்னிப்பாக கவனிக்கவும் அந்நாடுகளில் உள்நாட்டு கலவரத்தை
ஏற்படுத்தவும் வசதியான ஒரு களமாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவின் சி. ஐ. ஏ, இங்கிலாந்தின் எம் 16 உளவுத்துறைகளைப் போல
இந்திய உளவுத்துறை நேரடியாக இராணுவத்துறையின் கட்டுப்பாட்டுக்குள்
இல்லை. ரா இந்திய பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டின் இயங்குகிறது.



பஞ்சாபில் நடந்த காலிஸ்தான் கிளர்ச்சிகளுக்கும் காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் பின்புலமாக செயல்பட்டது பாகிஸ்தான்.
பணமும் ஆயுதப்பயிற்சியும் கொடுத்தது. இந்தியா, காஷ்மீர்,
பாகிஸ்தான் எல்லைப்பிரச்சனை தீர்ந்தபாடில்லை.
பாகிஸ்தானின் இதே வழிமுறையை இந்தியாவும் பாகிஸ்தானின்
பலுசிஸ்தான் கலவரங்களிலும் கடைப்பிடித்தது. ஜோர்டானின் இளவரசர்
ஹசன் பின் டலால் பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்த பெண்ணைத் திருமணம்
செய்தப் பின் அவர் முன்னிலையில்
"இந்தியா பாகிஸ்தானில் பிரச்சனை உண்டாக்குவதை நிறுத்த வேண்டுமானால்
பாகிஸ்தான் இந்தியாவின் பஞ்சாப் பிரச்சனையில் தலையிடக்கூடாது '
என்ற ரகசிய உடன்படிக்கையானது.

 சோவியத் ஒன்றியத்தின் இராணுவப்பிடியில் ஆப்கானிஸ்தான் இருந்தப்போது அமெரிக்காவின் உளவுத்துறையான சி. ஐ. ஏ சோவியத்திற்கு எதிராக
போராட ஆப்கானிஸ்தான் புரட்சிக்காரர்களுக்கு பல்வேறு வகையில்
உதவியது. ஆனால் நேரடியாக அமெரிக்கா இதில் தலையிடவில்லை.
பாகிஸ்தான் தான் இதில் ஏஜண்டாக செயல்பட்டது. குறைந்தது 3 பில்லியன்
அமெரிக்கடாலர் ஆப்கானிஸ்தானுக்கு வாரி வழங்கியது. ஐ எஸ் ஐ
இந்த செயல்பாட்டை operation cyclone என்றழைத்தது.

பாகிஸ்தானுக்கு இந்த ஏஜண்ட் வேலைகள் தவிர நேரடியான பல்வேறு உதவிகளையும் அமெரிக்க உளவுத்துறை இன்றுவரை செய்து கொண்டுதான்
இருக்கிறது. முன்னாள் ரா அதிகாரி பி. இராமன் 2007ல் வெளியிட்ட அவருடைய புத்தகம் " the kaoboys of R & AW ' வில் சில செய்திகளை
உறுதி செய்திருக்கிறார். " அ,மெரிக்க உளவுத்துறை பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ எஸ் ஐக்கு தீவிரவாத தாக்குதல்கள் குறித்த
பயிற்சிகளைக் கொடுக்கும். அதே சமயத்தில் இந்திய ரா வுக்கும்
தீவிரவாத தாக்குதல்களை முறியடிக்கும் சில நுட்பங்களை
அறிந்து கொள்ளும் பயிற்சியை அளிக்கும்: என்கிறார்.

9/11 ல் அமெரிக்கா சந்தித்த தீவிரவாத தாக்குதலுக்குப் பின்,
ஒசமா பின்லேடன் பாகிஸ்தானில் அமெரிக்காவால் சுட்டுக்கொல்லப்பட்டபின்
அமெரிக்க பாகிஸ்தான் உறவு பாதிக்கப்பட்டிருக்கிறதா ?
இக்கேள்விக்கு சம்பந்தப்பட்ட அமெரிக்காவும் பாகிஸ்தானும்
அப்படியெல்லாம் பாதிக்கப்படவில்லை என்று சொல்கின்றன.
ஆனால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் உலகில் தீவிரவாதத்திற்கு
எதிராக அமெரிக்காவும் இந்தியாவும் கை கோத்து நிற்பதாகவும்
ஒரு பிம்பத்தை அமெரிக்க அதிபரும் இந்தியப் பிரதமரும்
அடிக்கடி தொலைக்காட்சிகளில் சொல்லிக்கொள்கிறார்கள்!

இந்தப் பிம்பத்தைக் கட்டமைப்பதில் இரு அரசுகளுக்கும் பல்வேறு ஆதாயங்கள் இருக்கின்றன. உலக நாடுகளின் சட்டாம்பிள்ளையாக , போலீஸ்காரனாக தன்னைக் காட்டிக்கொள்ளும் அமெரிக்கா தான் மூன்றாம் நாடுகளின் உள்நாட்டு பிரச்சனைகளில் தலையிட்டு அமைதி குலைத்து தன் அபரிதமான ஆயுத உற்பத்திக்கான சந்தைகளை விரிவு படுத்திக் கொண்டே இருக்கிறது.
அகண்ட பாரதக் கனவுகள் ஒருபக்கம், இந்தியா வல்லரசாகும் கனவுகள்
ஒருபக்கம் என்று கனவுகளில் மிதக்கும் இந்திய அரசோ 9/11க்குப் பின்
இச்சூழலைச் சாதகமாக்கிக்கொள்ள துடிக்கிறது.

இந்த ரா வின் செயல்பாடுகளைத் தான் நடிகர் கமலஹாசன் தன் கைகளில்
எடுத்துக் கொண்டு வழக்கம்போல கந்தலாக்கி இருக்கிறார்.
ஆனால் இந்தக் கந்தல் ஆடையில் எங்கே கிழிக்க வேண்டும், எவரைக்
கிழிக்க வேண்டும் , எப்படி கிழிக்க வேண்டும், எதை எல்லாம் ஒட்டுப்போட்டு
கிழிசல் மறைய தைக்க வேண்டும் என்பதில் கவனமாகத்தான் இருந்திருக்கிறார்.



ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாக குற்றம்சாட்டப்பட்டுய்
தூக்கிலடப்பட்டப்பின் கமலும் கமலின் உதவியாளரும் பேசும் வசனம்
ரொம்பவும் விஷமமானது.

"நான் என் பெயரைத் தான் மாற்றிக்கொண்டிருக்கிறேன். என் தர்மத்தை (மதத்தை ) அல்ல" என்பார் அந்த உதவியாளர். இசுலாமியராக
வரும் கமல் அவன் தர்மப்படி அவன் நடக்கட்டும் என்று அவனை
டிஸ்மிஸ் செய்து அனுப்பிவிடுவார்.

கதையின் முடிவு "போராட்டம் தொடரும், நானோ உமரோ இருவரின் ஒருவர்
கொல்லப்படும் வரை தொடரும்" என்று முடிக்கிறார்.

விசுவநாதனாக இதைச் சொல்லியிருந்தால் அது  இந்து தீவிரவாதம்.
அகமதுவாக இதைச் சொல்லியிருந்தால் அது  இந்திய தீவிரவாதம்
இரண்டுமே ஆபத்தானது.
கமலுக்கு அல்ல, நமக்கு.
மத சாதி அடையாளங்களை மறந்து துறந்து தமிழனாக வாழ நினைக்கும்
ஒவ்வொருவருக்கும் .










