Friday, July 29, 2022

ராக்கெட் அரசியல்

 

மாதவனிடம் சூர்யா மன்னிப்பு கேட்கும் காட்சி..
மனசில் நிற்கிறது.
மாதவனாக VIKAS ENGINE ISRO SCIENTIST நம்பி நாராயணன்.
சூர்யாவாக இந்தியச் சமூகம்.
ராக்கெட் ரகசியங்கள் இப்போதும் வெளியில் பேசப்படுவதில்லை.
 பேசப்படும் அனைத்தும் இன்னொரு பக்கத்தை வாசிப்பதில்லை.
இருந்தாலும் கூர்ந்து கவனித்தால் 
அண்மைக் காலங்களில் நடந்து முடிந்த சர்வதேச 
அரசியல் நிகழ்வுகளை பார்க்கும் பார்வைக்கு மாறாக
இந்தியக் காவல்துறை, சிபிஐ , ISRO
எல்லாருமே தேசத்துரோகி அளவுக்கு காட்டப்படுகிறார்கள்.!!!
உண்மையில் இது ரொம்பவும் அச்சமூட்டுகிறது.
அதையும்விட இதில் இருக்கும் நுண் அரசியல்
கவனிக்கத்தக்கது. 
 
நம்பி நாராயணன் வழக்கில் யார் குற்றவாளி என்பதும்
அது நடந்தக் காலக்கட்டமும் அவ்வளவு எளிதில்
திரைப்பட காட்சிகளின் ஊடாக மறந்துவிடுகிற மாதிரி
இல்லை!
அப்துல்கலாம் எழுதிய புத்தகங்களில் 
நம்பி நாராயணன் இல்லை.
இது வழக்கம்போல பிரச்சனைகளிலிருந்து
 தப்பித்துக்கொள்ளும் கலாமின் இயல்பாக இருக்கலாம். 
இருக்கட்டும்.
 
VIKAS ENGINE பெயர் VIKRAM SARABAI என்பதை இத்திரைப்படம் மறைக்கவில்லை. அதற்காக நன்றி சொல்ல வேண்டும்.
 
விக்ரம் சாராபாய் திடீர் மரணத்தை
31 டிசம்பர் 1971 பத்திரிகை செய்தி கூறுகிறது. பலர் அதையும்
 விமான விபத்து என்று நம்பினார்கள். அவர் உடல் எவ்விதமான பரிசோதனைக்குட்படுத்தப்படவில்லை .அவர் உடல் 
அவர் பயணித்த அதே விமானத்தில் கொண்டுவரப்பட்ட 
அதிசயத்தை யாருமே கண்டு கொள்ளவில்லை. பிரபல பத்திரிகை
டைம்ஸ் ஆஃப் இந்தியா எழுதிய பிறகும் இதெல்லாம் சாமானியர்களுக்கானதல்ல என்பதாலும் அரசியலுக்கு 
உதவாது என்பதாலும் கைவிடப்பட்டிருக்கின்றன. !
ஒரு சாமானியனாக நாம் கவனிக்க வேண்டியது
 இந்திய பிரதமர் பண்டித் நேருஜியின் 
நம்பிக்கைக்குரிய நெருங்கிய நண்பர்களாக 
இருந்தவர்கள் ஹோமிபாபாவும் விக்ரம் சாராபாயும். 
இருவரும் ராக்கெட் மற்றும் அணு ஆராய்ச்சியுடன் தொடர்புடையவர்கள்.இருவரின் மரணமும் மர்மங்கள் 
நிறைந்தவையாக இருக்கின்றன.
இனி, இந்தப் புள்ளியிலிருந்து நம்பி நாராயணன் வழக்கில்
 நம்பி நாராயணன் நிரபாராதி என்றால்
யார் குற்றவாளி?
அல்லது அந்த சர்வதேச குற்றவாளி கூட்டத்திற்கு 
துணைபோன கறுப்பு ஆடு எங்கே?
 
சரவணா..
இப்படியான கேள்விகளை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு
நம்பி நாராயணன் ராக்கெட்டை நாமும் ரசிக்கலாம்.
சூர்யாவுடன் சேர்ந்து மன்னிப்பும் கேட்கலாம்.
அதனாலென்ன?
அதிகாரம் எந்த ரூபத்தில் வந்தாலும் 
பாதிக்கப்பட்டவர் பக்கமிருப்பது தான் தார்மீகம்,


 

No comments:

Post a Comment