Friday, March 1, 2013

நேற்று அவர்கள் அறிவித்தார்கள்..



நேற்று அவர்கள் அறிவித்தார்கள்
--------------------------------------------------------------அர்ஜூன் காம்ப்ளே

சொர்க்கத்து மலர்களை முகர்ந்து பார்ப்பதில்
மும்முரமாக இருந்தோம் நாங்கள்
அவர்கள் வந்து எங்கள் பாதங்களை
பூமிக்கடியில் புதைத்தார்கள்
மலரின் மணங்களைக் களவாடிச் சென்றார்கள்
மாளிகை எழுப்பினார்கள்:

மழைப் பொழிந்த போது
தூய்மையான தண்ணீரைப் பருகினார்கள்
புதையுண்ட எங்கள் பாதங்களிலிருந்து
பூதியபூமி மேலெழுந்தது.
அதேபூமியில்
பல்வேறு வண்ணங்களில்
பலதரப்பட்ட மலர்களைப் பயிரிட்டார்கள்
பல்வேறு பரிசோதனைகளைச் செய்தார்கள்
மலர்களைப் பறிக்கும்போது
எங்கள் கால்களை அழுத்தி மிதித்தார்கள்
தெரிந்தோ தெரியாமலோ

அதன்பின் அவர்கள் ஒரேவண்ணத்தை
மலர்களில் ஒட்டினார்கள்
அதே மலர்களால் தங்கள் தேர்களை அலங்கரித்தார்கள்
அதே மலர்களால் தங்கள் போர்களைக் கொண்டாடினார்கள்

சிலகாலம் மழைவரவில்லை
தேர்கூட சிறைக்கூடத்தில்'
சவச்சீலைகள் கூட தென்படவில்லை
அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள்
அவர்களின் தலைவர்
எங்கள் கல்லறையைத் தோண்டினார்
அதன்பின் அவர்கள் முடிவுசெய்தார்கள்
கள்ளிச்செடிகளை பயிரிடுவதென்று.
நேற்று அவர்கள் அறிவித்தார்கள்
கள்ளிச்செடிகளைப் பிடுங்கி எறிவதாக
நேற்று அவர்கள் அறிவித்தார்கள்
எங்கள் பாதங்களை விடுவிப்பதாக'
நேற்று அவர்கள் அறிவித்தார்கள்
நாங்கள் பருகுவதற்கு சிறுதுளி தண்ணீர் தருவதென.


(மராத்தி கவிதையின் தமிழ் மொழியாக்கம்: புதியமாதவி
உதவி: அர்ஜூன் டாங்க்ளே)

No comments:

Post a Comment