Friday, February 8, 2013

ராஜபக்சே ஒரு ஹிட்லர்






இந்த நூற்றாண்டின் ஹிட்லர் இலங்கை அதிபர் ராஜபக்செ என்ற
குரல் பீகாரிலிருந்து மத்திய பிரதேசத்திலிருந்தும் எழுந்துள்ளது.

சோம் ப்ரகாஷ் சிங், பீகாரின் சட்டசபை உறுப்பினர்.
காவல்துறையில் இன்ஸ்பெக்டராக இருந்து பதவி விலகி
எந்த அரசியல் கட்சியின் ஆதரவும் இல்லாமல் பெரும்பான்மையான
ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றிருக்கும் சுயேட்சை எம்.எல்.ஏ.

இன்னொருவர் பரஸ் தாதா . Msc படித்த பட்டதாரி. அவரும் மத்திய பிரதேசத்தில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றவர்.

இருவருடனும் 6 ஆம் தேதி மாலை 7 மணியளவில் கைபேசியில்
தொடர்பு கொண்டு பேசினேன். இருவரும் மனித உரிமைக்காகவும்
மனித நேய அடிப்படையிலும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்வதாகச்
சொன்னார்கள்.

பரஸ் தாதா இந்தியப் பிரதமருக்கும் குடியரசு தலைவருக்கும் கடிதங்கள்
எழுதப்போவதாகவும் கையெழுத்து இயக்கம் ஆரம்பித்து இக்கருத்துக்கு
ஆதரவு திரட்டப்போவதாகவும் சொன்னார்கள்.

இலங்கைப் போரில் இந்திய அரசு நேரடியாகவும் மறைமுகமாகவும்
பல்வேறு உதவிகளைச் செய்திருப்பதை ஆதாரங்களுடன் அவர்களுக்கு
எடுத்துச் சொல்லி இந்நிலையில் இம்மாதிரியான கையெழுத்து இயக்கங்களும் கடிதங்களும் எவ்வகையில் உதவ முடியும் ? என்று
கேட்டபோது " இது ராஜநீதி. அரசு தவறு செய்தால் அதைத் தட்டிக் கேட்பதும்
அத்தவறுக்கு பொதுஜன ஆதரவு இல்லை என்பதைப் பதிவு செய்வது
ஜனநாயகக்கடமை என்றார்கள்.

 ஐ.நாவின் அறிக்கையை, இனப்படுகொலையின் தீவிரத்தை அவர்கள்
எந்தளவுக்கு உள்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்களுடன்
பேசியதைக் கொண்டு என்னால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.
ஆனால் தமிழ் மண்ணைத் தாண்டி, தமிழர்களைத் தாண்டி வட இந்தியாவில் வாழும் ம்காஜனங்களின் கோபம், ராஜபக்சே ஒரு ஹிட்லர் என்று சொன்ன
அந்தக் கோபம் ...
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் எறும்புக்கு நீந்தக் கிடைத்திருக்கும் ஒரு துரும்பாக இருக்கிறது.

ரவுத்திரம் பழகு.


som prakash singh : cell No: 09471003295

paras dada : cell No: 09425195283

Monday, February 4, 2013

சாதனைத் தமிழ் மகளும் சாதித் தலைவர்களும்






மாநகராட்சி பள்ளியில் படித்த தமிழ்ப் பெண் பிரேமா அகில இந்திய அளவில்
சி.ஏ தேர்வில் முதல் மாணவியாக வந்து சாதனைப் பு
ரிந்ததை ஊடகங்களும்
குறிப்பாக தமிழ் பத்திரிகைகளும் கொண்டாடி முடித்துவிட்டன.

மும்பையில் புறநகர் தி.மு.க வினர்  உடனடியாக பிரேமாவைச் சந்தித்து
ரூபாய் ஒரு இலட்சம் பணமாகக் கொடுத்து செய்தி வெளியிட எப்போதும் எதிலும் போட்டிப் போடும் அதிமுக வும் சளைக்காமல் ரூபாய் 10 இலட்சம் வழங்க உடனடியாக உத்திரவு ... (இந்த மாதிரி நாலு பேருக்கு நல்லது செய்வதில் உங்களின் போட்டி தொடர வாழ்த்துகிறோம்!!!)

சென்னையிலிருந்து பிரபல பத்திரிகையாளர், ஏற்கனவே மும்பையில்
கொஞ்ச காலம் வாழ்ந்தவர் எப்படியோ என் கைபேசி எண்ணைப் பெற்று
பிரேமா குறித்து ஸ்பெஷல் செய்தி ஏதாவது கிடைக்குமா? என்று கேட்டார்.
எனக்கு அவருக்கு எவ்விதத்திலும் உதவ முடியவில்லை என்பது கொஞ்சம்
வருத்தமாகத்தான் இருந்தது.

சிந்தனையாளர் சங்கமத்தின் கூட்டத்தில் கடந்த ஞாயிறு (3/2/13) காலையில்
நடந்தக் கூட்டத்தில் நண்பர் கவிஞர் குணா அவர்கள் சொன்ன செய்தி
தமிழினம் சாதி அடையாளத்தை எந்த அளவுக்கு தன் அடையாளமாகக் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தியது.

நண்பர் குணாவின் மனைவி பள்ளி ஆசிரியர் என்பதால் பலர் அவரைத் தொடர்பு கொண்டு மாணவி பிரேமாவைக் குறித்து விசாரித்தார்களாம்.
எந்த ஊர்? என்று கேட்டிருந்தால் கூட பரவாயில்லை!
எந்தச் சாதி என்பதை அறிந்து கொள்வதில் ஒவ்வொருவரும் மிகவும் ஆர்வம் காட்டியதாகச் சொன்னார். அதிலும் குறிப்பாக தமிழ்ச் சங்கம் வைத்து நடத்தும் தலைவர்கள் சிலரும் அடக்கம் என்றார். அதில் ஒரு தமிழ்ச் சங்கத் தலைவர்
அந்தப் பொண்ணு நம்ம சாதி இல்லே என்று சொல்லி ரொம்பவே
அலுத்துக் கொண்டாராம்.

பிரேமாவின் சாதி தெரிந்து கொண்டால், அந்தக் குறிப்பிட்ட சாதியினர்
பிரேமாவின் சாதனையை தங்கள் சாதியின் சாதனையாக கல்வி
கேள்விகளில் உயர்ந்தவர்கள் தங்கள் சாதியினர் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் எண்ணத்தில் கேட்டு அந்த வாய்ப்பு தங்கள் சாதிக்கு கிடைக்கவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டார்கள்.

பல மைல்கள்  தாண்டி பிழைப்புக்காக மராட்டிய மண்ணில் வந்து வாழும்
தமிழினம் தன் அடையாளமாக தூக்கிச் சுமந்து கொண்டிருப்பது
சாதியா? சாதி அடையாளம் தான் தமிழனின் அடையாளமா?


தமிழனம் சாதிக் காப்பாற்றும் இனம்
தமிழ்மொழி சாதிக் காப்பாற்றும் மொழி

என்று தந்தை பெரியார் சொன்னது நினைவுக்கு வருகிறது.

பிரேமாவின் சாதி அடையாளம் எனக்குத் தேவையில்லை,
ஏன் அவள் தமிழ்ப் பெண் என்ற இனம் சார்ந்த பெருமையை விட
என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருப்பது பிரேமா தன் ஆரம்பக் கல்வியை
அவருடைய தாய் மொழியான தமிழ்மொழியில் தான் படித்தார் என்பதும்
8, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் மாநகராட்சி பள்ளியில் படித்தவர் ,
ஒரு பாடமாக தன் தாய்மொழியான தமிழ்மொழியைப் படித்தவர் என்பதும்
மட்டுமே  .

