Wednesday, July 15, 2020

ஜெயமோகனும் வைரமுத்துவும்..



(1)
"கவிதையும் கலையும் கட்டற்ற பாலியல் சுதந்திரத்தைக் 
கொடுத்திருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். தனி மனித 
ஒழுக்கம் என்பதிலிருந்து அவர்கள் விதிவிலக்கானவர்கள் என்று தமிழ்ச்சமூகத்தின் பொதுப்புத்தியில் பதிந்து இருக்கிறது. 
அதனால்தான் எழுதுகிறவன் எழுத்தை மட்டும் பார்க்கச் 
சொல்கிறார்கள். அவன் செய்வதை சுலபமாக மறந்து 
விடுகிறார்கள். ஆனால் எழுத்தும் எழுதுபவனும் சேர்த்து 
வாசிக்கப்பட வேண்டியவர்கள். என்ன சொன்னார் 
என்பதோடு சேர்த்து அதை சொன்னது யார் என்ற 
அரசியல் கவனிக்கப்பட வேண்டியதாகிறது. 
வைரமுத்துவிற்கு ஆறுதல் சொன்னவர்கள் 
ஏன் மவுனம் காக்கிறார்கள்? இதை எழுதும் போது 
எனக்குள் இன்னொரு கேள்வியும் எழுகிறது... 
வாச்சாத்தி பெண்களுக்காக கலை இலக்கிய உலகப் 
பெண்கள் ஏன் பேசவில்லை? 
இப்படி கேட்பது கூட பலருக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது 
ஆனால் கேட்காமல் கடந்துசெல்ல இந்த தருணத்திலும் முடியவில்லை. இக்கேள்வியை முன்வைப்பது வைரமுத்து 
எதிரலையைப் பலவீனப்படுத்த அல்ல." - புதியமாதவி
இரு தினங்களுக்கு முன் தோழி மீராமீனாட்சி 
Meera Meenakshi அவர்கள் கவிஞர் வைரமுத்து குறித்து முக நூலில்
பதிவு போட்டிருந்தார். அவர்மீதுவைக்கப்பட்டிருந்த 
பாலியல் குற்றச்சாட்டு குறித்த கண்டனமாகவும்
அத்தருணத்தில் அவர் எழுதிய் டுவிட்டர் பதிவுகளை 
இணைத்தும் வெளியிட்டிருந்தார். 
அதற்குப் பின்னூட்டமாக நான் எழுதியதுதான் மேற்கண்ட வரிகள்.
(2)
இப்போது பிரச்சனைக்கு இன்னொரு தன்னிலை விளக்கம் 
கொடுத்திருக்கிறார்
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள்.
அதிலிருந்து சில் வரிகள்..:
’வைரமுத்து மீதான இக்குற்றச்சாட்டுக்கள் உண்மை என்றால்
வன்மையாக கண்டிக்கத்தக்கவை’ என்ற வெளிப்படையான கண்டனத்துடன் மேற்கொண்டு அவருடைய படைப்புலகைப் பற்றிப் பேசுவதே
நாம் செய்யக்கூடுவது. ‘வைரமுத்து தன் குற்றமின்மையை
பொதுவெளியில் அறிவிக்கவேண்டும்’ என்றுமட்டுமே நாம் அதிகபட்சம் கோரமுடியும். அதுகூட நடக்கவில்லை என்பதே சுட்டிக்காட்டப்படுகிறது. அவ்வகையிலேயே பெருந்தேவியின் கண்டனம் மதிப்பு கொண்டது.
என்னைப் பொறுத்தவரை வைரமுத்து மீதான அக்கண்டனத்துடன் 
மேலே செல்கிறேன். ஆனால் வைரமுத்து பற்றிய என் மதிப்பீடு அதன் அடிப்படையிலானது அல்ல. அதைவைத்து அவரை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதும் என் நோக்கம் அல்ல. வைரமுத்துவின் படைப்புக்கள் 
ஆளுமை குறித்த என் மதிப்பீட்டை முன்னரே விரிவாக
முன்வைத்துவிட்டேன்.
அவருடைய அப்பாலியல் குற்றங்கள் நிரூபிக்கப்படும் 
என்றால் மிக வன்மையாக அதைக் கண்டிப்பேன். 
ஆனால் அப்போதுகூட அக்கண்டனத்துடன் 
அவருடைய படைப்புக்களை இணைத்துக்கொள்ள மாட்டேன். 
அவற்றை தனியாகவே அணுகுவேன்.

(அதாவது பாலியல் குற்றச்சாட்டை வைரமுத்துவின் எழுத்துக்கு
எதிரான கண்டனமாகவோ அல்லது எதிரான குற்றச்சாட்டாகவோ
ஜெ.மோ வைக்கவில்லை என்று புரிந்து கொள்ளலாமா பெருந்தேவி?!)

(3)
இப்போதும் சில கேள்விகள் கேள்விகளாகவே தொங்கிக்கொண்டிருக்கின்றன.
இச்சமூகம் கேள்விகளைத் தின்று செரித்து ஏப்பம் விட்டுவிடும்.
அல்லது கேள்விகள் கேள்விக்கேட்டவரையோ தற்கொலைக்குத்
தள்ளிவிடும் கொடூரம் நடக்கிறது..
எது நடந்தாலும் சரி..
அமைதியாக இருப்பதும் ஒரு வரம் தான்.
எல்லோருக்கும் வாய்ப்பதில்லை அந்தக் கொடுப்பினை!

No comments:

Post a Comment