Sunday, May 11, 2025

சத்திய மேவ ஜெயதே



பொய்களின் இழைகள்

ஊடும் பாவுமாக

நெய்த வாழ்க்கை!

பளிச்சென மின்னிய

காமிரா கண்களில்

அனாதையான அசல்.

குப்பைத்தொட்டியில்

கருக்கலைப்பு வாசனை.


கோடையிலும் மழை வரலாம்.

தலைகுனியுமோ விசும்பு?

சிறுதுளி நெருப்பு

அக்னிப் பிரவேசம்

தலைகுனியும் சீதைகள்.

துரோகத்தின் கருகிய வாசனை.

ஆரம்பமாகிறது

உண்மையின் நிர்வாணம்.

அதிபயங்கர விசுவரூபம்.


சத்ய மேவ ஜெயதே.


#புதியமாதவி_12052025

#PuthiymaadhaviPoems 

1 comment:

  1. வார்த்தைகள் ஒவ்வொன்றும் நம்பிக்கையை விதைத்து,துரோகம் தன்னை அறுவடை செய்த ஏமாற்றத்தின் வலியின் புரிதலின் நிதர்சனம்,தங்களது எழுத்தின் வலிமை நூறு கசையடிகளுக்கு சற்றும் இளைத்தது அல்ல என்பதின் நிஜம் . வாழ்க நீவிர்!🙏

    ReplyDelete