கான்வென்ட் பள்ளி கூடங்களை நோக்கி படை எடுத்து அது மட்டுமே
தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உத்திரவாதமான கல்வியைத் தரமுடியும் என்ற இன்றைய பெற்றோர்களுக்கு பிரேமாவின் சாதனை
உண்மையை உணர்த்தும் ஒரு மின்னல்.




Thursday, January 17, 2013

பொங்கல் வாழ்த்துச் சடங்குகள்




பொங்கல் வாழ்த்து சொல்வது வெறும் சடங்காகிப் போனதா?
எனக்கென்னவோ சில வருடங்களாக அப்படித்தான் தோன்றுகிறது.

முன்பெல்லாம் பொங்கல் வாழ்த்து சொல்ல நண்பர்கள் உறவினர்கள்
என்று தொலைபேசி அழைப்புகள் ..
தொலை தூரத்திலிருந்து ஒலிக்கும்  பாசமிகுந்தக் குரல்கள்
ஸ்நேகம் வளர்க்கும் விசாரிப்புகள் ... மனசு மத்தாப்பாய் மலர்ந்து சிலிர்க்கும்.
அண்மைக் காலங்களில்.. அதுவும் கைபேசிகள் வந்தப் பின்
எல்லோரும் ஊமையாகிவிட்டார்களோ என்ற பயம் வந்துவிட்டது.

அதுவும் எப்போதும் பேசுபவர்கள் கூட..
இப்போதெல்லாம் குறுஞ்செய்தி அனுப்பிவிடுகிறார்கள்.
அதிலும் குறிப்பாக அந்தக் குறுஞ்செய்திகளும், மின்னஞ்சல் வாழ்த்துகளும்
எனக்கே எனக்கானவை மட்டுமல்ல, ஏதோ அந்தக் காலத்தில்
தந்தி கொடுக்கும் போது சில குறிப்பிட்ட எண்களின் மூலம்
வாழ்த்துச் செய்தி அனுப்புவார்களே அதுபோல...
அந்த மாதிரி வாழ்த்து செய்திகளை வாசிக்கும் போது
அதிலும் குறிப்பாக நமக்கு ரொம்பவும் நெருக்கமான ( அதாவது நாம்
அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறவர்கள்..!!!) இந்த மாதிரி
ஒரு ரெடிமேட் குறுஞ்செய்தியோ மின்னஞ்சலோ அனுப்பினால்
மகிழ்ச்சிக்குப் பதிலாக கோபம் வருகிறது..
எரிச்சல் வருகிறது.
இப்படி ஒரு வாழ்த்து அனுப்பி இருப்பதற்கு
நீ
அனுப்பாமலேயே இருந்திருக்கலாமே
என்னைப் போல...
என்று சொல்ல நினைக்கிறது மனம்.

நினைப்பதெல்லாம் சொல்ல முடிவதில்லை.

சொன்னால் புரிந்து கொள்ளும் நிலையில்
சிலரும் இல்லை.


ஒரு 25 வருடங்களுக்குப் பின்னோக்கி இந்தப் பொங்கல் வாழ்த்துகளை
எண்ணிப் பார்க்கிறேன்.. என் தந்தைக்கு பொங்கல் வாழ்த்துகள் அட்டை
அஞ்சலில் வரும். நிறைய கவிதைகளுடனும் சில அச்சிட்ட வாழ்த்து
கவிதைகளுடனும். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும்
வாழ்த்து  மடல் வந்திருக்கும். எனக்கு அதெல்லாம் ரொம்பவும் ஆச்சரியமாக
இருந்தது. அப்பாவுக்கு அந்த அட்டையில் கையெழுத்திட்டிருக்கும்
ஒவ்வொரு எழுத்தும் புள்ளியும் சொல்ல முடியாத மகிழ்ச்சியைக்
கொடுத்தது என்பதை அதைப் பிரித்து வாசிக்கும் போது நேரில் பார்த்தவர்கள்
புரிந்து கொள்ள முடியும். திராவிட இயக்கத்திலும் அறிஞர் அண்ணாவின்
திமுக அரசியலிலும் இருந்தவர் என் அப்பா. அக்காலக்கட்டத்தில் திருச்சி
மாநாட்டில், சேலம் மாநாட்டில் என்று மாநாட்டில் சந்தித்த கொள்கை
உறவுகள்.. அவர்களுக்குள் அடிக்கடி கடிதப் போக்குவரத்துகள் இருந்ததாக
தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு தைப் பொங்கலுக்கும் அவர்கள் பரிமாறிக்கொண்ட பொங்கல் வாழ்த்துகள் அவர்கள் பரிமாறிக்கொண்ட
இனிய நினைவுகள்.. எப்போதாவது யாரிடமிருந்தாவது வாழ்த்து அட்டை
வரவில்லை என்றால் அவர் உயிருடன் இல்லை என்கிற இன்னொரு
செய்தியும் இந்த வாழ்த்து மடல்களின் ஊடாகவே பயணம் செய்ததை
நானறீவேன். அது என்னவோ என் தந்தை மறைவிற்குப் பின்
ஓரு பொங்கல் கழித்து அவருக்கு வரும் வாழ்த்து அட்டைகள் நின்று போய்விட்டன! என் தந்தையும் வாழ்த்து அட்டைகள் அனுப்பி இருக்க வேண்டும். ஓராண்டு அனுப்புவது நின்றபின் அவருக்கு வந்துக்கொண்டிருந்த
வாழ்த்து அட்டைகளும் தங்கள் மும்பை பயணத்தை நிறுத்திக் கொண்டதை
என்ன வென சொல்லட்டும்?


எனக்கும் வாழ்த்து அட்டை ஒருவர் தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருந்தார்.
அவர்தான் மும்பையில் கண்ணதாசன் இலக்கியப்பேரவை அமைப்பாளர்,
தூரிகை என்ற காலாண்டு இதழின் ஆசிரியர் நாஞ்சில் அசோகன் அவர்கள்.
என் மீது மிகுந்த மதிப்பும் அன்பும் கொண்டவர். என் கவிதைகளின் தீவிர ரசிகர்.
உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் மராட்டிய மாநிலத் தலைவராக இருந்தார். அவர் 19-11-2006ல் மும்பையில் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் மாநாடு ஒன்றை நடத்தினார். தன் கைப்பணத்தைப் போட்டுத்தான். அந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக அன்றைய மத்திய இணை அமைச்சராக இருந்த க. வேங்கடபதி அவர்கள் கலந்து கொண்டார்.
அந்த விழாவில் மும்பையில் சிலருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. எனக்கும்
"புரட்சிக் குயில்" என்ற விருதை வழங்கினார். (என்னிடம் ஒப்புதலோ இசைவோ கேட்கவில்லை, !) அதன் பின் நான் அவரிடம் கோபித்துக் கொண்டும் எதுவும் நடக்கப்போவதில்லை என்பதால் 'என்ன சார், நானெல்லாம் என்ன அப்படி புரட்டி பண்ணிட்டேனு இந்த விருது கொடுத்திருக்கின்றீர்கள்? என்று கேட்டேன். வழக்கம் போல அவர் புன்னகையும் அதெல்லாம் உங்களுக்கு ஒன்றும் தெரியாது என்றும் சொல்லிவிட்டார். அதிலும் அவர் கொடுத்த விருதை நான் என் பெயருடன்
சேர்த்துக் கொள்வதில்லை என்ற வருத்தம் வேறு அவருக்குண்டு!!
அவர் ஒவ்வொரு வருடமும் எனக்கு பொங்கல் வாழ்த்தை கூரியரில்
சரியாக பொங்கல் அன்று கிடைப்பது போல அனுப்புவார். இந்த வருடம்
அந்தப் பொங்கல் வாழ்த்து வரவில்லை! ஏனேனில் அவர் உயிருடன் இல்லை.
அவர் இருக்கும் போதெல்லாம் அவர் அனுப்பிய போதெல்லாம் அந்த
வாழ்த்து அட்டையின் அருமையை நான் உணரவில்லை. அவருடைய
வாழ்த்து அட்டை வராத  இந்த வருடம் அந்த வெறுமையை வெற்றிடத்தை
உணர்கிறேன்.

