எங்களுக்கு இவருதான் ராபின் குட். எங்களோட ரியல் அமர் அக்பர் அந்தோணி!
தென்மாவட்டங்களில் செம்புலிங்கத்தை அறியாதவர்கள் இருக்கவே முடியாது. எங்கள் பாட்டிகளின் கதைகளில் அவன்தான் எங்கள் ' ராபின் குட்'
பிற்காலத்தில் நம்ம வாத்தியார் நடித்த மலைக்கள்ளன் சினிமாவில் நாங்கள் கண்டதெல்லாம் எங்க செம்புலிங்கத்தைத்தான்.
வண்டி மாடு வைத்திருப்பவர்கள்
கூண்டு வண்டி வைத்திருப்பவர்கள் இவர்களிடம் எல்லாம் செம்புலிங்கத்தைச் சந்தித்ததாக ஒரு கதை இருக்கும்.
21 அடி கிணற்றைத் தாண்டியவன். தாண்டும் போது , நடுக் கிணற்றில், சட்டெனக் கிணற்றுக் குருவி ஒன்று உள்ளிருந்து மேலே பறந்ததைக் கண்ணுற்ற செம்புலிங்கம் அதையும் கையில் பிடித்த படியே பாய்ந்து கிணற்றைக் கடந்து ஒன்றரையடி தூரத்தில் வெளியே குதித்து நின்றானாம்!
இப்படியாக மலைக்கள்ளன் மக்கள் கதாநாயகன் போல செம்பு லிங்கமும் ஒரு கதாநாயக பிம்பமாக எங்கள் பாட்டி தாத்தா கதைகளில் வலம் வந்தும் கொண்டிருந்தான்.
செம்புலிங்கம் ஒரு ஹிந்து. அவன் இரு இணைபிரியாத நண்பர்கள் காசியும் துரையும். காசி ஒரு கிறிஸ்தவன். துரைவாப்பா ஒரு முஸ்லிம். 💥
எங்களோட அமர் அக்பர் ஆண்டனி இவுங்க தான். மலைக்கள்ளனுமா இவருதான். ராபின் குட் ரேஞ்சுக்கு இவருக்கு எங்க ஊரு பெரிசுக ஒரு பிம்பத்தை தங்கள் கதைகளில் சொன்னார்கள். 🙂
அருமை!
ReplyDelete