Thursday, July 16, 2020

உம்மாவோட முகம் -

உம்மாவோட முகம்” - இன்குலாப்


”இப்போது எழுதும் போது திருத்தமாக எழுத முயற்சி செய்கிறேன். 
ஆனால் இது ரொம்பவும் செயற்கை என்று தெரிகிறது. 
அம்மாவை நான் ஒரு போதும் அம்மா என்று கூப்பிட்டதில்லை. 
உம்மாதான் எனக்குப் பழக்கப்பட்ட சொல்.
இப்பொழுது அம்மா என்று எழுதுகிறேன்.
எங்கோ இருக்கும் என் வயசான உம்மாவைப்பற்றி 
எழுதும் போதுதான் நான் எவ்வளவோ செயற்கையாக 
மாறிப் போய் விட்டேன் என்பது தெரிகிறது.
இந்த எழுத்துகள் என் தாய்மொழியில்லை. 
என் தாய்மொழி ரொம்ப ரொம்ப இயற்கையானது. 
அதை நான் மறந்து விட்டேன்…. 
பள்ளியில் படிக்கும்போது கொஞ்சம் மறந்தேன். 
கல்லூரியில் படிக்கும்போது இன்னும் கொஞ்சம் மறந்தேன்.
இப்பொழுது தமிழ் கற்பித்துப் பெரும்பாலும் மறந்துபோய் விட்டேன். –
என் உம்மாவைப் பத்தி எழுதும்போது 
உம்மா எனக்குச் சொல்லித்தந்த சொல்லுலேதான் சொல்லணும். 
அதுதான் நான் அவுங்களுக்குச் செய்யும் மரியாதை. 
வேறெ எந்த மரியாதையையும் நான் இது வரைக்கும் 
செய்யலை. அவுங்களும் இதுவரைக்கும் எதையும் எதிர்பார்க்கலே.
. இந்த எழுத்துதான் நான் சாம்பாதிச்சுக் கொடுக்கறது. 
அதைத்தான் அவுங்களும் விரும்புனாங்க. 
அதத்தான் சொல்லத் தொடங்குறேன். 
இனி அவுங்க சொல்லித்தந்த சொல்லுலேயே சொல்லுறேன்.
"30 ஆண்டுகாலம் ‘நல்ல’ தமிழில் கவிதைகள் எழுதிய
இன்குலாப் அவிழ்த்துவிடப் பட்ட கன்றுக்குட்டி தாய்மடியை நோக்கிக் கதறிக்கொண்டு ஓடுவதைப்போலச் சிறுகதைகளில்
தன் ‘தாய்மொழி’க்குத் தாவி ஓடியிருக்கிறார் எனலாமா? "
என்ற கேள்வியை முன்வைக்கிறார் ச.தமிழ்ச்செல்வன்.
*
இங்கு இவர்கள் பேசும் தாய்மொழி 
யாருக்கெல்லாம் இருக்கிறது? இதன் காரணிகள் என்ன?
எனக்கு இருக்கிறதா? என்றால் இல்லை என்றுதான்
சொல்லவேண்டி இருக்கிறது.
என் வழக்காட்டில் இருக்கும் மொழியை எழுதும் போது
"அச்சா"
"சுக்ரியா"
நமஸ்தேஜி
க்யா..
ஸாலா..
அன்ணா..
மோரி
நல்லி
சால்
செண்டாஷ்
டப்பா
மெளசி
என்று கலப்பாகிவிடுகிறது.
அச்சுத்தமிழ் பாதிக்காத தாய்மொழியை ஊடகத்தமிழ்
பாதித்திருக்கிறது..
எனக்கு தாமிரபரணி தாய்மொழி இல்லை.
மும்பை மா நகரம் என் தாய்மொழியை என்னிடமிருந்து 
துண்டித்துவிட்டது.
"ஏல, த்தாயி, அங்கன வச்சி,
இங்கன வச்சி,
இப்படியாக அவ்வப்போது தாய்மடியின் சில
ஒளிக்கீற்றுகள் எட்டிப்பார்க்கின்றன.
அவ்வளவுதான்.

No comments:

Post a Comment