குமணன் நங்கை இணையர்  ஒவ்வொரு வருடமும் பொங்கல் வாழ்த்து அனுப்புவார்கள்.
தற்போது  தமிழ் இலெமுரியா மாத இதழ் நடத்துவதால் அதிலேயே எல்லோருக்கும் சேர்த்து வாழ்த்து சொல்லிவிடலாமே என்று தனிப்பட்ட வாழ்த்து மடல்களைத் தவிர்த்திருக்கலாம்!

எப்படியோ வாழ்த்துகள் சொல்வது நின்று போய் வெறும் சொற்களாய்
ஊமையாய் உலா வருகின்றன.
பொங்கல் விழாக்கள் நல்ல நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டு இன்று
வண்ணமிகு அலங்கார அழைப்பிதழுடன் எதிரணிக்குப் போட்டியாக
களத்தில் நிற்பதைக் காட்டும் அடையாளமாய் சுருங்கிப் போய்விட்டது.
பொங்கல் வருகிறது போகிறது...

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே துணை

என்ற தைப் பொங்கலின் முழுமையான அர்த்தங்களை முழுவதும்
இழந்து நிற்பதை அறிந்தும் அறியாமலும் எப்போதும் போல
ஒவ்வொரு வருடமும் பொங்கல் வருகிறது போகிறது
தை அமாவசைச் சடங்கு சம்பிரதாயம் போல.




Wednesday, January 16, 2013

HER ONLY FAULT...


Her only fault was she got on the wrong bus!!! 

She was a student
She was 23
Her fault some people say because she boarded the wrong bus
And oh yeah
SHE WAS A GIRL
Six men raped her one by one and then used an iron rod to tear her vagina
Small intestine and large intestine came out
They left her to die on the road
Naked
Wounded
Exposed
Devastated
What’s more is that no one even turned to look at her
No one even bothered to throw a shawl on the ill-clad
ill-fated girl
She can never live a normal married life again
She Went into coma five times since 16th December
She was unconscious
Critical and hasn't been able to stop crying
But don’t worry
She wasn't your sister
She wasn't your daughter
But she could be. The brutality has to stop right here guys
These people deserve capital punishment for their heinous
Perverted act
She died yesterday Saturday 28th
December 2012
Rest in Peace? and I pray that her killers get the WORST punishment possible
This doesn't only happen in India..
But in every country around the world..
Is this how we treat our women?
It Makes me ashamed to even live on this planet today

If her death Touches YOU & you are against RAPE
Write: "R.I.P" and SHARE with friends

If YOU Support RAPE 
"IGNORE THIS POST" 
post from EDUCATION IN AFGHANISTAN

She was a student
She was 23
Her fault some people say because she boarded the wrong bus
And oh yeah
SHE WAS A GIRL
... Six men raped her one by one and then used an iron rod to tear her vagina
Small intestine and large intestine came out
They left her to die on the road
Naked
Wounded
Exposed
Devastated
What’s more is that no one even turned to look at her
No one even bothered to throw a shawl on the ill-clad
ill-fated girl
She can never live a normal married life again
She Went into coma five times since 16th December
She was unconscious
Critical and hasn't been able to stop crying
But don’t worry
She wasn't your sister
She wasn't your daughter
But she could be. The brutality has to stop right here guys
These people deserve capital punishment for their heinous
Perverted act
She died  Saturday 28th
December 2012
Rest in Peace and I pray that her killers get the WORST punishment possible
This doesn't only happen in India..
But in every country around the world..
Is this how we treat our women?
It Makes me ashamed to even live on this planet today

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash3/582492_10151329401028430_1633279599_n.jpg

Thursday, January 10, 2013

பாலியல் வன்புணர்வுக்கு எதிரான கருத்தரங்கும் கலந்துரையாடலும் ==






கடந்த ஞாயிறு 06/1/2013 மாலை மும்பை சயான் தமிழ்ச் சங்கத்தில்
சிந்தனையாளர் சங்கமத்தின்26வது அமர்வு பாலியல் வன்புணர்வு
குறித்த கருத்தரங்கமாகவும் கலந்துரையாடலாகவும் நடைபெற்றது.
அக்கருத்தரங்கில் கலந்து கொண்ட பெண்கள் சிலரின் கேள்விகளும்
அச்சமும் எதிர்காலம் குறித்த சில இனம்புரியாத பய உணர்வை
ஏற்படுத்தி இருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

ஈஸ்வரி தங்கபாண்டியன் அவர்கள் " எனக்கு அச்சமாக இருக்கிறது,
பத்து வயது கூட நிரம்பாத என் பெண் குழந்தை பள்ளிக்கூடத்திலிருந்து
வீட்டுக்கு திரும்பும் வரை கடந்த இரண்டு வாரங்களாக நிம்மதியின்றி
தவிக்கின்றேன். ஸ்கூல் பஸ்ஸில் என்ன நடக்குமோ? விளையாட அனுப்பினால் என்னவாகுமோ? ஏன் இப்போதெல்லாம் சுதந்திரமாக
பேருந்தில் டிரெயினில் பக்கத்து ஸீட்டில் இருப்பவர் நம் பெண்குழந்தையை
எடுத்து மடியில் வைத்துக் கொண்டால் இந்த மனம் பதைபதைத்து போகிறது,
இவ்வுணர்வு ஒரு சித்திரவதை!" என்றார்.

இன்னொருவர் லட்சுமி , அவர் ரொம்பவும் சாதாரணமாக ஒரு கேள்வியைக்
கேட்டுவிட்டு அமர்ந்தார்.. தெரியாதவன் பெண்ணை பலவந்தப்படுத்தினால்
பாலியல் வன்புணர்வு? தெரிந்தவன், அதிலும் தாலி கட்டியதாலேயே எப்போதும் மனைவியை பாலியல் உறவுக்குத் தள்ளும் சர்வ வல்லமைமிக்க அதிகாரம் கொண்ட எத்தனைக் கணவன்மார்கள், தங்கள் அதிகாரத்தைக் கொண்டு காலமெல்லாம் ஆட்டம் போடுகிறார்கள் தெரியுமா?
இதற்கு என்ன பெயர? இதைப் பாலியல் வன்புணர்வு என்று சொன்னால்
எவன் ஒத்துக்கொள்வான்? காலமெல்லாம் மனைவி என்ற சமூக அந்தஸ்த்திற்காக எத்தனைக் கோடிப் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்குள்ளாகிரார்கள் தெரியுமா? என்று கேட்டார்.

அவருக்குப் பெண்ணியம் குறித்தெல்லாம் எதுவும் தெரியாது தான்.
ஆனால் அவர் சொன்ன இக்கருத்து இச்சமூகத்தின் முகத்தில்
ஓங்கி அறைந்த மாதிரி இருந்தது. என் இனிய தோழி ஆழியாளின்
கவிதை அப்போது நினைவுக்கு வந்தது.

காலப்பொழுதுகள் பலவற்றில்
வீதி வேலி ஓரங்களில்
நாற்சந்திச் சந்தைகளில்
பிரயாணங்கள் பலவற்றில்

தந்திக் கம்பத்தருகே
கால்தூக்கியபடிக்கு
என்னை உற்றுக் கிடக்கும்
அம்மிருகம் துயின்று
நாட்கள் பலவாகியிருக்கும்

அதன் கண்கள் நான் அறியாததோர்
மிருகத்தின் கண்களைப் பறைசாற்றிற்று.
அவற்றின் பாலைத் தாகம்
அறியாப் பாஷையை எனக்குள் உணர்த்திற்று.

அழகி மண்ணம்பேரிக்கும்
அவள் கோணேஸ்வரிக்கும்
புரிந்த வன்மொழியாகத்தான்
இது இருக்குமென
அவதியாய் எட்டிக் கடந்து போனேன்.
அன்றைய அலைச்சலும்
மனக்குமைச்சலும் கூடிய
தூக்கத்தின் இடையில் நானும்
அவள்களுக்குப் புரிந்த
அதே அதே ஆழத்திணிக்கப்பட்ட
பாஷையைப் புரிந்து கொண்டேன்

அருகே கணவன்
மூச்சு ஆறிக்கிடக்கிறான்"

தோழி துர்க்கா ராஜன் அவர்கள் ஒரு பேச்சாளராகவோ எழுத்தாளராகவோ நான் இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள வரவில்லை. ஒரு பெண் குழந்தைக்கு நானும் தாய், என் அச்சத்தை என் கருத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன் என்றார். என் பெண் குழந்தையிடம் இப்போதெல்லாம்
அடிக்கடி அவள் உடல் குறித்த அடிப்படை அறிவியலைச் சொல்லிக்கொடுக்கிறேன். யாராக இருந்தாலும் உன் உடலைத் தொட்டுப் பேச அனுமதிக்காதே என்ன்று வேறு சொல்லி வைக்கிறேன். அவளோ குழந்தை,
எந்தளவுக்கு நான் சொல்வதை உள்வாங்கிக் கொள்கிறாளோ தெரியவில்லை.
அடிக்கடி குழந்தையிடம் இப்படி பேசுவது சரியா? என்று வேறு கவலையாக
இருக்கிறது. ஆனால் நம் பெண் குழந்தையைப் பாதுகாப்பது நம் கடமைதானே
என்றார். மேலும்,
 தன் பேச்சில் டில்லி பாலியல் வன்புணர்வு சம்பவத்தில் யாருடைய தூண்டுதலுமின்றி பொதுமக்கள் சாலைகளில் இறங்கிப் போராடியதையும் பொதுமக்களின் போராட்டக்குணம் சரியான வழியில் வழி நடத்தப்பட்டால் எதையும் சாதிக்க முடியும் என்றும் பேசினார்.

இலெமுரியா அறக்கட்டளை மற்றும் இலெமுரியா பத்திரிகை சார்ந்த
நங்கை குமணன் அவர்கள் " குற்றவாளிக்குத் தூக்குத்தண்டனை விதிப்பது
மட்டும் தீர்வாக முடியுமா? ஒவ்வொரு மனிதனின் வாழ்வியல் விழுமியங்கள்
அது குறித்த கல்வி, விழிப்புணர்வு இவை மட்டுமே இப்பிரச்சனை குறித்த
தொலைநோக்குத் திட்டங்களாகவும் தீர்வாகவும் இருக்க முடியும் என்று
ஆணித்தரமாக பேசினார்.

மலையாள எழுத்தாளர் மானசி அவர்கள் நிலவுடமை சமூகமும் அதன்
சமூக நியதிகளும் ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஆட்சி செய்து கொண்டு
இருப்பதன் வெளிப்பாடு தான் இம்மாதிரி சம்பவங்கள் என்று சொன்னதுடன்
தங்கள் கேரள மண்ணில் மாலை 6 மணிக்குப் பின் தன்னால் சாலையில் தனியாக நடப்பதைக் குறித்து நினைத்துப் பார்க்க முடியவில்லை என்கிற
இன்றைய நிலையையும் வருத்தத்துடன் பதிவு செய்தார்.

அதன் பின் கூட்டத்திற்கு வருகைத்தந்திருந்த வழக்கறிஞர் இராசாமணி,
எழுத்தாளர் தமிழ்நேசன், சரவணன், தமிழ்ச் சங்கம் பரணி . தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பால்வண்ணன் ஆகியோர்
விவாதத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.

நாடாகொன்றோ காடாகொன்றோ
அவலாகொன்றோ மிசையாகொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே ( புறம் 187)

என்ற அவ்வையின் வரிகளை மேற்கோள் காட்டி பால்வண்ணன் அவர்கள்
பேசினார்.

மக்கள் நலம், பாதுகாப்பு, நாட்டின் நலம் எல்லாம் ஓர் ஆடவன் நல்லவனாக
இருந்தால் மட்டுமே சாத்தியம் என்பது நடைமுறையாகக் கூட இருக்கலாம்,
ஆனால்,

வாழ்க்கையின் விழுமியங்கள், நியாயம் அநியாயம், நல்லது கெட்டது,
எல்லாவற்றையும் தீர்மானிப்பது  நம் சமூகத்தில் ஆண்களாக மட்டுமே
இருப்பதால் தான் பெண் இரண்டாம் பால்நிலையாகத் தள்ளப்பட்டிருக்கிறாள்.

அதனால் தான்,

5 வயது பெண் குழந்தையைக் கூட பாலியல்  வன்புணர்வுக்குள்ளாக்கும்
ஆண்கள் சொல்கிறார்கள்,

பெண்களின்  மேற்கத்திய நாகரிக உடைகள் தான்  காரணம் என்று!

பாலியல் வன்புணர்வுக்கு வந்தவனிடம் " சகோதரனே!" என்றழைத்திருந்தால்
அவன் மனம் மாறி இருப்பானாம்! இப்படியும் உளறிக்கொட்டும் தலைவர்கள் இருக்கிறார்கள் எங்களைச் சுற்றி!

பாலியல் வன்புணர்வு இந்தியாவில் நடக்கிறது, பாரதத்தில் நடக்கவில்லை
என்று புதிதாக கண்டுபிடித்து அறிவிக்கிறது இன்னொரு அமைப்பு.

அதாவது நகரங்களில் நடக்கிறதாம், கிராமங்களில் நடப்பதில்லையாம்!
ஆமாம், அவர்களைப் பொறுத்தவரை கிராமங்களில் நடக்கும் வன்புணர்வுகள் எல்லாம் அவர்களின் சாதியச்சடங்குகள் தானே! வெட்க கேடு..

இவர்களை எல்லாம் தலைவர்களாகவும் இவர்களின் அமைப்புகளை எல்லாம்
வளரவிட்டும் பார்த்துக் கொண்டிருக்கும் இந்திய மக்களில் நானும் ஒருத்தியாக இருப்பது , எனக்கும் அவமானம்!

அதிகரித்து வரும் இம்மாதிரியான சமூக இழிவுகளுக்கு ஒருவகையில்
வர்க்க பேதமும் காரணம், உயர்தர வர்க்கம், நடுத்தரவர்க்கம், அடிநிலைவர்க்கம் என்ற மூன்று வர்க்க நிலைகளில் நடுத்தர வர்க்கத்திற்கும்
அடிநிலை வர்க்கத்திற்கும் இடையில் தீடீரென அண்மைக் காலங்களில் அதிகரித்து இருக்கும் இடைவெளி, உலகப் பணக்காரர்கள் வாழும் இந்தியாவில் தான் அதிகமாக வறுமைக்கோட்டுக்கு கீழிருக்கும் மனிதர்களும்
'வாழ்கிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டிய வலது இடது சாரிகள்
உப்புச் சப்பில்லாத தீர்மானங்களை நிறைவேற்றி ஏதோ நாங்களும் இருக்கிறோம் என்று கடை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

என்ன செய்யலாம்? சொல்லுங்கள்.

பாலியல் வன்புணர்வுக்கு எதிரான கருத்தரங்கம்

 


     `                                                                                                                                                      06th Jan 2013 ம் தமிழ்ச் சங்கம், சயான், , மும்பையில் தமிழ்ச் சிந்தனையாளர் சங்கமம் ஏற்பாடு செய்திருந்த 26வது அமர்வின் சிறப்பு கருத்தரங்கமாகமும் பொதுமக்களின் கருத்துப் பரிமாறலுடன் நடத்திய கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்டு அனைவரின் ஒப்புதலுடன்  இந்த அறிக்கை, 
இந்தியக் குடியரசு தலைவர், இந்தியப் பிரதமர், மராட்டிய மாநில கவர்னர்,
தமிழக முதல்வர் மற்றும் கவர்னர், மனித உரிமை ஆணையம், அம்னெஷ்டிக் ஆசிய அமைப்பு  மற்றும்
நீதிபதி வர்மா கமிட்டிக்கும் அனுப்பட்டுகிறது.

2006 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக 29.3% ஆக அதிகரிட்துள்ளன.
. பாலியல் தாக்குதல் மற்றும் கற்பழிப்பு வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது கவலை அளிக்கிறது.
, 2010 இல் பதிவு 94.000 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதாவது  ஒவ்வொரு மணி நேரத்திற்கும்  ஏழு பெண்கள் / குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகிறார்கள்.
ஏழைகள், சமூகத்தில் ஒடுக்கப்பட்ட  பிரிவுகளை சேர்ந்த. பழங்குடி மற்றும் தலித் பெண்கள் மீது குறிப்பாக பாலியல் தாக்குதல்கள் பெருமளவில் பதிவு செய்யப்படாமலேயே இருக்கின்றன.

தேசிய தேர்தல் கண்காணிப்பு குழுவின் பதிவு செய்திருக்கும்
புள்ளிவிவரங்கள் அதிர்ச்சி தருவதாகவும் கவலை அளிப்பதாகவும்
இருக்கின்றன.

குறிப்பாக,

1 மக்களவை தேர்தல் 2009 ல், அரசியல் கட்சிகள்,  கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று தங்கள் வாக்குமூலங்களை அதாவது affidavit  கொடுத்திருந்த 6  ஆறு வேட்பாளர்களுக்கு டிக்கெட் கொடுத்திருந்தார்கள்..


2. கடந்த ஐந்து ஆண்டுகளில், கட்சிகள்  கற்பழிப்பு குற்றச்சாட்டைப் பதிவு செய்து வாக்குமூலம் கொடுத்திருந்த 27 பேருக்கு டிக்கெட் கொடுத்து
தேர்தல் களத்தில் நிறுத்தி இருந்தார்கள்.


3. பெண்ணை அவமதித்தல் .,  தாக்குதல், என்ற  பெண்களுக்கு எதிரான குற்றங்களைப் புரிந்தவர்கள் 260 பேர் பல்வேறு பிரிவுகளின் கீழ் பொறுப்பேற்றிருந்த பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து தேர்தலில்
போட்டியியிடும்  வேட்பாளர்கள் இருந்ததை நினைவுபடுத்துகிறோம்.

எனவே,
அனைத்து அரசியல் கட்சிகளும்், பாலியல் வன்முறை சம்பவங்களில் தண்டனைப் பெற்றவருக்கோ அல்லது குற்றம் சாட்டப்பட்டவருக்கோ
தேர்தலில் வேட்பாளாராக நிறுத்துவது தடை செய்யப்படுவதுடன்
அதைச் சட்டமாகவும் கொண்டுவர வேண்டும்.


டிவி, திரைப்படம் மற்றும் விளம்பரங்கள் பெண்களை இழிவப்படுத்தும் வகையில் காட்டும் காட்சிகளைத் தணிக்கைக்கு உள்ளாக்குவதுடன்
ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டிய கட்டாயத்தையும்
இக்கருத்தரங்கம் வற்புறுத்துகிறது.

பாலியல் குற்றத்தில் சர்வதேச சட்டவிதி  1998ல் ரோம் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்  அதிரடியான மாற்றங்களைப் பெற்றது.. அதன் 7வது ஷரத்தின் படி

"பாலியல் வன்கொடுமை, பாலியல் அடிமைத்தனம், கட்டாய கர்ப்பம்,
கட்டாய கர்ப்பத்தடை அல்லது எந்த வகையிலும் பெண்கள் மீது
நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறை சர்வதேச சட்டப்படி குற்றமாகும்.


பெண்களுக்கு எதிரான இம்மாதிரியான  குற்றச்சாட்டுகளை
அணுகுவதில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும்\
ஒரு நிலையான கட்டுக்கோப்பான அணுகுமுறை இருக்க வேண்டும்.
குறிப்பாக சிலவற்றை இந்தக் கருத்தரங்கம் பரிந்துரை செய்கிறது.

பாதிக்கப்பட்ட பெண் தன் வழக்கைப் பதிவு செய்ய முன்வரும்போது
அவருடைய விருப்பத்திற்கேற்ப அவருடைய வீட்டிலோ அல்லது
வேறு பொருத்தமான இடத்திலோ போலீசார் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்ட பெண்ணுடன் கட்டாயம் அப்பகுதியைச் சார்ந்த பெண்கள்
அமைப்பின் சமூக சேவகி உடனிருத்தல் நல்லது.

பாதிக்கப்பட்ட பெண்ணோ அல்லது அவர் சார்பாக சாட்சியங்களோ
சூரிய உதயத்திற்கு முன்போ அல்லது சூரிய உதயத்திற்கோ பின்னரோ
காவல்நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்படும் நடைமுறை
வழக்கத்தை உடனடியாக நிறுத்துவத அவசியம்.


பாதிக்கப்பட்டவர் FIR கொடுத்து  24 மணி நேரத்திற்குள் காவல்துறை
நடவடிக்கை எடுத்திருக்க  வேண்டும்.

இவ்வழக்குகளில் சட்ட விதிகளைத் தளர்த்தியோ குற்றவாளிக்குச் சாதகமாகவோ அல்லது விதிகளை மீறியோ செயல்படும் அதிகாரிகள்
கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும்.

வழக்குகளுக்கு தீர்ப்பு சொல்லும் காலவரையறை
மிகவும் கண்டிப்புடன் செயல்படுத்துவது அவசியம்.
வாச்சாத்தி வழக்கில் நீதி கிடைக்க 19 வருடங்கள்
காத்திருந்ததை நினைவு படுத்துகிறோம்.
குறைந்தது 3 மாதம் முதல் 6 மாதத்திற்குள் வழக்கு நீதிமனறத்தின்
முடிவுக்கு வரவேண்டும்.
அதாவது நீதி கிடைப்பதில் காலதாமதம் கூடாது.
தாமதமாகக் கிடைக்கும் நீதியும ஓர் அநீதி தான்.
் குற்றங்கள் அதிகரிப்புக்கஇதுவும் ு ஒரு காரணம்

மேலும் வழக்கு விசாரணை முடியும் வரை குற்றவாளிக்கு ஜாமீன்
கொடுப்பதொ பெயிலில் வெளிவருவதோ எக்காரணத்தைக் கொண்டும்
இச்சட்டம் அனுமதிக்க கூடாது.

பாலியல் வன்கொடுமைக்கு எதிரான நிலுவையில் இருக்கும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகளும் உடனடியாக விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட வேண்டும்.


பெண்குழந்தைகளுக்கு சுயபாதுகாப்பு பயிற்சி அளிப்பதை ஒவ்வொரு
வகுப்பிலும் கட்டாயமாக்க வேண்டும்.

பாலினம் சார்ந்த படிப்புகள் அனைத்து கல்வி பாடத்திட்டங்களிலும் கட்டாயப் பாடமாக்கப்படுவதுடன் பெண்ணை அணுகுவது பழகுவது குறித்த அடிப்படைக்\
கல்வியை ஒவ்வொரு ஆண் குழந்தைக்கும் கற்றுக்கொடுக்கும் வகையில்
நம் பாடத்திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும்.


ஓட்டு அரசியல் காரணமாக அரசியல் கட்சிகள் சட்டங்களைப் புறக்கணித்து
கட்டைப்பஞ்சாயத்து சட்டங்களை மவுனமாக கண்டும் காணாமல் இருக்கும்
போக்கும் சாதியமும் பெண்ணடிமைத்தனமும் ஊறிப்போன இந்திய சமூகத்தில்
பாலியல் குற்றவாளிகளுக்கு பெரும் கவசமாக இருக்கின்றன.
அதிகாரம், பதவி பணபலம் சாதியம் என்று எந்த சக்தியாலும் அசைக்கமுடியாத நீதியைப் பெண்களுக்கு வழங்குவதன் மூலம்
மக்களாட்சியும் மனித உரிமையும் ஒளிரும்.
நடு இரவிலும் பெண் ஒருத்தி இந்தியாவில் எங்கும் தனியாகப் பயணம்
செய்யும் உரிமையை அனுபவிக்கும் வரை நம் சுதந்திரம் ஒரு கேள்விக்குறி.
நம் சட்டம் ஒரு இருட்டறை.

மக்களுக்கான மக்கள் பாதுகாப்புக்கான மக்கள் நல அரசு வேண்டிய பயணத்தில் எங்கள் கோரிக்கைகளைக் கவனத்தில் எடுத்துக் கொள்வீர்கள்
என்று நம்புகிறோம்.



Thursday, December 27, 2012

பாலியல் வன்புணர்வு தேசமும் கள்ளமவுனமும்




கடந்த வாரம், டிசம்பர் 16 இரவு ஓடும் பஸ்ஸில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவரை 6 பேர் பாலியல் வன்புணர்ச்சி செய்த‌ சம்பவம் நேற்றுவரை இந்தியாவின் தலைநகரை உலுக்கி எடுத்துவிட்டது. மாணவர்களின் போராட்டம் உச்சத்தை எட்டி இருப்பது ஒருவகையில் நம்பிக்கை தருகிறது. மாணவர்கள் இந்தியா கேட்டுக்கு செல்வதைத் தடுக்க 9 மெட்ரோ ரயில் நிலையங்களை மூடும் நிலை உருவாகி இருப்பதுடன் பிரதமர் நாற்காலியில் இருக்கும் மன்மோகன்சிங்கும், பிரதமராக அதிகாரம் படைத்த சோனியா காந்தியும் கலந்து பேசி என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். என்ன வழக்கம் போல.... ஆட்சியாளர்களுக்கே உரிய ஆயுதத்தை எடுப்பார்கள்.
தனியாக ஒரு கமிஷன் போட்டு ஆராயப் போவதாக அறிவிப்பார்கள். ஏதாவது ரிடையர்டான... இவர்களுக்கு வேண்டிய கனம் நீதிபதிகள் யாருக்காவது அந்தப் பதவியைக் கொடுத்து விடுவார்கள்.
கமிஷன், இந்தியா ஏன் பாலியல் வன்புணர்வுகளின் தேசமானது என்பதையும் பாரதமாதாவின் பாலியல் வன்புணர்வு புத்திரர்களின் (இவ்விடத்தில் பாரதமாதாவைக் பாலியல் வன்புணர்ச்சி செய்த‌ புத்திரர்கள் என்று வாசிக்கும் உரிமை வாசகர்களுக்கு உண்டு) தகுதி திறமைகளையும் ஆராய்ந்து சில நூறு பக்கங்களுக்கு அறிக்கைத் தயாரித்துக் கொடுக்கும். அப்புறம் அந்த அறிக்கை என்னவாகும் என்பதோ, யாரிடம் அந்த அறிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறதோ என்பதோ அந்த அறிக்கை மீது என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன் என்பதோ சிதம்பர ரகசியமாகிவிடும். மறந்துவிடும். ஏனெனில் ஆறிப்போன அறிக்கையை விட சுடச்சுட அவ்வ‌ப்போது விற்கப்படும் சுண்டலை வாங்கித் தனியாகவோ கூட்டமாகவோ கொறித்துக் கொள்வ‌துதான் ந‌ம்ம‌வ‌ர்க‌ளின் வாடிக்கை.
மாணவர்களின் கிளர்ச்சி ஒரு பக்கம் என்றால் நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று ஒட்டுமொத்தமாக சொல்லி விட்டார்கள்.
2004ல் தன் சகோதரியைக் கேலி செய்த வாலிபனைத் தட்டிக்கேட்ட மராட்டிய மாநிலம் புல்தானா பகுதியைச் சார்ந்த நிதின் ஜோஷி என்ற சிறுவன் குத்தி கொலை செய்யப்பட்டான். அந்த வழக்குக்கு இப்போது நீதி வழங்கிய மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் "பெண்களுக்கு எதிரான கடுமையான குற்றங்களில் மரண தண்டனை விதிக்கலாம்" என்று சொல்லி இருக்கிறார்கள்.
மருத்துவக் கல்லூரி மாணவியைக் பாலியல் வன்புணர்ச்சி செய்த‌வர்களைப் பற்றிய குறிப்புகளும் ஏற்கனவே டில்லியில் பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பட்டியலும் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியவைகளாக இருக்கின்றன.
மருத்துவக்கல்லூரி மாணவி வழக்கில் குற்றவாளிகள்:
1)ராம்சிங் - வயது 33, செக்டர் 3, ரவிதாஸ் கேம்ப், ஆர்.கே.புரம் பகுதியில் வசிப்பவர்
2)முகேஷ் - வயது 24, ராம்சிங்கின் தம்பி, மற்றவர்கள் அப்பெண்ணைக் பாலியல் வன்புணர்ச்சி செய்த‌ போது பேருந்தை ஓட்டியவர்.
3)வினய் சர்மா - வயது 20, லோக்கல் ஏரியாவில் (ஜிம்)உடற்பயிற்சி நிலையத்தின் உதவி டைரக்டர்
4)பவன் குப்தா - வயது 18, பழவியாபாரி
5)அக்‌ஷய் தாக்கூர் - வயது 26 பஸ் க்ளீனர்
6)ராஜ்ஜூ - வயது 25 பஸ் க்ளீனர்
உள்துறை அமைச்சரின் தகவல் படி இந்தியாவில் பாலியல் வன்புணர்வு குற்றங்களின் பட்டியல்:

2011
2010
2009
டில்லி
453
550
491
மும்பை
221
194
182
பெங்களூரு
97
65
65
கொல்கத்தா
46
32
42
சென்னை
76
47
39
ஹைதராபாத்
59
47
47
சில வழக்குகளின் முடிவுகள்:

எஸ்.பி.ஏஸ் ராத்தோரின் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை.
மாடலிங் ஜெஸ்ஸிக்கா கொலைக்குற்றத்தில் கைது செய்யப்பட்ட மன்னுசர்மா காங்கிரசு அரசியல் கட்சியைச் சார்ந்த விநோத் சர்மாவின் மகன். குற்றத்திலிருந்து எவ்விதத்திலும் தப்பிக்க முடியாத நிலையில் சட்டம் மன்னுசர்மாவைக் கைது செய்தது. 2009ல் 30 நாட்கள் மட்டுமே சிறையிலிருந்த சர்மா நோய்வாய்ப்பட்டிருக்கும் தன் அன்னையைப் பார்க்க பரோலில் வந்தார். அப்போது சர்மாவின் அன்னை ஒரு பொதுநிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார் என்பது நமக்குத் தேவையில்லாத செய்தி தான்! பரோலில் வந்த சர்மா டில்லியின் இரவு நேர விடுதி கேளிக்கையில் ஜாலியாக இருக்கிறார். இதுதான் நம் சட்டமும் நீதியும்.
பாலிவுட்டின் பிரபல நடிகர் சல்மான்கான், செப் 28, 2002ல் தன் டோயோட்டா காரில் வேகமாக வந்து மும்பை பாந்திரா பகுதியிலிருக்கும் பேக்கரியில் மோதி ஒருவர் அந்த இடத்திலேயே இறந்தார், நான்கு பேர் காயமடைந்தார்கள். இந்த வழக்கும் இன்றுவரை அதாவது பத்து வருடங்களுக்கு மேலாக நடந்து கொண்டிருக்கிறது! கோர்ட்டில் ஆஜார் ஆகாமல் இதுவரை 82 தடவை தட்டிக் கழித்திருக்கும் சல்மான் இந்த வழக்குகள் எல்லாம் முடிவுக்கு வந்த பின் தான் தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக திருவாய் மலர்ந்திருக்கிறார். அதுவும் அவரைக் கனவிலும் கண்டு ஏங்கிக்கொண்டிருக்கும் இளசுகளுக்கு முக்கியமான செய்தியாகவே இருக்கிறது.
இன்று நாடாளுமன்றத்தில் கண்ணீர் விட்டு அழும் எம்.பிகளும் சரி, ஆவேசமாக குற்றவாளிகளைத் தூக்கிலிட வேண்டும் என்று கர்ஜிக்கும் கிழட்டு சிங்கங்களும் சரி, இவர்கள் எல்லாம் நாடாளுமன்றத்திற்கு வர கதவுகளைத் திறந்துவிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் சரி... எவ்வளவு போலித்தனமானவர்கள் என்பதை 2009 நாடாளுமன்ற தேர்தல் உறுப்பினர்களின் தகுதிகள் நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டுவதை பார்க்கத் தவறியதுடன், இருட்டை வெளிச்சம் என்று பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
மன்மோகன்சிங்கின் அமைச்சரவையில் 15 அமைச்சர்கள் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. தேசிய தேர்தல் கண்காணிப்பு (national election watச்ஹ்) புள்ளிவிவரங்களின்படி, பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் 6 பேர் அரசியல் கட்சிகளால் தங்கள் உறுப்பினராக தேர்தல் களத்தில் நிறுத்தப்பட்டார்கள். கடந்த ஐந்து வருடங்களில் மட்டும் பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 27 பேருக்கு அரசியல் கட்சிகள் சீட் கொடுத்திருப்பதும் உண்மை.
260 உறுப்பினர்கள் மீது பெண்கள் சம்பந்தப்பட்ட வன்கொடுமை, கேலி கிண்டல் இத்தியாதி குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இக்குற்றச்சாட்டுகள் அனைத்தும் உறுப்பினர்களே தங்கள் விண்ணப்ப படிவத்தில் குறிப்பிட்டு பதிவு செய்திருக்கும் தனிச்சிறப்பு வாய்ந்த தகுதிகள்! இந்த தகுதிகளைக் கொண்ட உறுப்பினர்கள் இருக்கும் நாடாளுமன்றம் நம் பாதுகாப்புக்கான சட்டங்களை நிறைவேற்றுவதும், நம்மைப் பாதுகாப்பதாக உறுதி அளிப்பதும் கேலிக்கூத்து!
காவல்துறை:
என்ன செய்கிறது நம் காவல்துறை? மேற்சொன்ன தகுதி மிக்க நம் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பதற்காகவே இருக்கிறது நம் காவல்துறை! டில்லியில் மட்டும் வி.ஐ.பிகள் பாதுகாப்புக்கு 50059 போலீசார். 28298 போலீசார் மட்டுமே சட்டப்படி பாதுகாப்புக்கு அனுமதிக்கப்பட வேண்டிய நிலையில் சட்டத்தை மீறி (காவல்துறையே சட்டத்தை மீறி இருப்பதைக் கவனிக்கவும்) 21761 போலீசார் கூடுதலாக வி.ஐ.பி பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பொதுமக்கள் நலன் பாதுகாக்க 131 பொதுமக்களுக்கு ஒரு போலீசார் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் 761 நபருக்கு ஒரு போலீசார் இருக்கிறார் என்பதே உண்மை நிலவரம்! டில்லி நகரத்தில் மட்டும் ஒரு வி.ஐ.பிக்கு 20 போலீசார் பாதுகாப்புக்கு இருக்கிறார்கள்.
பாலியல் வன்புணர்வு வழக்குகளில் சில வழக்குகள் மட்டுமே ஊடகத்தின் அதிலும் குறிப்பாக தொலைக்காட்சிகளின் அதீதமான கவனத்திற்கு உள்ளாவதும் பல வழக்குகள் இருட்டடிக்கப்படுவதும் ஊடகங்களும் கள்ளமவுனம் சாதிப்பதும் ஏன்? இதன் உள்ளரசியல் என்ன? வாச்சாத்தி வழக்கும் கயர்லாஞ்சி வழக்கும் சாதிச்சண்டையாக மட்டுமே ஏன் பேசப்பட்டன? அந்த உழைக்கும் பெண்களின் மீது நிகழ்த்தப்பட்ட வல்லாங்கு கொடுமைக்காக, அந்தப் பெண்களின் யோனி கிழிந்து நாற்றமடித்த போதும் வாய்திறக்கவில்லைpயே நம் அறிவுஜீவிகள் ..!!.
இன்றைய போராட்டத்தையோ கிளர்ச்சியையோ குறை சொல்வதோ அல்லது டிசம்பர் 16ல் வல்லாங்கு செய்யப்பட்ட பெண்ணுக்காகப் போராடுவது தவறு என்றோ சொல்வது என் நோக்கமல்ல. ஆனால் வாச்சாத்தி பெண்களுக்காக பெண்ணியம் பேசிக்கொண்டிருக்கும் என் இனிய தமிழ் நாட்டு தோழியர் கூட எவரும் வாய்திறந்ததாகவோ வாச்சாத்தி பெண்டிரின் யோனிகள் சிதைக்கப்பட்டதற்காக தங்கள் கவிதைகளைக் கூர்வாளாக்கியதாகவோ செய்தியாகக் கூட எதுவும் கேள்விப்படவில்லையே. இந்த மவுனங்களுக்கெல்லாம் என்ன காரணம்?
ஒட்டுமொத்த ஊடகமும் ஒரு புள்ளியில் தன் கவனத்தைக் கொண்டுவரும் போது அரசியல் கட்சிகளும் அதை வழிமொழிந்து செல்லும் போது இந்த நாட்டின் திரை மறைவில் வேறு என்னவோ நடக்கிறதா? அந்த திரை மறைவு காட்சிகள் மீது எவர் கவனமும் வராமலிருக்க 453 பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுகள் நடந்திருக்கும் டில்லியில் திடீரென ஒரு குற்றச்சாட்டு ஊடகத்தின் கவனத்திற்கு திட்டமிட்டே காட்டப்பட்டு தொடர்ந்து நாம் ஏமாற்றப்படுகின்றோமா?

நன்றி: கீற்று டாட் காம்